கவிஞர் பெருமாள்.கா:

பிறந்த இடம்: தமிழகம்

படைப்பாற்றல்: கவிதை, இசைப்பாடல்கள், புனைகதை

படைப்புக்கள்:

  • சிங்கப்பூர்ப் பாடல்கள் - பண்ணோடு பாடப்படும் பாடல்தொகுதி
  • சீறா இசைச் சித்திரம்
  • துங்கு அப்துல் ரகுமான் வில்லுப்பாட்டு
  • அன்பு என்னும் தத்துவம்

இவர் பற்றி:

  • இவர் 1938 இல் மலாயா வந்தார். மலாயா வானொலி, சிங்கப்பூர் வானொலி ஆகியவற்றில் பணியாற்றியவர். இவர் படைத்த கட்டைவிரல் என்னும் கவிதை நாடகம் பலரதும் பாராட்டைப் பெற்றது. 'துயரப்பாதை' இவர் எழுதிய புதினங்களில் ஒன்று. தத்துவக்கலை, கூத்துக்கலை, நாடகம் பிறந்தது, மலைநாட்டு உழைப்போர் இலக்கியம் ஆகிய ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்தவர். 'வாழ்க்கைச் சித்திரம்' என்னும் இசைச் சித்திரத்தையும் எழுதியுள்ளார்.  சங்கமணி, ஜனோபகாரி, முத்தமிழ் போன்ற இதழ்களில் உருவகக் கதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள் பல எழுதியுள்ளார்.