முகமது.சை.பீர்:

பெயர்: சை. பீர் முகமது
புனைபெயர்: ஞானாசிரியன்
பிறந்த இடம்: கோலாலம்பூர் மலேசியா –
1958
தொடர்புகளுக்கு:
முகவரி:
38 Jalan Selasih 19,
Taman Selasih,
68100 Batu Caves.

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை, திறனாய்வு, பயணக்கட்டுரை, புதுக்கவிதை, நகைச்சுவை நாடகம்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • வெண்மணல் 

நாவல்கள்:

  • பெண் குதிரை – 1997

பிரயாணக் கட்டுரைகள்:

  • கைதிகள் கண்ட கண்டம் - 1997
  • மண்ணும் மனிதர்களும் - 1998

தொகுப்பு நூல்கள்:

  • மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் - 2001
  • வேரும் வாழ்வும் (பாகம் 1, 2, 3) – பல்வேறு மலேசியச் சிறுகதைகளின் தொகுப்புகள் - 2001

விருதுகள்: 

  • சென்னை தாய்மண் இலக்கியக் கழகம்  - செந்தமிழ் மாமணி விருது - 1998
  • பழனி தமிழ் நாட்டுக் கவிஞர் பேரணி  - எழுத்துச் செம்மல் விருது
  • தமிழ் நாட்டுப் பாட்டாளி மக்கள் கட்சி -  தங்க விருதும் 'தமிழ்ச் செம்மல்' விருதும்
  • பாரதிதாசன் விழாக் குழுவினர் -  பணமுடிப்பு – 1996
  • பினாங்கு மணிமன்றம் – மணிச்சுடர் விருது
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கோ. சாரங்கபாணி விருது - 1984
  • டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது -   2007

இவர் பற்றி:

  • சிவப்பு விளக்கு இவரது சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் புதிய பார்வை,  கணையாழி,  கலைமகள்,  ஓம் சக்தி போன்ற இதழ்களில் இவரது கதைகள் வந்துள்ளன. மலேசியத் தமிழ்ப் புத்திலக்கியங்களைப் பதிப்பிப்பதிலும் பரப்புவதிலும் முனைப்பாக ஈடுபட்டவர். சிறந்த திறனாய்வாளர். இலக்கியப் பேச்சாளர். தமிழ் இளைஞர் மணி மன்றம் முதலிய சமுதாய இயக்கங்களில் தீவிரமாகத் தொண்டாற்றியவர். 'உதய சக்தி' என்னும் இதழின் ஆசிரியர்.