சண்முகசிவா.மா:

பெயர்:  மா.சண்முக சிவா
புனைபெயர்: பத்தாங்கட்டை, பத்துமலை
பிறந்த இடம்: அலோர்ஸ்டார், கெடா மாநிலம், மலேசியா –
1950
தொடர்புகளுக்கு:
முகவரி:  
8 Jalan SS 3/31,
Taman Universiti, PJ
Kuala Lumpur 47300,  Malaysia

படைப்பாற்றல்:  கவிதை, சிறுகதை, விமர்சனம், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • வீடும் விழுதுகளும் - 1998

இவர் பற்றி:

இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் டாக்டராகப் படித்துப் பட்டம் பெற்றவர். ஒரு சருமநோய் வைத்திய நிபுணர். தற்போது கோலாலம்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர்  1970 முதல் எழுதி வரும் முன்னணிச் சிறுகதையாசிரியர், புத்திலக்கிய விமர்சகர், புதுக்கவிதை சிரியர். தமிழ் நாட்டின் 'சலங்கை' இதழிலும் இவர் கதை இடம் பெற்றுள்ளது. லண்டன் பி.பி.சி. தமிழோசையில் மலேசியத் தமிழர் குறித்துக் கருத்துரைகள் ஆற்றியுள்ளார். மருத்துவம் பற்றிய இலக்கியம் கலந்த சுவையான கேள்வி-பதில் பகுதியை 'மலேசிய நண்பன்' இதழில் எழுதி வருகிறார். 'அகம்' என்னும் இலக்கிய அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர். ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புத்திலக்கியப் படைப்பு வழிகாட்டிக் கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்.