கருமலைத்தமிழாழன்:

பெயர்: கி.நரேந்திரன்

பெற்றோர்: மு.கிருட்டிணன் - இராசம்மாள்
பிறந்தநாள்: 16.07.1951
பிறந்த இடம்:
கிருட்டிணகிரி (கருமலை)
வதிவிடம்:
ஒசூர்
தொடர்புகளுக்கு:
முகவரி:
2/16/6, ஆர்.கே.இல்லம்முதல்தெரு, புதிய வசந்தநகர்,  
ஒசூர்
- 635 109, கிருட்டிணகிரி மாவட்டம்.
தொலைப்பேசி
: 04344 - 245350. 09443458550
E.mail:karumalaithamizh@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, ஆய்வு கட்டுரை

படைப்புக்கள்:

கவிதை

  • நெஞ்சின் நிழல்கள் (1976)
  • மலர்விழி (காவியம் (1978)
  • காவியத்தலைவன் (1978)
  • காற்றை மணந்த கவிதைகள் (1995)
  • நீர்க்கால்கள் (1998)
  • ஒப்பனைப்பூக்கள் (1998)
  • மண்ணும் மரபும் (1999)
  • தமிழவேள் தமிழ்ப்பாவை (1999)
  • வீணை மத்தளமாகிறது (2000)
  • மரபின் வேர்கள் (2002)
  • புதிய குறுந்தொகை (2003)
  • வேரின் விழுதுகள் (2004)
  • களம் வெல்லும் கலைஞர் (2005)
  • சுவடுகள் (2008)
  • உன்முகமாய் இரு (2010)
  • அருள்மிகு மரகதாம்பிகை
  • சந்திரசூடேசுவரர் பாமாலை (1997)
  • கல்லெழுத்து (2004 )

உரைநடை மற்றும் ஆய்வு நூல்கள்

  • புதுக்கவிதையில் தொன்மவியலாய்வு (1998)

  • பண்பில் வாடை (2001)

  • திருக்குறள் (உரை) (2000)

  • ஒசூர் அருள்மிகு மரகதாம்பிகை சந்திர  சூடேசுவரர் திருக்கோயில் தலவரலாறு (2001)

சிறப்பு

  • தமிழ்நாடு பாடநூல்களில் செய்யுட் பகுதியில் கவிதை பாடமாக சேர்க்கப்பட்டது.
  • ) வீணை மத்தளமாகிறது.
    (ஆ) வேரின் விழுதுகள் - ஆகிய நூல்கள் எம்/பில் பட்டத்திற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட, ஆய்வுபட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கவிதைகள் வெளிவந்த ஏடுகள்:

  •  குயில், காஞ்சி, கண்ணதாசன், தமிழ்ப்பணி, முல்லைச்சரம்,  புன்னகை,   காவியப்பாவ,  தெசிணியின், கவிதை தமிழரச, அமுதசுரபி,தென்மொழி  தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ், ஓம்சக்தி, செந்தமிழ்ச் செல்வி, கணையாழி , இனிய உதயம், கவிக்குயில் , காக்கைச்சிறகினிலே, எழுகதிர்,     இலக்கியச்சோலை,,ராணி , தேமதுரத் தமிழோசை, தினத்தந்தி  , தமிழ் இலெமுரியா, தினகரன்  , தினமணி, தினமலர்    மாலைமுரசு, மாலைமலர்  முரசொலி போன்ற 50திற்கும் மேற்பட்ட நாள், வார, மாத ஏடுகளில் 1969 முதல் இன்றுவரை ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்துள்ளன.

விருதுகள்

  • சென்னை பாவேந்தர் பாசறையால் 2002ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் விருது அளிக்கப்பட்டது.

  • ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையும் 'துளி' இதழும் இணைந்து 2003ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து ஒட்டக்கூத்தர் விருது அளித்தன.

  • சென்னை கவிதை உறவு அமைப்பு 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து கவிதைச்செல்வர் விருது அளித்தது.

  • தமிழறிஞர் இலக்குவனார் நூற்றாண்டு விழாவை ஒட்டி நூற்றாண்டு விழா குழுவினரால் 2010 இல் இலக்குவனார் விருது அளிக்கப்பட்டது.

  • உலகத் தமிழ்க்கவிஞர் பேரவையும், தஞ்சை தாய் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய எழுத்தாளர் மாநாட்டில் 2011இல் குன்றக்குடி அடிகளார் அவர்களால் தமிழ்மாமணி விருது வழங்கப்பட்டது.

  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தாரால் 2010ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொற்கிழியும், விருதும் வழங்கப்பட்டது.

  • உரத்தசிந்தனை திங்களிதழ் சிறந்த வெண்பாக்கள் எழுதியமைக்காக 2012ஆம் ஆண்டு வெண்பாவேந்தர் விருது அளித்தது.

  • டாக்டர் ஜே.ஜி.கண்ணப்பன் வாசுகி அறக்கட்டளை சார்பில் 2012ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கவிதைக் கருவூலம் விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

  • தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம் 2012ஆம் ஆண்டில் பாவேந்தர் நெறி செம்மல் விருது வழங்கியது.

  • தங்கவயல் டாக்டர் பேரா.வ.பெருமாள் அறக்கட்டளையால் 2005இல் தமிழ் இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டது கரூர் திரு.வி.க.மன்றம் சார்பில் 1992இல் இலக்கியச்செம்மல் விருது வழங்கப்பட்டது.

  • சேலம் கே.ஆர்.ஜி.நாகப்பன் - இராசம்மாள் அறக்கட்டளையின் இலக்கியக்குழு 2003இல் மரபுப்பா பாவலர் விருது அளித்து சிறப்பித்தது.

  • அனைத்துலகத் தமிழ் மாமன்றம் திண்டுக்கல் சிறந்த இலக்கியப்பணிக்காக 2005ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் விருது வழங்கி சிறப்பு செய்தது.

  • சேலம் 'சங்கொலி' இதழ் ஆசிரியர் சோலை இருசனாரின் மணிவிழா குழுவினரால் 'தேன்மழைக்கவிஞர்' விருது வழங்கப்பட்டது.

  • 2008-2009ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் இராதாகிருட்டிணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

நூல்கள் பெற்ற பரிசுகள் :

  • பாரதஸ்டேட் வங்கி 2000 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வீணை மத்தளமாகிறது நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.
  • பாரத ஸ்டேட் வங்கி 2002 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக மரபின் வேர்கள் நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.
  • சென்னை பகுத்தறிவாளர் கழகமும், மெய்யறிவு இதழும் இணைந்து 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வேரின் விழுதுகள் நூலைத் தேர்ந்தெடுத்து முதல் பரிசு வழங்கின.
  • அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வேரின் விழுதுகள் நூலைத் தேர்ந்தெடுத்து முதல்பரிசு வழங்கியது.

கவிதைப்போட்டிகளில் பெற்ற பரிசுகள்:

  • மதுரை காந்தி நிறுவனம் கஸ்தூரிபாய் காந்தி நூற்றாண்டு விழாவை ஒட்டி 'வருமோ புதிய உலகு' என்ற தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.

  • பெரம்பலூர் பாவேந்தர் இலக்கியப்பேரவை 'புதிய சமுதாயம் படைப்போம்' தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.

  • ஈரோடு தமிழ்ப் பேரவையும, துளி இதழும் இணைந்து நடத்திய 'தமிழ் ஒளி ஓங்கும்' தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.

  • தினகரன் நாளிதழ் நடத்திய தொழில்மலர் கவிதைப்போட்டியில் முதல் பரிசு.

  • தமிழ் படைப்பாளர்கள் சங்கம் 2013இல் 'பொசுங்கட்டும் பொய்மை' தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.

  • கவிஞர் செந்தமிழ்ச் செழியன் அறக்கட்டளை 'மயக்கத்தில் தமிழன்' என்ற தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.

  • பெங்களுர்த் தமிழ்ச்சங்கம் 2012 பொங்கல் விழாவை ஒட்டி 'அயலகத்தமிழர்' என்ற தலைப்பில் இந்திய அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.

  • கண்ணியம் இதழ் அதன் ஆசிரியர் முனைவர் குலோத்துங்கன் அவர்களின் 70ஆம் பிறந்த நாளை ஒட்டி 'தடை தகர்த்து வாழும் தமிழ்' என்ற தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.

  • கவிக்குயில் இதழ் 'ஊழலற்ற புதிய சமுதாயம் காண' எனும் தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.

  • புதுக்கோட்டை வெண்மணிப் பதிப்பகம் 'குழந்தைத் தொழிலாளர்' தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு.

  • தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கமும், பரிவு இதழும் இணைந்து 2013இல் 'வெகுண்டெழுவோம்' தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.

  • இலண்டன் தமிழ்ச்சங்கம் உலக அளவில் 'புதுயுகத்தமிழர்' தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.

  • வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை சார்பில் இலக்கியப்பீடம் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப்பரிசு.

  • கவிக்கொண்டல், உரத்த சிந்தனை, குயில், மின்னல் தமிழ்ப்பண, தெளிதமிழ், நற்றமிழ், சோலைக்குயில், இதழ்கள் நடத்திய வெண்பா, விருத்தப்பா போட்டிகளில் பலமுறை முதல்பரிசுகள்.
     

தமிழ் வளர்ச்சிப் பணிகள் :

  • மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் உலகத் தமிழ்க்கழகம் தொடங்கிய போது தருமபுரி மாவட்ட அமைப்பாளராகத் தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்தார்.

  • தனித்தமிழ் இதழ்களை நூலகங்களில் இடம் பெறச்செய்யத் தனியாளாக நின்று போராடியபோது 1972இல் பணியாற்றிய தமிழாசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

  • தென்மொழி, காஞ்சி, குயில் போன்ற இலக்கிய இதழ்களைத் தருமபுரி நகரச் சுற்று புறங்களில் முகவராக இருந்து அறிமுகம் செய்தார்.

  • கன்னடம், தெலுங்கு மொழிகள் அதிகமாகப் பேசப்படும் ஒசூர் பகுதியில் 1985 முதல் ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்துடன் இணைந்து திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தியும் மாணவர்களுக்கு தமிழுணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இலக்கிய நிகழ்ச்சிகள் :

  • பெங்களுர், பம்பாய், ஐதராபாத், தில்லி, திருவனந்தபுரம், அந்தமான் தமிழ் சங்கங்களில் இலக்கிய சொற்பொழிவ, கவியரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.

  • மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ் அமைப்புகளின் அழைப்பில் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

  • தமிழகம் மற்றும் அயலகங்களில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.

  • பொதிகை, சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.