இன்ப
மாலை
(சங்கநூற்
காட்சிகள் –
அகநானூறு)
முகவுரை
சங்க
நூல்களில்
எட்டுத்
தொகை
என்னும்
வரிசை
யில்
ஒன்றாகிய
அகநானூறு
அகப்பொருள்
பற்றிய
நானூறு
செய்யுட்களை
உடையது.
இதனை
அகமென்றும்,
அகப்பாட்டென்றும்
சொல்வது
உண்டு.
பல
புலவர்களின்
அகத்துறைப்
பாடல்
தொகுதிகளாகிய
குறுந்
தொகை,
நற்றினை,
அகநானூறு
என்ற
மூன்றில்
அடியளவினால்
நீண்ட
பாடல்களை
உடையதாதலால்
இதற்கு
நெடுந்தொகை
என்ற
பெயரும்
வழங்கும்.
பதின்மூன்றடி
முதல்
முப்பத்தோரடி
வரையில்
அமைந்த
பாடல்கள்
இந்தத்
தொகை
நூலில்
இருக்கின்றன.
இதற்கும்
கடவுள்
வாழ்த்துப்
பாடலைப்
பெருந்தேவனார்
இயற்றிச்
சேர்த்திருக்கிறார்,
அது
அகப்பாட்டாகிய
நானூற்றில்
அடங்காதது.
அதையும்
சேர்த்தால்
அகநானூற்றின்
பாடல்
தொகை
401 ஆகும்.
இந்தத்
தொகையைத்
தொகுக்கும்படி
செய்தவன்
உக்கிரப்பெருவழுதி
என்னும்
பாண்டிய
அரசன்.
அவன்
விருப்பத்தின்
படி
இதனை
ஒழுங்குபடுத்தித்
தொகுத்தவர்
மதுரை
உப்பூரிகுடிகிழார்
மகனார்
உருத்திரசன்மர்.
இறையனாரகப்
பொருளுக்குச்
சங்கப்
புலவர்கள்
பலர்
எழுதிய
உரைகளைக்
கேட்டு
அவற்றில்
நக்கீரர்
உரை
சிறந்ததென்று
நிறுவியவர்
இவர்
என்றும்,
பிறவி
ஊமை
யென்றும்,
முருகனுடைய
அமிசம்
உடையவரென்றும்
ஒரு
வரலாறு
வழங்குகிறது.
அகநானூற்றை
மூன்று
பகுதிகளாகப்
பகுத்திருக்கிறார்கள்.
முதல்
நூற்றிருபது
பாடல்களைக்
’களிற்றியான
நிரை’
என்றும்,
அவற்றின்
பின்
உள்ள
நூற்றெண்பது
பாடல்களை
‘மணிமிடைபவளம்’
என்றும்,
கடைசியில்
உள்ள
நூறு
பாடல்களை
"நித்திலக்
கோவை”
என்றும்
பகுத்துப்
பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்தப்
பிரிவுக்குரிய
காரணம்
இன்னதென்று
தெளிவாகத்
தெரியவில்லை.
பழைய
குறிப்பொன்று,
களிற்றியான
நிரை
என்பது
பொருள்
காரணமாக
வந்ததென்றும்,
மணிமிடை
பவளம்
என்பது
செய்யுளும்
பொருளும்
ஒவ்வாமையால்
வந்த
பெயரென்றும்,
நித்திலக்கோவை
என்பது
செய்யுளும்
பொருளும்
ஒக்கும்
காரணத்தால்
வந்ததென்றும்
தெரிவிக்கின்றது.
இந்
நூலில்
உள்ள
பாடல்களைப்
பாடிய
புலவர்கள்
நூற்று
நாற்பத்தைந்து
பேர்.
இதில்
ஒற்றை
எண்களையுடைய
பாடல்கள்
யாவும்
பாலைத்
திணையில்
அமைந்தவை.
இரண்டு,
எட்டு
என்ற
எண்களைப்
பெற்றவை
யெல்லாம்
குறிஞ்சித்
திணைப்
பாடல்கள்.
நான்கு
என்ற
எண்ணுடையவை
முல்லைத்
திஔக்குரியவை.
ஆறு
என்ற
எண்ணை
உடையவை
மருதத்துக்கும்,
பத்து
என்ற
எண்னை
உடையவை
நெய்தலுக்கும்
உரியவை.
இந்த
வரையறை
இருப்பதனால்
பாட்டின்
எண்ணைக்
கொண்டே
அது
இன்ன
திணைக்
குரியது
என்று
சொல்லிவிடலாம். 391-ஆம்
பாட்டு
என்ன
திணை
யென்றல்,
அது
ஒற்றைப்படை
எண்
ஆகையால்
பாலைத்திணை
யென்று
சொல்லிவிடலாம்.
அப்படியே
296-ஆம்
பாட்டு
ஆறு
என்ற
எண்ணை
இறுதியில்
உடைமையால்
மருதத்தினைப்
பாட்டென்று
சொல்லிவிடலாம்.
இந்த
நூலில்
மிகுதியாக
உள்ளவை
பாலைத்திணைக்குரிய
பாடல்கள்;
அவை
இருநூறு.
அடுத்தபடி
குறிஞ்சிக்கு
எண்பது
பாட்டும்,
மருதத்துக்கு
நாற்பதும்,
முல்லை
நெய்தல்
என்பவற்றிற்கு
நாற்பது
நாற்பது
பாடல்களும்
இருக்கின்றன.
நீண்ட
அளவுள்ள
பாடல்களாக
இருப்பதால்
சொல்ல
வேண்டியவற்றை
விரிவாகச்
சொல்வதற்கு
இடம்
இருக்கிறது.
ஒவ்வொரு
தினைக்கும்
உரிய
முதல்
கரு
உரிப்பொருள்களை
நன்றாக
அமைத்துச்
சொல்ல
முடிகிறது.
கவிஞனுடைய
கற்பனை
படர
விரிந்த
இடம்
இருப்பதனால்
எதையும்
நன்றாகவும்
அழகாகவும்
சொல்ல
இயல்கின்றது.
இப்
புத்தகத்தில்
அகநானூற்றிலிருந்து
எடுத்த
ஐந்து
பாடல்களுக்குரிய
விளக்கம்
இருக்கிறது.
கடவுள்
வாழ்த்து
ஒன்றும்,
அகத்துறைப்
பாடல்கள்
நான்கும்
இந்தப்
புத்தகத்தில்
உள்ளன.
அந்த
நான்கில்
இரண்டு
குறிஞ்சியைச்
சார்ந்தவை;
இரண்டு
முல்லைத்
திணைக்
குரியவை.
குறிஞ்சித்
திணைப்
பாடல்கள்
இரண்டும்
களவுக்
காலத்து
நிகழ்ச்சிகளையும்,
முல்லைத்
திணைப்
பாடல்கள்
இரண்டும்
கற்புக்காலத்து
நிகழ்ச்சிகளையும்
கூறுகின்றவை.
அந்த
நான்கு
பாடல்களில்
தோழி
கூற்றாக
இரண்டும்
(2,3),
தலைவி
கூற்றாக
ஒன்றும்
(4), பாணன்
கூற்றாக
ஒன்றும்
(5)
அமைந்திருக்கின்றன.
சிவபெருமான
வாழ்த்தும்
பெருந்தேவனார்
அப்பெருமானுடைய
தோற்றத்தையும்
இயல்பையும்
விரித்துரைக்கிறார்.
அப்பெருமானுடைய
திருமுடி,
திருமார்பு,
திரு
நுதல்,
நெற்றிக்கண்,
திருக்கரம்,
திருமேனி,
பல்,
சடை
திருக்கழுத்து,
திருத்தாள்
ஆகியவற்றைப்
பற்றிச்
சொல்கிறார்.
அவன்
அணிந்திருக்கும்
கொன்றை
மாலை,
பூணூல்,
பிறை,
புலித்தோலாடை
என்பவற்றையும்,
அவன்
எடுத்த
படைகளாகிய
கணிச்சி,
மழு,
சூலம்
என்பவற்றையும்,
அவனுடைய
இடபவாகனத்தையும்
பாடுகிறார்,
உமாதேவியார்
எப்போதும்
எம்பெருமானேடு
சேர்ந்திருப்பதைக்
குறிப்பிக்கிறார்.
அவன்
எப்போதும்
இசை
பாடுவதைச்
சொல்கிறார்.
இப்படி
அங்க
அணி
அடையாளங்களால்
இறைவனை
அன்பு
கொண்டு
சுட்டிக்
கூறித்
துதித்தாலும்
அவனுடைய
மிகப்
பழமையான
இயல்புகள்
இன்னவென்று
யாராலும்
திட்டமிட்டுச்
சொல்வது
முடியாதாம்.
அமரரும்
முனிவரும்
பிறரும்
அறியாத
தொன்முறை
மரபாம்
அது.
இறைவனுடைய
அருள்
மயமாகிய
தாளின்கீழ்
உயிர்க்
கூட்டங்களெல்லாம்
எப்போதும்
இருந்து
வாழ்கின்றன.
சங்ககாலத்துத்
தமிழர்கள்,
அடியார்களுக்கு
இரங்கி
ஆண்டவன்
திருக்கோலங்
கொண்டு
எழுந்தருளுகிறான்
என்பதையும்,
அப்படி
அங்க
அடையாளங்களைச்
சுட்டிக்
கூறுவதற்குரியவனாக
அவன்
இருப்பினும்
அவன்
இயல்பு
முற்றும்
உணர்தற்கரியது
என்பதையும்,
இறைவனுடைய
அருளிலே
எல்லா
உயிரும்
வாழ்கின்றன
என்பதையும்
உணர்ந்திருந்தார்கள்
என்பதற்கு
இந்தக்
கடவுள்
வாழ்த்து
ஒரு
தக்க
சான்று.
இறைவன்
கருணையை
நினைந்து
அன்பு
செய்யும்
தமிழர்கள்,
உலகில்
வாழ
வேண்டிய
வகையில்
வாழ்ந்து
வந்தார்கள்.
அறம்,
பொருள்,
இன்பம்
என்ற
மூன்றையும்
வளர்த்தார்கள்.
இல்வாழ்க்கையின்
பயனே
அறம்
என்று
எண்ணினார்கள்.
அதற்குப்
பொருள்
வேண்டுமாதலின்
அதனை
நல்வழியில்
ஈட்டினானர்கள்.
அறத்தினின்றும்
பிறழாத
வகையில்
பொருளின்
உதவியால்
இன்பம்
துய்த்தார்கள்.
காதலின்பத்தைத்
துய்ப்பதில்
இரண்டு
நிலைகளை
அகப்
பொருட்
பாடல்களிலே
பார்க்கிறோம்,
அவற்றைக்
களவென்றும்
கற்பென்றும்
சொல்வார்கள்.
காதலனும்
காதலியும்
நல்லூழின்
வன்மையால்
முன்பின்
அறியாதவர்களாயினும்
ஓரிடத்தில்
சந்தித்துக்
காதல்
கொள்கின்றனர்.
இந்தச்
சந்திப்பு
இயற்கையாக,
ஒருவருடைய
முயற்சியும்
இன்றி
நிகழ்வதாதலின்,
இதனை
இயற்கைப்
புணர்ச்சி
என்று
சொல்வார்கள்.
ஒருவருடைய
முயற்சியும்
இல்லாவிட்டாலும்
காதலன்
காதலியரிடையே
வேறு
வகையில்
தொடர்பு
உண்டு.
அவர்கள்
இப்பிறவியில்
எங்கெங்கோ
பிறந்து
ஓரிடத்தில்
சந்தித்துக்
காதல்
பூண்டாலும்,
அந்தக்
காதல்
பிறவிதோறும்
வருவது.
கண்டதும்
காதல்
என்று
சொல்லும்
வேற்று
நாட்டுக்
களவுக்
காதலுக்கும்
தமிழ்
நாட்டுக்
களவுக்
காதலுக்கும்
இதுதான்
உயிர்
நிலையான
வேற்றுமை.
பிறவிதோறும்
காதலன்
காதலியராக
இருக்கும்
இரண்டு
உயிர்கள்
வெவ்வேறு
பிறவியில்
வெவ்வேறு
நிலத்தில்
வெவ்வேறு
குடியிலே
பிறந்தாலும்
அவ்வுயிர்களை
அவ்வப்
பிறவியிலே
தெய்வம்
இடை
நின்று
கூட்டி
வைக்கிறது.
காதலர்
தம்
முயற்சியின்றியே
சேர்வதனால்
இயற்கைப்
புணர்ச்சி
என்று
இதனைக்
குறித்தாலும்
தெய்வத்தின்
திருவருள்
இடை
நின்று
கூட்டுவிப்பதனால்
இதனைத்
தெய்வப்
புணர்ச்சி
என்
றும்
சொல்வதுண்டு.
இவ்வாறு
திருவருளால்
சந்தித்துக்
காதல்
செய்யும்
காதலர்கள்
அடுத்தடுத்துக்
கூடுகிறார்கள்.
அவர்களுடைய
சந்திப்புக்குப்
புதிய
துணை
ஒன்று
அமைகிறது.
தலைவியின்
உயிர்த்
தோழி
தலைவியின்
மனநிலையை
நன்கு
உணரும்
இயல்புடையவள்.
அவள்
தலைவனத்
தலைவி
சந்திப்பதற்கு
உரிய
உதவிகளை-யெல்லாம்
செய்கிறாள்.
பகற்
காலத்தில்
சோலையிலும்
தினைப்புனத்திலும்
காதலர்கள்
சந்திக்கிறார்கள்,
திணைப்புனம்
காத்தல்
முதலிய
வேலைகள்
இல்லாதபோது
தலைவி
தாயின்
பாதுகாப்பில்
வீட்டிலே
இருப்பாள்.
அப்போது
தலைவன்
இரவுக்
காலத்தில்
வந்து
தலைவியின்
வீட்டுக்கருகில்
நின்று
தன்
வரவைச்
சில
குறிப்பான
ஒலிகளால்
புலப்படுத்துவான்.
தலைவி
அவன்
வரவை
அறிந்து
தோழியின்
உதவிகொண்டு
வீட்டை
விட்டு
வெளியே
வந்து
அவனைக்
கண்டு
அளவளாவுவாள்.
இவ்வாறு
பிறர்
அறியாமல்
காதலர்கள்
ஒருவரை
ஒருவர்
கண்டு
அளவளாவி
இன்புறும்
ஒழுக்கத்தைக்
களவு
என்று
சொல்வார்கள்.
ஒழுக்கத்தைக்
கைகோள்
என்றும்
வழகிகுவதுண்டு.
களவுக்
காலத்தில்
இன்பம்
ஒன்றே
காதலர்
களின்
தனி
நோக்கமாக
இருக்கும்.
அகத்துறையில்
களவு,
கற்பு
என்னும்
இரண்டு
கை
கோள்கள்
உள்ளன.
அவற்றில்
களவுக்
காதல்
செய்பவர்கள்
பின்பு
மணந்து
கொள்வார்கள்.
முதலில்
கள
வொழுக்கத்தில்
ஈடுபட்டு
அப்பால்
திருமணம்
செய்து
கொண்டு
இல்வாழ்க்கையாகிய
கற்பொழுக்கத்தை
மேற்கொள்வதைக்
களவின்
வழிவந்த
கற்பு
என்று
சொல்வார்கள்.
களவுக்
காதலின்றிக்
கல்யாணம்
செய்து
கொண்டு
கணவன்
மனைவியராக
வாழும்
நிலையைக்
களவின்
வழி
வாராக்
கற்பு
என்பர்.
இந்த
இரண்டு
வகையிலும்
களவின்
வழி
வந்த
கற்பே
சிறப்புடையது
என்று
தமிழர்கள்
கொண்டார்கள்.
வேதத்தில்
எட்டுவகை
மணங்கள்
கூறப்பெறுகின்றன.
அவற்றில்
ஒன்றாகிய
காந்தர்வ
மணம்
என்பதைப்
போன்றது
களவுக்
காதல்.
தலைவியின்
தாய்
தந்தையரும்.
உலகத்தாரும்
அறியாமல்
காதலர்
இன்புறுவதனால்
அதனைக்
களவு
என்று
சொன்னார்கள்.
மறைவாக
நிகழ்வதனால்
மறையுறு
புணர்ச்சி
என்றும்
ஒரு
பெயர்
அதற்கு
அமைந்திருக்கிறது.
பிறருக்குரிய
பொருளை
அவர்
அறியாதவாறு
தனக்கு
உரியதாக்கிக்
கொள்ளும்
களவு
அன்று
இது,
மறைவான
ஒழுக்கம்
என்ற
பொருளில்
களவு
என்ற
பெயர்
வந்தது.
தமிழ்
இலக்கணத்தைப்
பழங்காலத்தில்
எழுத்து,
சொல்,
பொருள்
என்று
மூன்றாகப்
பகுத்துக்
கூறினார்கள்,
இந்த
மூன்றில்
பொருளிலக்கணம்
சிறந்தது.
அது
அகப்பொருள்,
புறப்பொருள்
என்ற
இரண்டு
பகுதிகளை
உடையது.
அந்த
இரண்டிலும்
அகப்பொருள்
சிறந்தது.
அகப்பொருள்
களவு,
கற்பு
என்ற
இரு
வேறு
பிரிவுகளைப்
பெற்றது.
அந்த
இரண்டில்
களவு
சிறந்தது.
தமிழுக்கே
உரியது
இந்தக்
களவுக்
காதல்
என்று
சொல்வார்கள்.
களவுக்
காதலைப்
பற்றிய
காட்சிகள்
உலகத்து
மொழிகளிலுள்ள
கவிதைகளில்
இருக்கின்றன.
ஆனால்
தமிழில்
உள்ள
இரண்டு
சிறப்புக்கள்
அந்தக்
களவுக்
காதற்
கவிகளில்
இருப்பதில்லை.
ஒன்று:
வரையறையாகச்
சில
- இலக்கண
வரம்புடன்
காதல்
நிகழ்ச்சியைக்
கூறுவது
தமிழ்
மரபு.
திணை,
துறை
முதலிய
ஒழுங்குகள்
தமிழர்
காதலில்
உண்டு.
அந்த
ஒழுங்குகள்
மற்ற
மொழி
இலக்கியங்களில்
இல்லை.
இரண்டாவது:
தமிழர்கள்
காதலை
மிகமிகத்
தூயதாக
வைத்துப்
போற்றினர்.
அதனை
லட்சிய
வாழ்வாகக்
கொண்டனர்.
இத்தகைய
உயர்ந்த
நெறியில்
அமையும்
காதல்,
உலகத்தில்
நிகழக்கூடுமா
என்ற
ஐயங்கூடச்
சிலருக்கு
ஏற்படுவதுண்டு.
அதனால்
இதை,
"இல்லது
இனியது,
நல்லோரால்
நாட்டப்படுவது”
என்று
இறையனார்
அகப்பொருள்
உரைகாரர்
கூறுவர்.
தொல்காப்பியர், ”இந்த
வரையறை
அவ்வளவும்
உண்மை
அல்ல;
இந்த
நிகழ்ச்சிகள்
அத்தனையும்
பொய்யும்
அல்ல"
என்று
நினைக்கும்படியாக
இலக்கணம்
கூறுகிறார்,
புனைந்துரை
வகையினல்
அழகான
அமைப்புக்களை
யெல்லாம்
ஒன்று
சேர்த்துச்
சொல்வதை
நாடக
வழக்கு
என்பார்கள்,
அகப்
பொருள்
நிகழ்ச்சிகள்
நாடக
வழக்கும்
உலகியல்
வழக்கும்
இணைந்த
ஒன்று
என்று
தொல்காப்பியர்
சொல்கிறார்,
இதனைக்
கொண்டு
ஆராய்ந்தால்,
உலகியலில்
நிகழும்
நிகழ்ச்சிகளையும்
இலட்சிய
வாழ்வுக்குரிய
நிகழ்ச்சிகளையும்
இணைத்துக்
கவிஞர்
அகப்பொருள்
உலகத்தைப்
படைத்தனர்
என்று
தோன்றுகிறது.
நனவும்
கனவும்
இணைந்தது
அது.
இந்த
வரையறையோடு
தமிழ்க்
கவிஞர்
சொல்வது
நடத்தற்கு
அரியதுபோலச்
சில
இடங்களில்
தோன்றும்.
ஆயினும்
காதலின்
தூய்மையையும்
சிறப்பையும்
அத்தகைய
நிகழ்ச்சிகளின்
வாயிலாகவே
கவிஞர்கள்
புலப்படுத்தினர்.
காதல்
நித்தியமானது;
தூயது.
அவ்வாறே
காதல்
செய்யும்
காதலனும்
காதலியும்
நித்தியமானவர்கள்;
தூயவர்கள்.
இலட்சியக்
காதலர்களாகிய
அவர்களை
உலகில்
நாம்
கண்டு
பழகிய
மக்களாக
நினைக்கக்கூடாது.
அழுக்கும்
தவறும்
நிறைந்த
உலகத்துப்
புழுதியிலே
நடமாடும்
மக்களை
நினைத்து
அந்தக்
காதலர்களை
நினைத்தால்
அவர்களுடைய
தூய்மை
கெட்டுவிடும்.
காதல்
என்ற
தெய்விக
உணர்ச்சியையே
காதலனென்றும்
காதலியென்
றும்
உருவாக்கி
அமைக்கும்போது
அவர்களுக்கு
எந்தப்
பெயரை
வைப்பது?
ஒரு
காலத்தில்
ஓரிடத்தில்
இருப்பவர்களானல்
இன்றார்
என்று
சுட்டிக்
கூறலாம்.
ஆதலினுல்
காதல்
செய்யும்
காதலர்களைப்
பெயர்கூறிச்
சுட்டுவது
தவறு
என்று
வரையறை
செய்தனர்
தமிழர்.
உருவும்
பெயரும்
உடையவராகி
வாழும்
மக்களைக்
காதலராக
வைத்துப்
பாடுவது
காதலின்
நுட்பத்தையும்
தூய்மையையும்
குலைத்துவிடும்
என்பது
அவர்
கொள்கை,
ஆகவே
அகப்பொருட்
பாட்டில்
சுட்டிப்
பெயர்
கூறும்
பாத்திரங்கள்
வருவதே
இல்லை.
அப்படிப்
பெயர்
கூறி
அவர்களைக்
காதலராகவோ
காதலியராகவோ
வைத்தால்
அந்தப்
பாடல்கள்
அகத்திணைப்
பாடல்கள்
ஆகா,
புறத்தினைப்
பாடல்கள்
ஆகிவிடும்.
கடவுளிடம்
காதல்
கொள்வதாக
வைத்துப்
பாடினலும்
அப்பாடல்
புறத்துறைப்
பாடலே
ஆகும்.
தூய
காதல்
நிலவும்
எல்லைக்குள்
பெயர்
சுட்டும்
விவகாரமே
இல்லை.
இதுவும்
தமிழுக்கே
சிறப்பாக
அமைந்த
இலக்கணம்.
தாம்
இயற்றிய
அகத்துறைப்
பாடல்களில்
யார்
புகழையேனும்
இணைக்க
வேண்டுமானால்
அதற்குத்
தமிழ்ப்
புலவர்கள்
ஒரு
வழி
வைத்திருக்கிறார்கள்.
பாட்டில்
வரும்
அகத்துறை
நிகழ்ச்சியில்
அந்த
மனிதரை
ஒரு
பாத்திரமாக்காமல்
எப்படியாவது
ஒரு
தொடர்பை
உண்டாக்கிப்
பாட்டில்
அவர்
பெயரை
நுழைத்து
விடுவார்கள்,
அகநானூற்றின்
முதற்
பாட்டை
மாமூலனார்
என்ற
புலவர்
பாடியிருக்கிறார்,
மாமூலனாருக்குப்
பழனியில்
வாழ்ந்த
சிற்றரசனுகிய
ஆவியென்பவனைப்
பாராட்ட
வேண்டும்
என்ற
எண்ணம்
இருந்தது.
தலைவனைப்
பிரிந்து
வருந்தும்
தலைவி,
"என்
காதலர்
என்னைப்
பிரியமாஃடேன்
என்று
முன்பு
சொன்னரே;
அதை
இப்போது
மறந்து
விட்டாரோ?”
என்று
தன்
தோழியிடம்
சொல்வதாகப்
பாட்டு
அமைந்திருக்கிறது.
"பிரியாமல்
இருப்போம்”
என்று
தலைவன்
சொன்ன
போது,
அதற்கு
ஓர்
உவமையும்
சொன்னதாகத்
தலைவி
கூறுகிறாள்.
’சாணை'
பிடிக்கிறவன்
அரக்கையும்
பிசின்
முதலியவற்றையும்
சேர்த்து
இரண்டு
கல்லை
ஒட்டிச்
சாணைக்
கல்லை
அமைப்பான்,
அந்தக்
கற்கள்
முன்பு
தனித்
தனியே
இருந்தாலும்
ஒட்டின
பிற்பாடு
பிளவு
படாமல்
ஒன்றுபட்டே
இருக்கும்,
"அந்தச்
சாணைக்
கல்லேப்போல
நாமும்
வெவ்வேறாக
இதுகாறும்
இருத்தாலும்
இனிமேல்
பிரியாமல்
இருப்போம்"
என்று
தலைவன்
சொன்னானாம்.
சிறுகா
ரோடன்
பயினொடு
சேர்த்திய
கற்போற்
பிரியலம்
என்ற
சொல்தாம்
மறந்தனர்
கொல்லோ
என்று
தலைவி
கூறி
வருந்துகிறாள்.
இந்த
இடத்தில்
புலவர்
தம்முடைய
அன்புக்கு
உரியவனான
ஆவியின்
பெயரை
ஒட்ட
வைக்க
வழி
செய்கிறார்.
பழனி
மலைக்குப்
பழங்காலத்தில்
பொதினி
என்ற
பெயர்
வழங்கியது.
அது
ஆவிக்குரிய
மலையல்லவா?
’ஆவிக்குரிய
பொதினி
மலையில்
சாணைக்காரன்
பிசினைக்கொண்டு
சேர்த்திய
கல்லைப்போல’
என்று
சானைக்காரனுக்குப்
பொதினியையும்
பொதினிக்கு
ஆவினையும்
அடைகளாக்கிப்
பாட்டுக்குள்
ஆவியை
நுழைத்துவிடுகிறார்.
பிறகு
அவனைப்
புலவர்
பாராட்டுவதற்குச்
சொல்ல
வேண்டுமா?
"வண்டுகள்
மொய்க்கும்
கண்ணியையும்,
வீரக்கழலையும்
உடையவன்;
அச்சத்தைத்
தரும்
குதிரை
வீரர்களாகிய
மழவரோடு
பொருது
அவரை
ஒட்டியவன்;
முருகனைப்
போலப்
போர்
செய்கிறவன்;
இத்தகைய
சிறப்புக்களை
உடையவன்
ஆவி,
அவனுக்குரியது
பொதினி
மலை;
அந்தப்
பொதினி
மலையிலே
சாணைக்காரன்
ஒட்டிய
சாணைத்
கல்லைப்போலப்
பிரியமாட்டோம்
என்று
அழகாக
இணைத்து
ஆவியின்
புகழைப்
பாடி
விடுகிறார்,
இரண்டு
கல்லும்
ஒட்டி
இணைந்தது
போல,
காதலனும்
காதலியும்
பிரிவின்றி
இணைந்ததுபோல,
பாட்டில்
ஆவியின்
புகழ்
இணைந்து
விளங்குகிறது.
பாட்டின்
ஆரம்பமே
ஆவியின்
புகழைச்
சொல்லும்
வகையில்
அமைந்திருக்கிறது.
வண்டுபடத்
ததைந்த
கண்ணி,
ஒண்கழல்,
உருவக்
குதிரை
மழவர்
ஓட்டிய
முருகன்
நற்போர்,
நெடுவேள்
ஆவி
அறுகோட்டு
யானைப்
பொதினி
ஆங்கண்
சிறுகா
ரோடன்
பயினொடு
சேர்த்திய
கற்போற்
பிரியலம்
என்ற
தலைவன்
கூற்றிலே
வரும்
உவமையில்
ஆவியின்
புகழும்
வருகிறது.
கடவுளின்
புகழைச்
சொல்ல
வேண்டுமானலும்
இவ்வாறு
சார்த்து
வகையால்
அமைப்பதே
அகப்பொருளுக்
குரிய
மரபு.
ஒருவருடைய
பெயரையும்
புகழையும்
சார்த்திச்
சொல்லும்
பாடல்களில்
அவரைப்
பாட்டுடைத்
தலைவர்
என்றும்,
பாட்டில்
வரும்
தலைவனைக்
கிளவித்
தலைவன்
என்றும்
சொல்வது
மரபு.
பாட்டுடைத்
தலைவனையே
கிளவித்
தலைவனாக
வைத்துப்
பாடினால்
அது
அகத்துறையாகாது;
புறத்துறை
யாகிவிடும்.
ததைந்த-மலர்ந்த,
கண்ணி-தலையில்
அணியும்
அடையாள
மாலை,
கழல்-வீர
கண்டை.
உருவம்-அச்சம்.
மழவர்-மழவரை.
முருகன்
நற்போர்-முருகனைப்
போலச்
செய்யும்
நல்ல
போரையுடைய,
நெடுவேள்-உயர்ந்த
சிற்றரசன்.
அறுகோட்டு
யானை-முறிந்த
கொம்பையுடைய
யானை.
காரோடன்
–
சாணையிடுபவன்,
பயின்
- பிசின்,
பிரியலம்
-
பிரியமாட்டோம்,
மாணிக்கவாசகர்
பாடிய
திருச்சிற்றம்பலக்
கோவையாரில்
நடராசப்
பெருமானுடைய
புகழ்
ஒவ்வொரு
பாட்டிலும்
வருகிறது.
அவரைப்
பாட்டுடைத்
தலைவராக
வைத்துப்
பாடுகிறாரே
யன்றிக்
கிளவித்
தலைவராகப்
பாட
வில்லை.
அதாவது
நடராசப்
பெருமான்மேல்
ஒரு
தலைவி
காதல்
கொண்டதாகப்
பாடவில்லை.
அதனால்
அக்கோவை
அகப்பொருட்
கோவையாக
விளங்குகிறது.
ஆனால்
தேவாரத்திலும்
திவ்யப்
பிரபந்தத்திலும்
கடவுளையே
நாயகனாகவும்,
பாடுவார்
தம்மை
நாயகியாகவும்
வைத்துப்
பாடிய
பாடல்கள்
அகப்பொருட்
பாடல்கள்
அல்ல.
அவை
யாவும்
புறப்பொருளின்
பகுதியாகிய
பாடாண்
திணையைச்
சார்ந்தவை.
இந்த
நுட்பமான
வேறுபாடு
தமிழுக்கே
உரிய
சிறப்புக்களில்
ஒன்று.
இப்
புத்தகத்தில்
உள்ள
அகத்
துறைப்
பாடல்கள்
நான்கிலும்
அவ்வத்
திணைக்குரிய
முதல்
கரு
உரிப்பொருள்கள்
சிறப்பாக
அமைந்திருக்கின்றன.
அவற்றை
விளக்கத்தில்
காணலாம்.
இயற்கையின்
அழகை
விரித்துரைப்பதற்குரிய
வாய்ப்பைப்
புலவர்கள்
உண்டுபண்ணிக்
கொள்கிறார்கள்.
இப்புத்தகத்தில்
உள்ள
இரண்டாவது
பாட்டு,
தலைவனைப்
பார்த்துத்
தோழி
பேசுவதாக
அமைந்திருக்கிறது.
அங்கே
தலைவனை
மலை
நாட்டையுடையவனே
என்று
அவள்
விளிக்கிறாள்.
சுருக்கமாக
மலை
நாட
என்று
சொல்லி
விடாமல்
அந்த
மலையின்
வளப்பத்தை
எடுத்துரைக்கிறாள்.
பதினெட்டு
அடிகளைக்
கொண்ட
இந்தப்
பாட்டில்
முதல்
ஒன்பது
அடிகளும்
மலைப்
பக்கத்தில்
உள்ள
எழிலை
அழகாக
எடுத்துக்
காட்டுகின்றன.
வாழை
மரங்கள்
பெரிய
குலைகள்
ஈன்று
நிற்பதையும்,
அவற்றின்
காய்கள்
கனிந்து
உதிர்வதையும்,
பலா
மரத்திலே
பழம்
கனிந்து
வெடித்து
வழியிலே
போகிறவர்களை
யெல்லாம்
அவர்கள்
போகிற
போக்கிலே
போக
விடாமல்
தடுப்பதையும்,
தேன்
சொரிந்த
சுனையில்
அத்
தேன்
புளித்து
விளை
தலையும்,
வாழைப்
பழத்தையும்
பலாப்
பழத்தையும்
வயிறு
நிறைய
உண்ட
ஆண்
குரங்கு
மரத்திலே
ஏறுவதற்கு
முடியாமல்
உதிர்ந்த
மலர்
குவியலாகக்
கிடக்கும்
மெத்தென்ற
படுக்கையிலே
தூங்குவதையும்
அந்தப்
பகுதியிலே
பார்க்கிறோம்.
குறிஞ்சி
நிலத்தின்
எழிலையும்
இன்பத்தையும்
அந்த
ஒன்பது
அடிகள்
காட்டுகின்றன.
நாம்
மலைச்
சாரலிலே
நிற்பது
போன்ற
உணர்ச்சி
உண்டாகிறது.
வாழைப்
பழமும்
பலாப்
பழமும்
தேனும்
அகக்
கண்முன்
வந்து
நம்
நாவிலே
நீருறச்
செய்கின்றன.
"அந்தக்
குரங்கு
பெற்ற
சுகமே
சுகம்"
என்று
மனத்துக்குள்
சொல்லிக்கொள்கிறோம்.
இது
குறிஞ்சி
நிலத்தின்
இன்பக்
காட்சி.
மற்றொரு
பாட்டில்
பயங்கரமான
மலைக்
காட்சிகள்
வருகின்றன.
பாதி
ராத்திரியில்
அந்த
மலையில்
புலவர்
நம்மைக்
கொண்டுபோய்
நிறுத்துகிறார்.
இதில்
உள்ள
நான்காவது
பாட்டில்
வரும்
மலைச்
சாரலில்
இரவில்
பயங்கரம்
தாண்டவமாடுவதைக்
காண்கிறோம்.
பதினெட்டு
வரியுள்ள
அந்தப்
பாட்டில்
பன்னிரண்டு
அடிகளில்
அச்சச்
சுவை
ததும்பும்
வருணனையைப்
புலவர்
அமைத்திருக்கிறார்.
ஈசல்
நிறைந்த
புற்றிலே
புற்றாஞ்சோற்றைத்
தின்ன
வந்த
கரடி
புற்றுக்குள்ளே
கையை
விட்டுத்
தன்
நகத்தால்
அதற்குள்ளே
கிடக்கும்
பாம்பை
உசுப்பி
விடுகிறது.
"நடு
இரவிலே
சுற்றிலும்
உள்ள
இருள்
குட்டி
போட்டாற்
போன்று
தோன்றும்
கரடியைக்
குரும்பி
வல்சிப்
பெருங்கை
ஏற்றை
என்று
புலவர்
சொல்கிறார்,
இது
ஒரு
பக்கம்
நிகழ்கிறது.
மற்றொரு
பக்கம்
பெரிய
காட்டுப்பன்றியை
ஒரு
புலி
அடித்துக்
கொன்று
தரதர
வென்று
இழுத்துச்
செல்கிறது.
அப்பப்பா!
அந்த
இடம்
முழுவதும்
ஒரே
புலால்
நாற்றம்.
வேறு
ஒரு
பக்கத்தில்
ஆண்
யானை
வாழை
வனரும்
பள்ளத்தில்
விழுந்து
பிளிறுகிறது.
அதை
மீட்பதற்காக
அதன்
பிடி,
மரங்களை
யெல்லாம்
முறித்துப்
பள்ளத்திலே
படியாகப்
போடுகிறது.
இந்தச்
சத்தத்தால்
மலைச்சாரல்
முழுதும்
கிடுகிடாய்க்கிறது.
இப்படி
இயற்கைத்
தேவியின்
எழிலில்
இரண்டு
வகைகளை
இந்த
இரண்டு
பாடல்களிலும்
காண்கிறோம்.
ஒன்று
இனிய
அழகு;
மற்ருறொன்று
பயங்கர
அழகு.
முதலிலே
சொன்னது
அற்புதம்
அல்லது
மருட்கைச்
சுவையைத்
தருவது;
இரண்டாவது
பயானகம்
அல்லது
அச்சச்
சுவையைத்
தருவது.
இரண்டும்
சுவையைத்
தருவனவே.
பராசக்தியே
கண்கவர்
அழகுத்
திருக்
கோலத்தில்
காமாட்சியாகவும்,
உள்ளத்தை
நடுங்கச்
செய்யும்
பயங்கரக்
கோலத்தில்
காளியாகவும்
காட்சி
அளிக்கிறாள்.
இயற்கைத்
தேவியும்
ஓரிடத்தில்
பழமும்
தேனும்
கடுவனும்
மலர்ப்
படுக்கையுமாக
எழில்
திருக்கோலம்
கொண்டிருக்கிறாள்.
மற்றேரிடத்தில்
ஈசலும்
பாம்பும்
கரடியும்
இருளும்
பன்றியும்
புலியும்
யானையுமாகப்
பயங்கரக்
கோலம்
பூண்டு
விளங்குகிறாள்.
உண்மை
உலகத்தில்
இரண்டு
கோலங்களும்
இருவேறு
அழகை
உடையன,
கவிதை
யுலகத்தில்
இந்த
இருவகைக்
கோலங்களின்
சொல்லோவி
யங்கள்
பின்னும்
அதிக
அழகைப்
பெற்று
ஒளிர்கின்றன:
போற்றிப்
பாராட்டும்
வகையில்
இலங்குகின்றன.
இப்படியே
கார்
காலத்தில்
முல்லை
நிலத்தில்
பொலியும்
அழகை
இரண்டு
பாடல்கள்
சொல்கின்றன.
முல்லை
மலரும்
தேற்றா
மலரும்
கொன்றை
மலரும்
மலர்கின்றன;
காயாம்
பூ
மலர்ந்து
உதிர்கின்றது.
இந்திர
கோபப்பூச்சிகள்
பவளத்தைப்
போல
ஊர்கின்றன.
மான்கள்
புல்லை
அருந்தி
இன்புறுகின்றன.
வண்டுகள்
தாதை
உண்ணு
கின்றன.
பசுக்கள்
அறுகம்
புல்லை
வயிறார
மேய்கின்றன.
காதலுலகத்தைக்
கோலம்
செய்து
காட்டும்
அகப்
பாட்டுக்களில்
விலங்கினங்க-ளிடையிலும்
காதல்
இருப்பதை
விளக்கும்
காட்சிகளைப்
புலவர்கள்
காட்டுவது
வழக்கம்.
கார்
காலத்தில்
தழைத்துப்
பூத்த
மரங்களில்
உள்ள
மலர்களில்
வண்டுகள்
தாதை
உண்ணுகின்றன.
ஆண்
வண்டுகள்
பெடை
வண்டுகளோடு
அந்த
மலராகிய
மாளிகையில்
வதிகின்றன.
அந்த
வண்டுகளின்
காதலுக்கு
ஊறுபாடு
நேராமல்
இருக்க
வேண்டுமென்று
எண்ணுகிறான்
தலைவன்.
தன்
தேரிலுள்ள
மணிகளின்
நாக்கைக்
கட்டிவிடுகிறான்.
மணியின்
ஒலியைக்
கேட்டு
அந்த
வண்டுக்
காதலர்
அஞ்சிப்
பிரிந்து
போகக்
கூடாதே
என்ற
எண்ணம்
அவனுக்கு.
பன்றியைக்
கொன்ற
புலி
அதை
அவ்விடத்திலேயே
தின்பதில்லை.
அதை
இழுத்துச்
செல்கின்றது.
தன்
இருக்கையில்
உள்ள
பெண்
புலிக்கும்
இரையூட்ட
எண்ணியே
அவ்வாறு
இழுத்துச்
செல்கிற
தென்ற
கருத்துப்
பாட்டிலே
குறிப்பாகப்
புலப்படுகிறது.
பள்ளத்தில்
விழுந்த
ஆண்
யானையை
மீட்க
அதன்
காதலியாகிய
பெண்
யானை
படாதபாடு
படுகிறது.
மழை
பெய்த
முல்லை
நிலத்தில்
புல்லை
அருந்தும்
பொருட்டுக்
குதித்தோடும்
இரலை
தனியே
செல்லவில்லை.
தன்
மடப்
பினையைத்
தழுவிச்
செல்கிறது.
இவ்வாறு
காதலன்
காதவியர்
உலவும்
காதலுலகத்தின்
நிலைக்களத்திலும்
காதற்
காட்சிகளைப்
புலவர்கள்
அமைத்திருக்கிறார்கள்.
மக்களுடைய
உணர்ச்சிகளின்
நுட்பத்தையும்,
தூய
காதலின்
திறத்தையும்,
பிற
உயிர்களைத்
துன்புறுத்தாமல்
வாழும்
இயல்பையும்,
இவைபோன்ற
பல
அரிய
செய்திகளையும்
இந்தப்
பாடல்களில்
காணலாம்.
இத்தகைய
சுவை
மிக்க
பாடல்களை
உடைய
அகநானுாற்றின்
முதல்
எண்பது
பாடல்களுக்குப்
பழைய
உரை
ஒன்று
இருக்கிறது.
அதை
எழுதியவர்
இன்ன
ரென்று
தெரியவில்லை.
அது
பெரும்பாலுல்
குறிப்புரையாக
இருக்கிறது.
சில
இடங்களில்
இறைச்சிப்
பொருளையும்
உள்ளுறைப்
பொருளையும்
உரைகாரர்
எடுத்துக்
காட்டியிருக்கிறார்,
அகநானூறு
மூலத்தையும்
பழைய
உரையையும்
ஸ்ரீ
வே.
இராஜகோபாலையங்கார்
என்னும்
தமிழறிஞர்
பதிப்பித்திருக்கிறார்,
அப்பதிப்புக்குச்
சேது
சம்ஸ்தான
வித்துவானக
விளங்கிய
மகா
வித்துவான்
ஸ்ரீ
ரா.
ராகவையங்காரவர்கள்
பாடல்களைப்
பரிசோதித்து
உதவினார்கள்.
இப்போது
சைவசித்தாந்த
நூற்பதிப்புக்
கழகத்தார்
ஒரு
பதிப்பை
வெளியிட்டிருக்கின்றனர்.
சங்கநூற்
காட்சிகள்
என்னும்
வரிசையில்
இது
ஆறாவது
புத்தகம்,
இன்னும்
எஞ்சியுள்ள
இரண்டு
புத்தகங்களையும்
முருகன்
திருவருள்
நிறைவேற்றி
வைக்கும்
என்றும்,
தமிழன்பர்களின்
ஆதரவு
இந்த
வரிசைக்குப்
பெரிய
அளவில்
கிடைக்கும்
என்றும்
எண்ணுகிறேன்.
15-10-52
கி.
வா.
ஜகந்நாதன்
-----------------
குறிப்பு
இந்த
இரண்டாம்
பதிப்பில்
"நகைத்த
தலைவி”
என்ற
கட்டுரையைப்
புதிதாகச்
சேர்த்திருக்கிறேன்.
மற்றவை
யெல்லாம்
முன்பு
உள்ளபடியே
உள்ளன.
18-2-59
கி.
வா.
ஜகந்நாதன்
------------
உள்ளுறை
முகவுரை
1.
மணிமிடற்
றந்தணன்
2.
இன்ப
மாலை
3.
காரும்
தேரும்
4.
காட்டு
வழி
5. "தேரைக்
கண்டேன்"
6.
நகைத்த
தலைவி
1.
மணிமிடற்
றந்தணன்
கடவுளுடைய
தன்மையை
முடிவு
போக
யாரும்
அறிந்திலர்.
ஆயினும்
அப்பெருமானைப்
பற்றிச்
சமய
நூல்களும்
ஞானியரும்
அன்பர்களும்
வெளிப்படுத்தி
யிருக்கும்
செய்திகள்
அளவிறந்தன.
கடவுள்
ஒருவனே
என்ற
கருத்தே
முடிந்த
முடிபானாலும்,
மனத்தின்
துணைகொண்டு
நினைப்பதும்,
அப்படி
நினைத்ததைக்
கருவிகளின்
துணைகொண்டு
செய்வதுமாகிய
இயல்பையுடைய
மக்கள்
கடவுளைப்
பல
உருவங்களை
உடையவனாக
வைத்து
வழிபடுகிறார்கள்.
பல
வீரச்
செயல்களையும்
அருட்
செயல்களையும்
உடையவனாகப்
புகழ்கிறார்கள்.
சிவபெருமானைப்
பற்றிய
உருவ
வருணனையும்
திருவருட்
செயல்களைப்
பற்றிய
செய்திகளும்
தேவாரம்
முதலிய
சைவத்
திருமுறைகளில்
கடல்போல
விரிந்து
பரந்துள்ளன.
ஆயினும்
அந்த
நூல்களுக்கு
முன்பே,
இன்றைக்கு
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு
முன்பாகவே,
சிவபெருமான்
முதலிய
கடவுளரைப்
பற்றிய
செய்திகள்
பல
தமிழ்
நாட்டில்
வழங்கி
வந்தன.
இன்று
இந்த
நாட்டில்
சிவபெருமானுடைய
திருக்கோலத்தை
எப்படி
எண்ணிப்
பாடி
அலங்காரம்
செய்து
வழிபடுகிறோமோ,
அப்படியே
அக்காலத்திலும்
வழிபட்டார்கள்.
சிவபெருமானுடைய
வீரச்
செயல்களும்
அருட்செயல்களும்
இன்று
வழங்குவனபோலவே
அன்றும்
வழங்கின.
பிற்காலத்தில்
அவை
பின்னும்
மிகுதியாக
வழங்கலாயின.
எட்டுத்
தொகை
நூல்களில்
ஒவ்வொன்றுக்கும்
கடவுள்
வாழ்த்து
உண்டு.
அவற்றில்
பதிற்றுப்பத்தின்
கடவுள்
வாழ்த்து
மாத்திரம்
கிடைக்கவில்லை.
மற்ற
வற்றில்
ஐங்குறுநூறு,
கலித்தொகை,
அகநானூறு,
புறநானூறு
என்ற
நான்கு
நூல்களிலும்
கடவுள்
வாழ்த்தாக
அமைந்த
பாடல்கள்
சிவபெருமானைப்
பற்றியவை.
தமிழ்
நாட்டு
மக்கள்
திருமால்
முதலிய
கடவுளரை
வேறுபாடின்றி
வழிபட்டார்கள்.
ஆயினும்
சிவபெருமானை
வணங்குவார்
தொகை
மிகுதியாக
இருந்திருக்க
வேண்டுமென்று
தோன்றுகிறது.
அகநானூற்றில்
வரும்
சிவபெருமானைப்
பற்றிய
வாழ்த்து,
பாரதம்
பாடிய
பெருந்தேவனார்
இயற்றியது.
யாவரும்
அறியாத
தன்மையை
உடைய
பழம்
பொருளாகிய
சிவபெருமானுடைய
திருவுருவம்,
அப்பெருமான்
திருக்கரத்தில்
ஏந்திய
படைகள்,
அணிந்த
ஆடையணிகள்
முதலியவற்றை
எடுத்துச்
சொல்லுகிறார்.
சிவபெருமானுடைய
அடையாள
மலர்,
கொன்றை.
அது
பொன்னைப்
போன்ற
மஞ்சள்
நிறம்
உடையது.
அம்மலர்
கார்
காலத்தில்
மலர்வது.
காரில்
விரியும்
பொன்னுக்கு
ஒப்பாகிய
புதிய
கொன்றை
மலரை
அப்
பெருமான்
பல
உருவத்தில்
அணிந்திருக்கிறான்.
இறைவனோடு
சார்ந்த
எந்தப்
பொருளுக்கும்
வாட்டம்
இல்லை.
ஆதலின்
அவன்
அணிந்திருக்கும்
கொன்றை
மலர்
என்றும்
வாடாத
புது
மலராகவே
இருக்கிறது.
மலரைத்
தொடுத்தல்
ஒரு
கலை.
பல
வகையில்
அதைத்
தொடுத்து
அணிவது
உண்டு.
பொதுவாக
மாலை
என்று
சொன்னாலும்
ஒவ்வொரு
வகைக்கும்
தனித்தனியே
பெயர்
உண்டு.
மார்பிலே
அணியும்
மாலைக்குத்
தார்
என்று
பெயர்.
சிறியதாகத்
தொடுத்துத்
தலையிலே
செருகிக்
கொள்
வதற்குக்
கண்ணி
என்று
பெயர்.
தலையில்
வட்டமாகப்
போடுவதற்கு
இண்டை
யென்று
பெயர்.
பெரும்பாலும்
தார்
என்பது
ஒற்றையாக
இல்லாமல்
இணை
மாலையாகவே
இருக்கும்.
காரில்
விரியும்
கொன்றைப்
புதுமலரைச்
சிவபெருமான்
இரட்டை
மாலையாகிய
தாராகவும்
ஒற்றை
மாலையாகவும்
கண்ணியாகவும்
அணிந்திருக்கிறான்.
பெருந்தேவனார்
முதலில்
மலர்
புனைந்து
விளங்கும்
மாதேவனைக்
காட்டுகிறார்,
கார்விரி
கொன்றைப்
பொன்நேர்
புதுமலர்த்
தாரன்
மாலையன்
மலைந்த
கண்ணியன்.
[
கார்
காலத்தில்
மலர்கின்ற
கொன்றையினது
பொன்னை
யொத்த
புதிய
மலராலாகிய
தாரை
அணிந்திருக்கிறவன்;
அம்மலராலாகிய
மாலையை
உடையவன்;
தலையில்
சூட்டிக்
கொண்டிருக்கும்
அதே
மலராலாகிய
கண்ணியை
உடையவன்.
கார்-கார்காலம்,
விரிதல்-மலர்தல்,
நேர்-ஒத்த,
மலைந்த-சூட்டிய.]
கண்ணியை
அடையாள
மாலையென்றும்
தாரைப்
போகத்துக்கு
உரியதென்றும்
சொல்வார்கள்.
தார்
ஓர்
விசேடமாக
இடுவது;
மாலை
அழகுக்கு
இடுவது;
கண்ணி
போர்ப்பூ,
இனித்
தார்
சேர்ப்பதாகவும்,
மாலை
கட்டுவதாகவும்,
கண்ணி
தனித்துத்
தொடுப்பதாகவும்
இவ்வேறுபாடுகளென
உரைப்பாரும்
உளர்
என்பன
பழைய
உரையாசிரியர்
எழுதியிருக்கும்
குறிப்புக்கள்.
சிவபெருமானுடைய
திருமார்பிலுள்ள
தாரையும்
மாலையையும்
திருமுடியிலுள்ள
கண்ணியையும்
கானச்
செய்தபின்
அப்பெருமானுடைய
திருமார்பை
மறுபடியும்
ஊன்றிக்
கவனிக்கச்
செய்கிறார்
பெருந்தேவனார்,
தாரும்
மாலையும்
கண்ணைப்
பறிக்கும்
வண்ணமுடையன;
ஆதலின்
கண்டவுடனே
தெரிகின்றன.
திருமார்பில்
வேறு
ஒன்று
இருக்கிறது.
அது
நுட்பமானது;
ஆதலின்
கூர்ந்து
கவனித்தற்குரியது;
நிற
வேறுபாடில்லாதது;
தூய
வெண்மையை
உடையது.
மார்பிலே
அது
புரளுகிறது.
அதுதான்
பூணூல்;
சிறிதும்
மாசுமறுவற்ற
தூய
வெள்ளிய
நுண்ஞாண்.
மார்பி
னஃதே
மையில்
நுண்ஞாண்.
[
மார்பிலே
இருப்பது
மாசற்ற
வெண்மையான
நுண்ணிய
பூணூல்.
மார்பினது
என்பது
செய்யுளோசைக்காக
மார்பினஃது
என
விரிந்தது.
மை-அழுக்கு.
ஞாண்-கயிறு,
நூல்;
இங்கே
பூணூலுக்கு
வந்தது.]
உருவினாற்
பெரிய
தாரையும்
மாலையையும்
பார்க்கும்
போது
அவர்
திருமார்பில்
உள்ள
ஞாணாகிய
பூணூல்
நுண்ணியதாகத்
தோன்றுகிறது.
அதனால்
நுண்ஞாண்
என்றார்.
சிவபெருமானுடைய
திருமுகத்தில்
வேறு
யாருக்கும்
இல்லாத
சிறப்பு
ஒன்று
உண்டு.
அதுதான்
அவனுடைய
நெற்றிக்
கண்,
அந்த
மூன்றாவது
கண்
ஞானத்தின்
அடையாளம்.
தேவர்களுடைய
கண்கள்
இமையாதவை.
அதனால்தான்
இமையவர்
என்ற
பெயர்
ஆவூர்களுக்கு
வந்தது;
இமையிலே
யாருக்கும்
இல்லாத
சிறப்புடையவர்
என்று
பொருள்
விரித்துக்
கொள்ளவேண்டும்.
இறைவனுடைய
நாட்டங்களும்
இமையாதவை.
"இமையாத
முக்கண்
மூவரிற்
பெற்ற
வன்”
என்று
மாணிக்கவாசகர்
பாடுகிறார்.
ஆதலின்
இந்த
நுதற்கண்ணும்
இமையாத
நாட்டமே.
நுதலது
இமையா
நாட்டம்.
[
நெற்றியில்
இருப்பது
இமையாத
கண்.
]
கொன்றை
மலர்த்
தாரையும்
மாலையையும்
கண்ணியையும்
காட்டி,
மார்பில்
உள்ள
நுண்
ஞாணையும்
காட்டி,
நுதலில்
உள்ள
இமையாத
நாட்டத்தையும்
காட்டிய
புலவர்
சிவபெருமானுடைய
திருக்கைகளில்
உள்ள
படைகளைக்
காட்ட
வருகிறார்.
சிவபெருமான்
திருக்கரத்தில்
மழு
இருக்கிறது.
அது
எப்போதும்
வெப்பத்தோடு
இருப்பது.
“மழுவாகக்
கொதிக்கிறது”
என்று
உலக
வழக்கில்
சொல்வதுண்டு,
அந்த
மழுவைப்
பரசு
என்று
வடமொழியிலே
சொல்லுவார்கள்.
மழுவை
ஏந்தியிருக்கும்
சிவபெருமான்
ஒரு
வகை
அங்குசத்தையும்
ஏந்தியிருக்கிறன்.
அதைக்
கணிச்சி
என்று
சொல்வார்கள்.
மழு
முதலிய
படைகளால்
இறைவன்
பகைவரை
அடுவான்.
அவனுக்குப்
பகையும்
இல்லை;
நட்பும்
இல்லை.
ஆயினும்
ஆருயிர்களுக்குத்
தீங்கு
விளைவிப்
பவர்களைப்
பகைவர்போல
வைத்து
ஒறுத்தல்
அவனுடைய
அருளுக்குரிய
இயல்பு.
அப்போது
பயன்படுவன
மழு
முதலிய
கருவிகள்.
அப்
பெருமான்
கையிலே
கணிச்சியும்
மழுவும்
இருப்பதோடு
முத்தலைச்
சூலமும்
இருக்கிறது.
இறைவனிடம்
உள்ன
படைகளில்
இதுவே
சிறந்தது.
சூலதரன்
என்று
அப்பெருமான்
பெயர்
பெருக
வழங்கும்.
சில
சமயங்களில்
தெய்வங்களை
அவர்களுடைய
படைகளில்
ஆவாகனம்
செய்து
வழிபடுவது
உண்டு.
வேலை
நட்டு,
அதனையே
முருகனாக
எண்ணி
வழிபடுவது
பழங்கால
முதல்
இருந்து
வரும்
வழக்கம்.
அப்படியே
சூலத்தில்
சிவபெருமான
ஆவாகனம்
செய்து
வழிபடுவதும்
உண்டு.
ஆதலால்
சிவபெருமானுடைய
திருக்கரத்தில்
உள்ள
படைகளில்
குலம்
சிறந்தது
என்று
தெரிய
வருகிறது.
அதுபற்றியே
சூலத்தைச்
சூலதேவர்
என்று
உயர்வாகச்
சொல்லும்
மரபும்
உண்டாயிற்று.
சூலமும்
ஒருவகை
வேல்தான்.
வேலுக்கு
ஒர்
இலை
உண்டு;
சூலத்துக்கு
மூன்று
இலைகள்
உள்ளன.
ஆதலின்
அதை
மூவிலை
வேல்
என்று
கூறுவர்;
திரிசூலம்
என்பது
வடமொழி
வழக்கு.
மூன்று
வாய்களை
உடைய
வேல்
அது.
இத்தனை
படைகளை
வைத்திருக்கின்ற
இறைவனுக்கு
எப்போதும்
வெற்றிதான்.
அவனுக்கு
எந்தக்
காலத்திலும்
தோல்வி
என்பதே
இல்லை.
அவன்
என்றும்
தோலாதோன்.
தன்
கையில்
உள்ள
படை
வலிமையினால்
இந்த
நிலை
அவனுக்கு
வந்தது
என்பது
இல்லை.
இயல்பாகவே
அவனுக்கு
அந்தத்
திறல்
உண்டு.
யாவற்றையும்
அழித்துத்
தனி
நிற்கும்
பேராற்றலையுடைய
பெம்மான்
ஆதலின்
பகைவர்களை
வென்று
நிற்பது
அவனுக்கு
ஒரு
பொருள்
அன்று.
ஆதலின்
கணிச்சியும்
மழுவும்
மூவாய்
வேலும்
கையிலே
கொண்டமையால்
அவன்
தோல்வி
யுறாதவன்
ஆக
வில்லை.
இயல்பாகவே
தோல்வியை
அறியாதவன்
அவன்.
அந்தத்
தோலாதோனுக்குக்
கையில்
கணிச்சியோடு
மழு
இருக்கிறது;
மூவாய்
வேலும்
உண்டு.
இகல்அட்டுக்
கையது
கணிச்சியொடு
மழுவே;
மூவாய்
வேலும்
உண்டுஅத்
தோலா
தோற்கே.
[
பகைவரை
அழித்துக்
கையிலே
இருப்பது
கணிச்சியோடு
மழு
என்னும்
படை;
தோல்வியே
இல்லாத
அப்பெருமானது
திருக்கரத்தில்
மூன்று
வாயை
உடைய
வேலாகிய
சூலமும்
உண்டு.
இகல்-பகை.
அட்டு-அழித்து
கையது
என்பது
ஒருமை.
மழு
கையது
என்று
கூட்டவேண்டும்.
கணிச்சி
என்பதைப்
பெரும்பாலும்
மழுவுக்கே
சொல்வதுண்டு.
இங்கே
மழுவைத்
தனியே
சொல்லியிருத்தலின்
கணிச்சி
வேறுபடை
ஆயிற்று.
குந்தாலி
என்று
அதற்குப்
பொருள்
எழுதுபவர்
பழைய
உரையாசிரியர்,
குந்தாலி
என்பது
ஒருவகைக்
கோடரி.
குத்தும்
இடத்தை
வாய்
என்று
சொன்னார்,
வாளில்வெட்டும்
புறத்தை
வாய்
என்று
சொல்வது
போன்றது
இது.
அஜிதன்
என்று
வடமொழியில்
இறைவனுக்கு
ஒரு
பெயர்
உண்டு.
தோலாதோன்
என்ற
பொருளை
உடையது
அது.]
எம்பெருமானுடைய
ஊர்தி
இடபம்.
மறையே
இடபமாக
வருமென்றும்,
அறமே
ஏற்றுவாகனமாக
வருமென்றும்
நூல்கள்
கூறும்.
திரிபுரத்தை
எரித்த
காலத்தில்
திருமால்
விடையாகி
வந்து
இறைவனைத்
தாங்கினன்
என்பது
புராண
வரலாறு.
ஊர்ந்தது
ஏறே
[சிவபெருமான்
எழுந்தருளும்,
ஊர்தி
விடையாகும்.
ஊர்ந்தது
- ஊர்ந்த
பொருள்,
ஏறு-
இடபம்.]
இறைவன்
உமாதேவிக்கு
நாயகன்.
உமாதேவியாகியு
சக்தி
இறைவனுடைய
அருளின்
வடிவம்.
இறைவனாகிய்
சத்தனிடம்
உள்ள
பண்பு
அருள்;
அதுவே
சக்தி
இறைவன்
எப்போதும்
அருள்
நிரம்பியிருப்பவன்,
அது
எப்போதும்
வெளிப்படையாகத்
தோன்றாது.
சிலகாலம்
அந்த
அருள்
மறைந்திருக்கும்.
சில
சமயங்களில்
ஓரளவு
வெளிப்படும்.
வேறு
சமயங்களில்
முழுமையாக
வெளிப்படும்.
சக்தி
இறைவனோடு
ஒன்றி
மறைந்திருத்தலும்
உண்டு;
அவன்
திருமேனியின்
இடப்
பகுதியிலே
ஒன்றி
விளங்குவதும்
உண்டு;
தனியே
வேறாக
இருத்தலும்
உண்டு.
எந்த
நிலையிலும்
சக்தியும்
சிவனும்
சேர்ந்தே
இருப்பார்கள்.
அந்தச்
சேர்க்கை
புலப்படாமல்
இருப்பதும்,
ஓரளவு
புலனாதலும்,
தெளிவாக
வெளிப்படுதலுமாக
மூன்று
வகையில்
அமையும்.
எப்படி
இருப்பினும்
இறைவனேடு
பிரியாமல்
நிற்பவள்
சக்தி;
எக்காலத்தும்
சேர்ந்திருப்பவள்
அப்
பெருமாட்டி.
சேர்ந்தோள்
உமையே.
[
எக்காலத்திலும்
இறைவனோடு
சேர்ந்திருப்பவள்
உமாதேவியாவாள்.
உமாதேவி
என்பது,
இறைவி
இமயமலை
அரசன்
புதல்வியாகத்
திரு
அவ்தாரம்
செய்தபோது
ஏற்ற
பெயர்.
அப்பெருமாட்டி
தவம்
செய்து
கொண்டிருந்தபோது
இறைவன்
எழுந்தருளி,
"உன்
தவம்
போதும்”
என்று
குறிப்பித்தானாம்.
அந்தக்
குறிப்பை
உள்ளடக்கியது
உமா
என்ற
திருநாமம்.
உமை
என்று
சொன்னாலும்
இங்கே
சக்தியையே
கொள்ளவேண்டும் ]
மேலும்
பெருந்தேவனார்.
சிவபெருமான்
திருக்
கோலத்தை
வருணிக்கிறார்.
இறைவனுடைய
திருமேனி
செவ்வண்ணம்
உடையது.
”சிவனெனும்
நாமம்
தனக்கே
உடைய
செம்மேனி
யம்மான்”
என்பது
அப்பர்
வாக்கு.
எல்லையில்லாது
படர்ந்த
செஞ்சோதிப்
பிழம்பைப்
போல
அம்மேனி
காட்சி
அளிக்கும்
அந்தி
வேளையில்
கதிரவன்
மேல்
கடலில்
மூழ்கும்போது
மேற்கு
வானம்
செம்மை
நிறம்
பெற்றுப்
பார்க்கப்
பார்க்கப்
பேரழகை
உடையதாக
இருக்கும்.
அந்தச்
செக்கர்
வானத்தைப்
போலச்
செம்மையும்
அழகும்
உடையது
சிவபிரான்
திருமேணி.
செவ்வான்
அன்ன
மேனி
[
மாலை
நேரத்தில்
தோற்றும்
சிவந்த
வானத்தைப்
போலச்
செவ்வண்ணமும்
அழகும்
உடைய
மேனி,
மேனியையும்
என்று
கொள்ள
வேண்டும்.
]
மேனியையும்
பிறவற்றையும்
உடைய
இறைவன்
என்று
சொல்ல
வருகிறார்.
இதுவரையில்
தாரன்,
கண்ணியன்
என்று
நிறுத்தி,
ஞாண்
மார்பினஃது,
நாட்டம்
நுதலது,
மழுகையது
என்று
கூறி,
மூவாய்
வேலும்
உண்டு
என்றும்,
ஊர்ந்தது
ஏறு,
சேர்ந்தோள்
உமை
என்றும்
தனித்
தனியே
முடியும்
வாக்கியங்களாக
அமைத்து
வருணித்தார்.
இனி,
சிவபெருமானுடைய
திருவடி
நீழலில்
உலகமெல்லாம்
வாழ்கின்றன
என்று
சொல்ல
வருகிறார்.
மேனி
முதலியவற்றையுடைய
சிவபெருமான்
என்று
அப்பெருமானுக்குரிய
சிறப்புகளைச்
சார்த்திச்
சொல்கிறார்.
ஆதலின்
இது
முதல்
வரும்
எல்லாம்
சேர்ந்து
ஒரே
வாக்கியமாக
அமைகின்றன.
இறைவனுடைய
செவ்வண்ண
மேனியிலே
கண்ணைச்
செருகிப்
பார்க்கிறோம்,
தன்னைத்
தியானிக்கின்றவர்களிடத்தில்
அவனுக்கு
அருள்
உள்ளம்
பிறக்கும்.
அப்போது
அவன்
முறுவல்
பூக்கிறான்.
அந்த
முறுவலின்
வெண்மை
யொளிவிட்டு
விளங்குகிறது.
மேனியின்
செவ்வண்ணத்தனூடே
அது
நன்றாகத்
தெரிகிறது.
மாலை
நேரத்துச்
செவ்வானிலே
வெள்ளிய
பிறை
முளைத்தாற்
போல
அந்தப்
புன்னகை
தோற்றுகிறது;
திருமேனி
நிறத்துக்கு
மாறுபட்டு
விளங்கும்
வெள்ளிய
கூர்மையான
பற்களெல்லாம்
சேர்ந்து
வானில்
இலங்கும்
பிறைபோலத்
தோற்றம்
அளிக்கின்றன.
அவ்வான்
இலங்குபிறை
அன்ன
விலங்குவால்
வைஎயிற்று.
[
அந்தச்
செக்கர்
வானிலே
தோன்றி
விளங்கும்
பிறையைப்
போன்ற,
திருமேனி
நிறத்தோடு
மாறுபட்ட
வெள்ளிய
கூரிய
பற்களையும்,
முன்னே
செவ்வான்
என்றமையால்
அவ்வான்
என்று
சுட்டினர்.
இலங்கு-விளங்கும்.
விலங்கு-மாறுபட்ட,
வால்
-
வெண்மையான ;
தூய்மையான
என்பதும்
பொருந்தும்,
வை-கூர்மை.
எயிறு-பல்.
எயிற்றையும்
என்ற
அர்த்தத்தில்
பின்வரும்
அந்தணன்
என்பதோடு
ஒட்டி
நிற்பதால்
எயிற்று
என்று
விகாரமாயிற்று.
எயிற்று
அந்தணன்
என்று
கூட்ட
வேண்டும்.
விலங்கு
வால்
வை
எயிறு
என்பதற்கு
மற்றப்
பற்களுக்கு
மாறுபட்டுத்
தோன்றும்
கோரப்
பற்கள்
என்று
பொருள்
சொன்னால்,
அது
இறைவனுக்குப்
பொருந்தாது.
]
சிவபிரானுடைய
சடையைக்
காட்டுகிறார்
புலவர்.
அது
செக்கச்
செவேலென்று
இருக்கிறது.
நெருப்புக்
கொழுந்துவிட்டாற்
போலப்
படர்ந்திருக்கிறது.
ஒரே
சடையாக
இராமல்
தனித்தனியே
இருக்கிறது.
அப்படி
இருப்பதைப்
புரி
சடை
என்று
சொல்வார்கள்.
நெருப்புக்
கொழுந்து
விட்டாற்
போன்ற
சடை,
பள
பளவென்று
ஒளிவிடும்
சடை,
புரிசடை
என்று
புலவர்
சடையின்
பெருமையைச்
சொல்கிறார்,
எரிஅகைந்
தன்ன
அவிர்ந்துவிளங்கு
புரிசடை.
[
நெருப்புக்
கொழுந்து
விட்டாற்போன்ற,
விட்டு
விளங்கும்,
தனித்
தனியே
உள்ள
சடையையும்.
அகைந்தன்ன
சடை
விளங்கு
சடை,
புரிசடை
எனத்
தனித்
தனியே
கூட்ட
வேண்டும்.
எரி-நெருப்பு.
அகைதல்-தழைத்தல்.
அகைந்தது
அன்ன
என்பது
அகைந்தன்ன
என்று
செய்யுளுக்காக
விகாரப்பட்டது.
அவிர்ந்து
விளங்குதல்-மிகுதியாக
ஒளிர்தல்.
புரிசடை
- ஒன்றாகச்
சேராமல்
தனித்தனியே
புரிபுரியாக
உள்ள
சடை.
மேனியையும்
எயிற்றையும்
சடையையும்
இன்னும்
சிலவற்றையும்
உடைய
இறைவன்
என்று
சொல்ல
வருகிறார்.]
மேனி
முதலாக
இறைவனுக்குரிய
சிறப்புக்களை
ஒரே
வாக்கியத்தில்
அடக்கிச்
சொல்லவந்த
பெருந்தேவனார்,
சடையைக்
கூறியவுடன்
அப்பெருமானுடைய
திருமுடித்
திங்களைப்
பற்றிச்
சொல்கிறார்,
வானத்திலே
உள்ள
திங்களுக்கும்
இறைவனுடைய
சென்னியிலே
உள்ள
திங்களுக்கும்
வேறுபாடு
உண்டு.
இறைவன்
பிறையை
அணிந்திருக்கிறான்.
வானில்
உள்ள
பிறை
மேலும்மேலும்
வளரும்.
வளர்வது
நல்லதுதான்;
ஆனால்
அது
வளர்ந்து
கொண்டே
போவதில்லை.
முழுமதியானவுடன்
மறுபடியும்
தேயத்
தொடங்குகிறது.
மக்கள்
இளமை
பெற்று
வளர்ந்து
பின்
முதுமை
பெற்று
இறக்கிறார்கள்.
மறுபடி
வேறு
பிறப்பு
எடுத்து
வளர்ந்தும்
தேய்ந்தும்
சுழலுகிறார்கள்.
திங்களும்
அப்படித்தான்
வளர்வதும்
தேய்வதுமாக
இருக்கிறது.
ஆனால்
இறைவனேடு
சார்ந்தபொருள்களுக்கு
இந்த
மாற்றம்
இல்லை.
அவனுடைய
சென்னியிலே
ஒளிரும்
திங்கள்
முதிர்வதே
இல்லை;
எப்போதும்
பிறையாகவே
இருக்கிறது;
அப்பெருமான்
திருவருளைப்
பெற்ற
மார்க்கண்டன்
என்றும்
பதினறாக
இருப்பது
போல,
என்றும்
இளமையோடு
இருக்கிறது.
அது
என்றும்
முதிர்வதே
இல்லை.
முதிர்வது
இன்மையால்
முற்றும்
முதிர்ந்த
பின்னர்
நிகழும்
தேய்வும்
அதற்கு
இல்லை.
இறைவன்
சென்னியிலே
சடை
நெருப்பின்கொழுந்து
போல
விளங்குகிறது;
அதனோடு
முதிராத்
திங்களோடு
அச்சென்னி
ஒளி
விடுகிறது.
முதிராத்
திங்களொடு
சுடரும்
சென்னி.
[
முதிராத
திங்களாகிய
பிறையோடு
ஒளிவிடும்
திருமுடியையும்.
முதிராத்
திங்கள்
என்றதனால்
பிறை
என்று
கொள்ள
வேண்டும்.
திங்கள்
இருப்பதனால்
அதன்
சுடரும்
சேர்ந்து
சென்னி
விளங்குகிறது.]
சிவபெருமான்
தன்
கருணையால்
மெய்ஞ்ஞானிகளாகிய
அருளாளர்களுக்கு
இவ்வாறெல்லாம்
உருவம்
கொண்டு
முன்
நின்று
அருள்
செய்கிறான்,
அவன்
அருளை
கண்ணுகக்
கண்ட
பெரியோர்கள்
தாம்
கண்ட
காட்சியை
ஏனையோர்க்கு
எடுத்துச்
சொன்னார்கள்;
அவர்களுடைய
அநுபவத்தை
ஆதாரமாகக்
கொண்டு
இறைவனுக்குத்
திருவுருவங்களும்
அவற்றை
வைத்து
வழிபடும்
கோயில்களும்
உண்டாயின.
அவை
எழுந்தாலும்
கடவுளை
முற்றக்
கண்டவர்
யாரும்
இல்லை.
கடலில்
ஒரு
துறையில்
மூழ்கினவர்,
“கடலில்
ஆடினேன்’
என்று
சொல்லிப்
பெருமைப்
படலாம்.
ஆனால்
கடல்
முழுவதையும்
கண்டு,
அவ்வளவிலும்
மூழ்கினேன்
என்று
சொல்ல
இயலாது.
கடவுளின்
திருக்கோலங்களைக்
கண்டு
வழிபட்டு
அருள்
பெற்றலும்
அப்பெருமானை
முற்றும்
உணர்ந்தோம்
என்று
சொல்பவர்
இல்லை.
மைப்படிந்த
கண்ணாளும்
தானும்
கச்சி
மயானத்தான்
வார்சடையான்
என்ப
தல்லால்
ஒப்புடையன்
அல்லன்;
ஒருவன்
அல்லன்
ஓர்ஊரன்
அல்லன்;
ஓர்உவமன்
இல்லி;
அப்படியும்
அந்நிறமும்
அவ்வண்
ணமும்
அவன்
அருளே
கண்ணாற்கக்
காணின்
அல்லால்
இப்படியன்
இந்நிறத்தன்
இவ்வண்
ணத்தன்
இவன்இறைவன்
என்றெழுதிக்
காட்டொ
ணாதே
என்னும்
அப்பர்
அருள்மொழி
இங்கே
நினைப்பதற்கு
உரியது.
ஆகவே,
சிவபெருமானுடைய
திருக்கோலத்தைப்
பலபடியாகக்
காட்டும்
பெருந்தேவனார்
இடையிலே
ஓர்
உண்மையை
நினைப்பூட்டுகிறார்.
அவனுடைய
வரலாறு
யாராலும்
அறிய
ஒண்ணாதது
என்று
சொல்கிறார்,
அவன்
எப்பொழுது
உண்டானான்,
யாரால்
வளர்க்கப்
பெற்றான்,
அவனுக்கு
ஆதி
உண்டா?-இத்தகைய
வினாக்களுக்கு
விடையே
இல்லை,
அந்த
வரலாறு
மிக
மிகப்
பழமை
யானது.
தொல்
முறை
மரபு
அது.
திருவாசகத்தின்
முதற்
பகுதிக்குச்
சிவபுராணம்
என்பது
பெயர்.
அதற்குப்
பெரியோர்கள், "சிவனது
அநாதி
முறைமையான
பழமை”
என்று
பொருள்
எழுதியிருக்கிறார்கள்.
அந்த
அநாதி
முறைமையான
பழமையையே
பெருந்தேவனார்
தொன்முறை
மரபு
என்று
சொல்கிறார்,
அந்த
மரபை
யாரும்
அறிந்திலர்.
அமுதத்தை
உண்டு
நெடுங்காலம்
வாழ்பவர்கள்
தேவர்கள்.
அவர்கள்
நெடுங்காலம்
மூப்பை
அடையாமல்
வாழ்பவர்கள்;
மூவாஅமரர்.
‘மனிதர்களுக்குத்
தெரியாத
பலவற்றை
அவர்கள்
அறிவார்கள்.
இறைவன்
மகாதேவன்
ஆயிற்றே;
ஒருகால்
அவனை
இந்தத்
தேவர்கள்
அறிந்திருக்கலாமே
என்று
எண்ணி
அவர்களைக்
கேட்டால்,
"எங்களுக்குச்
சிவபிரானுடைய
தொன்முறை
மரபு
தெரியாது”
என்றே
சொல்வார்கள்,
புலன்களை
அடக்கித்
தவம்
புரிந்து
வாழும்
முனிவர்கள்,
தேவர்கள்
அறியாத
ஞானம்
பெற்றவர்கள்
இறைவனை
அறிந்து
அவனுடைய
அருள்
பெற்றவர்கள்.
அவர்களைக்
கேட்டால்,
“நாங்கள்
அறிந்தது
எவ்வளவு
இறைவனை
யாரால்
அறிய
முடியும்?”
என்றே
அவர்களும்
சொல்வார்கள்.
இறைவன்
அருளைப்
பெருதவர்கள்
சிறிதும்
தடையின்றிப்
போலியாக
அவனை
அறிந்து
விடோமென்று
கூறுவார்களேயன்றி,
உண்மையில்
இறைவன்
அருளைப்
பெற்றவர்கள், 'இன்னும்
அறிந்திலேம்"
என்றே
சொல்வார்கள்.
இன்னும்
யாரைக்
கேட்கலாம்?
சிவபெருமானோடு
இருந்து
அணுக்கத்
தொண்டர்களாக
வாழும்
சிலரைப்
பற்றிப்
புராணங்கள்
சொல்கின்றனவே,
அவர்களைக்
கேட்கலாமா?
அவர்களிடம்,
“இறைவனுடைய
தொன்
முறை
மரபு
என்ன?”
என்று
கேட்டால்
அவர்களும்
”ஆர்
அறிவார்
எங்கள்
அண்ணல்
பெருமையை”
என்றே
கூறுவார்கள்.
இப்படி
யாரைக்
கேட்டாலும்,
"எனக்குத்
தெரியாது,
எனக்குத்
தெரியாது”
என்று
சொல்லும்படி
அமைந்தது
இறைவனுடைய
வரலாறு;
அது
யாரும்
அறியாத
அநாதியான
தொன்மையான
முறையை
உடையது.
மூவா
அமரரும்
முனிவரும்
பிறரும்
யாவரும்
அறியாத்
தொன்முறை
மரபின்
[
மூப்பை
அடையாத
தேவர்களும்
புலனை
அடக்கித்
தவம்
புரியும்
முனிவர்களும்
மற்றவர்களும்
யாவரும்
அறிய
இயலாத
அநாதி
முறையான
பழைய
வரலாற்றை
யும்
உடைய
(சிவன்
என்று
சொல்ல
வருகிறார்.
)
மூவா-மூத்தல்
இல்லாத;
மூ
என்பது
இந்தச்
சொல்லின்
பகுதி.
தொன்முறை
மரபு-பழைய
முறையான
வரலாறு.]
சிவபிரான்
தன்
இடையில்
பட்டும்
பொன்னாடையும்
அணியவில்லை.
புவித்தோலை
உடுத்திருக்கிறான்.
புலியின்
தோலில்
வரிவரியாகக்
கோடுகள்
இருக்கும்.
தாருக
வனத்து
முனிவர்
விடுத்த
புலியைக்
கொன்று
அதன்
தோலை
உடுத்தான்
என்று
புராணம்
கூறும்.
புலி
கொடுமைக்கும்
சினத்துக்கும்
அடையாளம்.
சினத்தை
அழிக்கும்
தன்மை
உடையவன்
இறைவன்
என்ற
கருத்து.
அவன்
புலித்தோலை
உடுத்தவன்
என்பதனால்
வெளியாவதென்றும்
கொள்ளலாம்.
வரிகிளர்
வயமான்
உரிவை
தைஇய.
(கோடு
விளங்குகின்ற
புலியினுடைய
தோலை
அணிந்த.
வரி-கோடு,
கிளர்தல்-மிக்குத்
தோன்றல்.
வய-வலி.
மான்
என்பது
விலங்குப்
பொதுப்
பெயர்.
வயமான
என்பது
மிக்க
வலிமையை
உடைய
சிங்கம்,
புலி,
யானை
ஆகியவற்றுக்கு
வரும்.
இங்கே
"வரிகிளர்’
என்று
அடை
கொடுத்தமையால்,
புலிக்கு
ஆயிற்று.
உரிவை-தோல்,
தைஇய-
அணிந்த,
தைஇய
அந்தணன்
என்று
அடுத்த
அடியில்
வரும்
சொல்லோடு
முடியும்.]
வயமான்
உரிவையை
அணிந்த
பெருமானுக்குச்
சாம
வேதத்தில்
விருப்பம்
அதிகம்.
நான்கு
வேதங்களில்
சாம
வேதம்
துதியாக
அமைந்தது;
இசையோடு
பாடுவதற்
குரியது.
இராவணன்
சாமகானம்
பாடி
இறைவனுடைய
சினத்தை
ஆற்றினான்.
அந்தச்
சாம
வேதத்தைப்
பிறர்
சொல்லக்
கேட்பதோடு
இறைவன்தானே
எப்போதும்
பாடிக்
கொண்டும்
இருக்கிறானாம்.
அறிந்து
பாடுவார்
பாட-
அறியாதவர்களும்
இப்படி
ஒன்று
இருப்பதை
உணரட்டும்
என்று
அவன்
பாடுகிறான்.
சாமவேத
கானம்
என்றும்
அறாத
மிடறு
அப்பெருமானுடைய
மிடறு.
அந்த
இசை
மிக
இனியது.
யாழைப்
போல
இன்னிசை
இசைக்கும்
தன்மையை
உடைய
மிடறு
இறைவனது
கண்டம்.
அது
நீல
கண்டம்;
நஞ்சை
உண்டு
கறுத்து
நீல
மணிபோல
விளங்குவது;
மணி
மிடறு,
காதிலே
கேட்க
இனிக்கும்
இசையைப்
பாடும்
யாழைப்
போன்றது;
கண்ணிலே
காண
இனிக்கும்
மணியைப்
போன்றது.
யாழின்
தன்மையை
உடைய
மணி
போன்ற
மிடறு
ஆதலால்
"யாழ்
கெழு
மணி
மிடறு"
என்று
புலவர்
அதைப்
பாராட்டுகிறார்,
செவ்வானைப்
போன்ற
மேனியையும்
பிறையைப்
போன்ற
எயிற்றையும்
நெருப்பைப்
போன்ற
சடையை
யும்
திங்களொடு
சுடரும்
சென்னியையும்
யாரும்
அறியாததொன்
முறை
மரபினையும்
உடையவனும்,
புலியுரிவையை
அணிந்தவனும்,
யாழ்த்
தன்மையை
படைய
மணி
போன்ற
மிடற்றை
உடையவனுமாகிய
சிவ
பிரானை
அந்தணன்
என்று
பெருந்தேவனார்
சொல்கிறார்,
’அறவாழி
அந்தணன்'
என்று
கடவுளைத்
திருவள்ளு
வர்
கூறினார்.
அந்தணர்
என்ற
சொல்லுக்கு
அழகிய
தட்பத்தை
உடையார்
என்று
பொருள்
விரிப்பர்
பரிமேலழகர்.
தட்டம்
என்றது
அருளை.
தன்பால்
சிறிதளவு
அன்பு
செய்தாலும்
அவர்
செய்த
பழைய
குற்றங்களை
மறந்து
அருள்
செய்தலால்
தட்பத்தைப்
பின்னும்
சிறப்பித்து
அந்தண்மையாக்கி
அந்தணன்
என்றார்.
’அளி
வந்த
அந்தணனை'
என்பது
திருவாசகம்,
அந்தணன்
என்பதற்கு
முனிவன்
என்றும்
ஒரு
பொருள்
உண்டு.
தவக்கோலத்துக்குரிய
ஆடையணிகளை
உடைமையால்
சிவபெருமான
”அருந்தவத்தோன்"
என்று
புறநானூற்றின்
கடவுள்
வணக்கத்தில்
பெருந்தேவனார்
கூறினார்.
ஆதலினால்
இங்கே
அந்தணன்
என்பதற்கு,
தவஞ்
செய்யும்
முனிவனுடைய
திருக்கோலத்தை
உடையவன்
என்று
சொல்வதும்
பொருத்தமாக
இருக்கும்.
கடவுளரில்
சிவபெருமான்
அந்தணன்
என்றும்
ஏனைய
கடவுளர்
அரசன்,
வணிகன்,
வேளாளன்
என்ற
மரபோ
டொக்க
நிற்பவரென்றும்
கூறுவாரும்
இருக்கின்றனர்.
அவர்
கொள்கையின்படி
சிவபெருமான்
நால்வகைப்
பிரிவில்
முதலில்
நிற்கும்
அந்தணன்
என்று
பொருள்
கூறுவதும்
உண்டு.
யாழ்கெழு
மணிமிடற்று
அந்தணன்.
[
எப்போதும்
சாமவேதத்தை
இசைத்தலால்
யாழின்
தன்மை
பொருந்திய
நீலமணி
போன்ற
திருக்கழுத்தை
யுடைய,
அழகிய
அருளை
உடைய
சிவபிரானுடைய (தாள்
என்று
சொல்ல
வருகிறார்)
யாழ்-யாழின்
தன்மை,
கெழு-பொருந்திய,
மணி-நீல
மணி.
மிடறு-கழுத்து.
யாழ்கெழு
மணிமிடறு
என்பதற்கு
‘சாமவேதம்
பாடின
மணிபோலும்
நிறத்தையுடைய
மிடறு’
என்று
பொருள்
உரைத்தார்
பழைய
உரையாசிரியர். ]
இறைவனுடைய
தாள்
நிழலிலிருந்து
எல்லா
உலகங்களும்
உண்டாயின
என்று
ஐங்குறுநூற்றுக்
கடவுள்
வாழ்த்தில்
பெருந்தேவனார்
பாடியிருக்கிறார்,
நீல
மேனி
வாலிழை
பாகத்து
ஒருவன்
இருதாள்
நிழற்கீழ்
மூவகை
உலகும்
முகிழ்த்தன
முறையே
என்பது
அந்தப்பாட்டு.
அவ்வாறு
தோன்றிய
உயிர்க்
கூட்டங்கள்
எங்கே
வாழ்கின்றன?
எங்கே
தம்
செயலைச்
செய்து
தங்குகின்றன?
இந்தக்
கேள்விகளுக்கு
இங்கே
விடை
கூறுகிறார்,
கடலிலே
பிறந்த
மீன்கள்
வேறு
இடத்திலே
வாழ்வதில்லை,
நீரிலே
தோன்றி
அந்த
நீரிலேயே
வாழ்கின்றன,
அவ்வாறே
எந்தத்
திருவடி
நிழலிலிருந்து
உயிர்க்
கூட்டங்கள்
தோற்றினவோ
அங்கே
தான்
தங்கள்
தங்கள்
வாழ்க்கையில்
ஈடுபட்டுத்
தங்குகின்றன.
இறைவனே
எல்லாவற்றிற்கும்
மூலமாகி
நிற்பவன்.
அவனே
எல்லாவற்றையும்
தன்
அருள்
நிழற்
கீழ்
வைத்துப்
பாதுகாப்பவன்.
பட்சிகள்
தம்
குஞ்சுகளைத்
தம்
சிறகுக்குள்
அடக்கிப்
பாதுகாப்பதுபோல
இறைவன்
தன்
தாள்
நிழலில்
உலகங்களையெல்லாம்
தங்கச்
செய்து
பாதுகாக்கிறான்,
மரம்
வைத்தவன்
தண்ணிர்
ஊற்றிக்
காப்பாற்றுவதுபோல,
தன்
தாளிலிருந்து
புறப்படவிட்ட
உலகங்களை
அதன்
நிழற்
கீழ்
வைத்து
வேண்டியவற்றை
அருள்
செய்து
வாழச்
செய்கிறான்.
அவனுடைய
அருளாட்சியின்
கீழ்
உலகம்
தங்குகின்றது.
அவன்
தாள்
நிழலின்
கீழே
உலகம்
தங்கி
நிற்கிறது.
தாவில்
தாள்நிழல்
தவிர்ந்தன்றால்
உலகே.
[
அந்தணனுடைய
கேடு
இல்லாத
திருவடி
நிழலின்
கீழே
உலகு
தங்கியது.
தா-கேடு.
தாள்
நிழல்
என்றது
இறைவனுடைய
அருளாட்சிக்கு
அறிகுறியாக
நின்றது.
'அரசனுடைய
குடை
நிழலில்
குடிமக்கள்
வாழ்கிறார்கள்'
என்பதுபோல
நிற்பது
இது.
தவிர்ந்தன்று -
தங்கியது.
ஆல்;
அசை.
உலகு -
உயிர்க்கூட்டம். "ஆதலால்
இவ்வுலகிற்கு
இடையூறு
இல்லை"
என்று
கருத்துரைப்பர்
பழைய
உரையாசிரியர்.]
இந்தப்
பாடலில்,
இறைவன்
மூவா
அமரரும்
முனிவரும்
பிறரும்
யாவரும்
அறியாத்
தொன்முறை
மரபினை
உடையவனாக
இருப்பினும்,
அவன்
அருளே
கண்ணாகக்
கண்ட
பெரியோர்களுக்கு
அவன்
உருவுடையவனாகி
எழுந்தருளுவான்
என்பதும்,
அவ்வாறு
எழுந்தருள்வது
உருவத்தையே
பற்றுக்
கோடாகப்பற்றி
நினைக்கும்
மனத்தை
உடைய
ஆருயிர்களுக்கு
அருள்
செய்யும்
நிமித்தம்
என்பதும்
குறிப்பாகப்
புலப்பட்டன.
அவன்
திருவுருவச்
சிறப்பைச்
சொல்லும்
வாயிலாக
அவள்
திருமுடியையும்
அதில்
உள்ள
கண்ணி
சடை
பிறை
ஆகியவற்றையும்,
அவன்
திருநுதலையும்
அதில்
ஒளிரும்
இமையா
நாட்டத்தையும்,
திருக்கழுத்தையும்
அதில்
உள்ள
நஞ்சையும்
அதில்
எப்போதும்
இசைக்கும்
சாம
கீதத்தையும்,
அவன்
புன்முறுவலையும்,
அவன்
திருமார்பையும்
அதன்கண்
உள்ள
தாரையும்
பூணூலையும்,
அவன்
அணிந்த
புலித்தோலாடையையும்,
அவன்
திருக்கரங்களையும்
அவற்றில்
உள்ள
கணிச்சி
மழு
சூலம்
என்பவற்றையும்,
மாதிருக்கும்
பாதி
யையும்,
இடப
வாகனத்தையும்
எடுத்துச்
சொல்கிறார்
புலவர்.
இத்தகைய
அந்தணனது
திருவடி
நிழலின்
கீழே
உலகத்து
உயிர்கள்
யாவும்
தங்கள்
வாழ்க்கையை
நடத்தித்
தங்குகின்றன
என்று
முடிக்கிறார்.
நாம்
தங்கி
வசிப்பதற்கு
ஒரு
வீடு
இருக்கிறது.
அது
ஒரு
தெருவில்
இருக்கிறது.
அந்தத்
தெரு
ஓர்
ஊரில்
இருக்கிறது.
நாம்
அந்த
வீட்டில்
இருக்கிறோம்;
அந்தத்
தெரு
வில்
இருக்கிறோம்;
அந்த
ஊரில்
இருக்கிறோம்
இன்னும்
மேலே
விரித்துக்கொண்டே
போனல்
தாலுகா,
ஜில்லா,
ராஜ்யம்,
நாடு,
கண்டம்,
உலகம்
என்று
விரியும்.
அதற்கு
அப்பால்
புவனம்,
அண்டம்
என்பன
விரியும்.
இத்தனைக்கும்
மேலாக
இத்தனை
விரிவான
பகுதிகளையெல்லாம்
தனக்குள்
அடக்கி
வைத்திருப்பது
இறைவன்
திருவடி.
ஆதலின்
எந்தப்புவனத்தில்
வாழ்ந்தாலும்
இறைவன்
திருவடி
நிழலுக்குப்
புறம்பாக
இருக்க
முடியாது.
இதன்
உணர்ந்தே, "உலகம்
யாவும்
அவன்
தாள்
நிழலில்
தங்கி
யிருக்கின்றன”
என்றார்,
கார்வினி
கொன்றைப்
பொன்நேர்
புதுமலர்த்
தாரன்,
மாலையன்,
மலைந்த
கண்ணியன்;
மார்பி
னஃதே
மையில்
நுண்ஞாண்;
நுதலது
இமையா
நாட்டம்;
இகல்
அட்டுக்
கையது
கணிச்சியொடு
மழுவே;
மூவாய்
5
வேலும்
உண்டுஅத்
தோலா
தோற்கே;
ஊர்ந்தது
ஏறே;
சேர்ந்தோள்
உமையே,
செவ்வான்
அன்ன
மேனி,
அவ்வான்
இலங்குபிறை
அன்ன
விலங்குவால்
வைஎயிற்று,
எரி
அகைந்
தன்ன
அவிர்ந்துவிளங்கு
புரிசடை
10
முதிராத்
திங்களொடு
சுடரும்
சென்னி,
மூவா
அமரரும்
முனிவரும்
பிறரும்
யாவரும்
அறியாத்
தொன்முறை
மரபின்,
வரிகிளர்
வயமான்
உரிவை
தைஇய
யாழ்கெழு
மணிமிடற்று
அந்தணன்
15
தாவில்
தாள்
நிழல்
தவிர்ந்தன்றால்
உலகே.
[
இறைவன்
கொன்றைத்
தாரையுடையவன்,
மாலையை
உடையவன்,
கண்ணியை
உடையவன்;
அவன்
மார்பிலே
உள்ளது
நுண்ஞாண்;
நுதலிலே
உள்ளது
நாட்டம்,
கையிலே
இருப்பது
கணிச்சியொடு
மழு;
அத்தோலா
தோனுக்கு
மூவாய்
வேலும்
உண்டு;
அவன்
ஊர்ந்தது
ஏறு;
அவனைச்
சேர்ந்தோள்
உமை;
செவ்வான்
அன்ன
மேனியையும்
வையெயிற்
றெயும்
புரிசடையையும்
சென்னி
யையும்
தொன்முறை
மரபையும்
உடைய,
உரிவை
தைஇய,
மணிமிடற்றையுடைய
அந்தணனுடைய
தாள்
நிழலில்
உலகு
தங்கியது.
இவ்வாறு
கூட்டிப்
பொருள்
செய்யவேண்டும். ]
கொன்றைத்தாரன்,
கொன்றை
மாலையன்,
கொன்றைக்
கண்ணியன்,
நுண்ஞாண்
மார்பன்,
கண்ணுதல்,
கணிச்சியங்கரத்தான்,
மழுவாட்
படையோன்,
சூலபாணி,
விடையூர்பெருமான்,
உமாபாகன்,
செக்கர்
மேனியன்,
வாலெயிற்றோன்,
புரிசடையோன்,
மதிமுடித்தோன்,
அநாதி,
அறிவரியான்,
அமரர்க்கரியான்,
புலியுரியாடையன்,
சாமகீதன்,
நீலகண்டன்,
அந்தணன்,
உலகுடைய
கழலான்
என்ற
திருநாமங்களால்
பெறப்படும்
இயல்புகளை
யெல்லாம்
இந்தப்பாடல்
சுட்டிக்
காட்டுகின்றது.
2.
இன்ப
மலை
எங்கே
பார்த்தாலும்
காடு;
பூமரங்கள்;
பழ
மரங்கள்.
வானை
முட்டி
வளர்ந்த
மரங்கள்
அடர்த்தியாக
நின்றன.
மழைக்கு
அங்கே
பஞ்சம்
ஏது?
மலைச்சாரலில்
அருவி
ஒல்லெனப்
பாய்ந்து
வருகிறது.
குறிஞ்சி
நிலத்தின்
முழு
அழகும்
அங்கே
களி
நடம்
புரிகின்றது.
எத்தனை
வகையான
மரங்கள்!
மலையருவி
நீரின்
ஊட்டத்தால்
மதமதவென்று
வளர்ந்திருக்கும்
வாழை
மரங்கள்
ஒருசார்.
வாழையின்
இலையைப்
பார்த்தாலே
அதன்
வளப்பம்
தெரியும்.
மிகமிக
நீளம்;
மிகமிக
அகலம்.
கொழுமைக்கு
அடையாள
மென்று
அந்த
இலையைச்
சொல்லலாம்.
மலைச்சாரலில்
வளரும்
அத்தனை
மரஞ்
செடி
கொடிகளின்
வளத்தை
எழுதிய
ஏடு
என்று
கூட
அதைச்
சொல்லலாம்.
அத்தகைய
கொழுவிய
இலையையுடைய
வாழை
மரத்தின்
குலை
எப்படி
இருக்கிறது?
எவ்வளவு
பெரிய
குலை
ஒரு
குலையில்
எத்தனை
காய்கள்
என்று
எண்ணிப்
பார்த்தால்
அதன்
பெருமை
நன்றாகத்
தெரியும்,
பெருங்குலை;
காய்கள்
பெரியனவாக
இருப்பதோடு
மிகுதியாகவும்
இருக்கின்றன.
கோழிலை
வாழையின்
பெருங்குலையை
அங்கே
வெட்டுவார்
யார்?
அந்த
மலைக்காட்டு
வளம்
முழுவதையும்
பயன்படுத்திக்
கொள்ளப்
போதிய
மக்கள்
அங்கே
இல்லை.
வாழைக்
குலை
காய்த்து
முதிர்ந்து
பழுக்கிறது.
பழுத்து
ஒவ்வொரு
கணியாக
உதிர்கின்றது.
தானே
பழுத்த
பழத்தின்
இனிமையை
எப்படி
வார்த்தைகளால்
சொல்வது?
அதோ
மலைச்சாரலின்
மற்றொரு
பக்கத்தில்
அடி
முதல்
நுனிவரையில்
கொத்துக்
கொத்தாகப்
பழுத்த
பலாமரங்கள்
நிற்கின்றன.
பலாப்பழத்தின்
மணம்
சாரல்
முழுதும்
கம்மென்று
வீசுகிறது.
நன்றாகக்
கனிந்து
வெடித்த
பழங்கள்
தொங்குகின்றன.
பழத்தைக்
கீறிச்
சுளையை
எடுக்கும்
இடர்ப்பாடே
வேண்டாம்.
வெடித்த
பழத்திலிருந்து
சுளையை
எடுப்பது
எளிது
அல்லவா?
இதைக்
கண்டால்
இரண்டு
சுளையை
யாவது
உண்ணாமல்
போக
முடியுமா?
யாரேனும்
அந்த
வழியே
போனால்
இந்தப்
பலாப்பழங்கள்
அவர்களை
அழையாமல்
அழைக்கும்.
எத்தனை
அவசரமான
காரியம்
இருந்தாலும்
பழத்தைக்
கண்டுவிட்டால்
அவர்களுக்கு
மேலே
கால்
எழாது.
நாவிலே
நீர்
ஊறும்.
உண்ணும்
தன்மையையுடைய
மனிதர்களைத்
தங்கள்
போக்கிலே
செல்ல
வொட்டாமல்
தடுத்து
நிறுத்துவது
மலைச்சாரற்
பலாப்பழம்.
பல
பல
பூமரங்களும்
அங்கே
நிறைய
இருக்கின்றன.
தேன்
நிரம்பிய
சிறு
கிண்ணங்களைப்
போன்ற
அந்தப்
பூக்களோடு
உறவாடித்
தாதுரதித்
தேனுண்ணும்
வண்டி
னங்களுக்கும்
அங்கே
குறைவு
இல்லை.
மலர்தோறும்
தேனைத்
தொகுத்து
மலைச்சாரலில்
பெரிய
பெரிய
தேன்
அடைகளை
வைத்திருக்கின்றன.
மலையிலே
அச்சமின்றி
மனம்போன
போக்கிலே
வண்டுகள்
வைக்கும்
தேனிழுல்கள்
மிகப்
பெரியனவாக
இருக்கின்றன.
அவற்றைப்
பெருந்தேன்
என்று
புலவர்கள்
சொல்வார்கள்.
அந்தத்தேன்
முதிர்ந்து
விளைந்து
கீழே
சொட்டுகின்றது.
தேனிறால்களே
அடை
அடையாக
விழுகின்றன.
கீழே
பாறையில்
குழிவான
இடங்களில்
சிறிய
சிறிய
சுனைகள்
இருக்கின்றன.
அந்தச்
சுனைகளில்
மேலிருந்து
ஒழுகிய
தேனும்
விழுந்த
தேனடை
களும்
கலந்து
நாளடைவில்
முதிர்கின்றன;
புளிக்கின்றன.
உண்டவர்களுக்குக்
கள்ளுண்ட
மயக்கத்தைத்
தரும்படி
சுனைநீரோடு
கலந்த
தேன்
இருக்கிறது.
அதை
நீர்ச்சுனை
என்பதைவிடத்
தேன்சுனை
என்று
சொல்வதே
பொருத்தம்.
வாழையும்
பலாவும்
மலிந்த
அந்த
மலைச்சாரலிலே
சந்தன
மரங்களும்
உயர்ந்து
வளர்ந்திருக்கின்றன.
அவற்றின்மேல்
மிளகு
கொடிகள்
படர்ந்துள்ளன.
சந்தன
மரங்களுக்கு
அருகில்
பலபல
மலர்
மரங்கள்.
மலர்கள்
கீழே
உதிர்ந்து
எங்கும்
பூப்படுக்கை
விரித்தாற்
போன்ற
அழகிய
தோற்றத்தைத்
தருகின்றன.
என்ன
அழகான
இடம்!
எத்தனை
இன்பமான
மலைச்
சாரல்!
இந்த
இனிய
பொருள்களைத்
துய்க்க
வருவார்
யாரும்
இல்லையா?
மனிதர்கள்
வருவது
அருமை.
ஆனால்
மரம்
இருக்குமிடத்திலே
மரமேறும்
குரங்குகள்
இருப்பது
இயற்கை.
மரங்களை
அரண்மனையாகவும்
ஊசலாகவும்
உணவுச்சாலையாகவும்
கொண்டு
வாழும்
மந்திகளும்
கடுவன்களும்
இந்தக்
காட்டில்
இருக்கின்றன.
இதோ
ஒரு
குரங்கு;
அது
ஆண்
குரங்கு;
கடுவன்.
அதற்குக்
கிடைத்த
பேற்றை
என்னவென்று
சொல்வது!
மிகவும்
பசியாக
இருந்தது
போலும்!
தானே
பழுத்து
உதிரும்
வாழைக்
கனியைத்
தின்றது.
ஒரே
சுவையை
உடைய
உணவைத்
தின்பது
அவ்வளவு
சிறப்பு
அல்லவே.
வாழையின்
கோள்
(காய்)
மிகு
பெருங்குலையிலிருந்து
உதிர்ந்த
தீங்கனியை
உண்டவுடன்
அருகிலே
இருந்த
பலாப்பழம்
அதை
அழைத்தது.
பலாச்சுளையையும்
வயிறு
நிரம்பத்
தின்றது.
இப்போது
அதன்
பசி
போய்விட்டது.
மிக
இனிய
கனிகளாதலின்
அளவுக்கு
மேலே
தின்று
விட்டது.
அதனால்
அதற்குக்
கடுமையான
தாகம்
எடுத்தது.
அங்கே
பாறையிலே
ஓர்
ஆழமான
சுனை
இருந்தது.
அங்கே
சென்று
அதன்
நீரை
உண்டது.
அது
நீரா?
புளித்த
தேன்
அல்லவா.
சுனையிலே
முதிர்ந்து
விளைந்த
தேனைக்
குடித்தது.
மற்றச்
சமயமானல்
உணவு
கொண்டவுடன்
மரத்தின்
மேல்
ஏறித்
தாவி
விளையாடும்;
இல்லையெனில்
மரத்தில்
ஒரு
கவட்டிலே
தூங்கும்.
இங்கே
அயலில்
சந்தன
மரம்
இருக்கிறது;
ஏறலாம்,
வழுக்காமல்
பற்றிக்கொண்டு
ஏறுவதற்கு
அந்த
மரத்தின்மேல்
மிளகு
கொடி
படர்ந்திருக்கிறது.
வயிறு
நிரம்பப்
பழங்களைத்
தின்று
சுனையிலே
தேங்கி
யிருந்த
தேனைக்குடித்த
கடுவனுக்கு
மயக்கமாக
இருந்தது.
கண்ணிமைகள்
கனந்தன;
கீழே
இழுத்தன.
சந்தன
மரத்தை
ஏறெடுத்துப்
பார்த்தது
குரங்கு,
அதன்மேல்
ஏறலாம்
என்று
நினைப்பதற்கு
முன்
கண்ணைச்
சுற்றியது,
மயக்கம்.
அயலில்
பல
மலர்கள்
உதிர்ந்து
படுக்கை
போட்டாற்போல்
மெத்தென்று
இருந்தன
அல்லவா?
மணமுள்ள
மெத்தென்ற
அந்த
மலர்ப்
படுக்கையிலே
படுத்ததுதான்
தாமதம்;
அப்படியே
உறங்கிவிட்டது,
அது
தேன்
என்று
தெரியாமலே
சுனையிலுள்ள
முதிர்ந்த
தேனை
உண்டது.
தெரியாமல்
உண்டால்
என்ன?
அந்தத்
தேன்
தன்
வேலையைச்
செய்யத்
தொடங்கியது.
கடுவன்
இப்போது
கனியும்
தேனும்
உண்ட
மயக்கத்தில்
ஆழ்ந்து
மலர்ப்படுக்கையில்
உலகையே
மறந்து
தூங்கியது.
இயற்கை
எழில்
பொங்கும்
சூழலிலே
பெரு
முயற்சி
இல்லாமலே
கடுவன்
இன்ப
உறக்கத்தில்
அழுந்திக்
கிடக்கும்
இத்தகைய
அரிய
காட்சியை
எங்கே
காணலாம்?
தலைவனுடைய
மலையிலே
காணலாம்.
அந்த
ஆணழகன்
தன்னுடைய
குறிஞ்சி
நிலத்தைப்
பற்றியும்
மலைச்சாரற்
பெருவளத்தைப்
பற்றியும்
தன்னுடைய
காதலியிடம்
அவ்வப்போது
சொல்வதுண்டு.
அவற்றையெல்லாம்
கேட்டுப்
பெருமிதம்
கொண்ட
தலைவி
தன்
தோழியிடம்
அந்தக்
காட்சிகளை
எடுத்துச்
சொல்வாள்.
இப்படி
ஒருவர்க்கு
ஒருவர்
சொல்வதனால்,
தலைவனுடைய
நாட்டுக்குச்
செல்லாமல்
இருந்தாலும்
அந்த
நாட்டின்
வளப்பத்தைத்
தலைவியும்
தோழியும்
நன்கு
அறிந்திருந்தார்கள்.
திணைப்புனம்
காக்கும்
வேலையில்
ஈடுபட்டிருந்தாள்
அந்த
இள
நங்கை.
அப்போதுதான்
அந்தக்
கட்டிளங்
காளை
அவளைக்
கண்டான்.
இருவர்
கண்களும்
ஒன்றை
ஒன்று
கவ்வின;
உள்ளம்
ஒன்றுபட்டன.
பிறவி
தோறும்
வந்துள்ள
தொடர்பாதலின்
காந்தமும்
இரும்பும்
ஒன்று
பட்டதுபோல
அவ்விருவரும்
ஒன்று
பட்டனர்.
பகற்காலத்
தில்
காதலி
தினைப்புனம்
காக்க
வருவாள்.
அப்போது
காதலனும்
அங்கே
வந்து
காதலியைக்
கண்டு
அளவளாவி
விட்டுச்
செல்வான்.
இந்த
இரண்டு
காதலர்களுக்கும்
உறுதுணையாகக்
காதலியின்
தோழி
இருந்தாள்.
காதலியின்
இன்ப
துன்ப
உணர்ச்சிகளை
உணர்ந்து
காதலனிடம்
குறிப்பாக
அவற்றை
எடுத்துரைக்கும்
திறமை
அந்தத்
தோழியிடம்
இருந்தது.
இத்தக்
களவுக்
காதல்
நிகழ்ந்து
கொண்டு
வந்த
போது
காதலனும்
காதலியும்
உலகையே
மறந்து
எதிர்
காலத்தையும்
மறந்து
காதல்
உலகத்தில்
உலவினர்.
தோழிக்கு
மாத்திரம்
எதிர்காலத்தைப்
பற்றிய
நினைவு
இருந்து
கொண்டே
இருந்தது.
தன்னுடைய
தலைவி
தன்
உள்ளத்துக்கு
இசைந்த
காதலனைப்
பெற்றது
பற்றி
அவளுக்கு
அளவற்ற
உவகை
உண்டாயிற்று.
அது
நாளுக்கு
நாள்
வளர்ந்து
வருவதை
யும்
அவள்
உணர்ந்தாள்.
ஆனால்
உலகம்
இந்தக்
காதற்
பயிர்
வளர்வதற்குத்
துணையாக
இருக்க
வேண்டுமே!
திணைப்புனத்தில்
ஒவ்வொரு
நாளும்
காதலர்கள்
சந்தித்தார்கள்.
ஆனால்
இந்தச்
சந்திப்பு
எத்தனை
நாளைக்கு
நீட்டிக்கும்?
தினைப்
பயிர்
விளைந்துவிட்டால்
கதிர்களை
அறுத்து
விடுவார்கள்.
பிறகு
அங்கே
காவல்
வேண்டிய
தில்லை.
தலைவிக்கு
அவ்விடத்தில்
வேலை
இல்லாமற்
போய்
விடும்.
திணைப்புனம்
காக்கும்
வேலை
உள்ளவரையில்
தலைவன்
பகற்
காலத்தில்
தலைவியைக்
கண்டு
பேசி
அளவளாவ
இயலும்,
அந்தக்
காவல்
நின்றுவிட்டால்
தலைவி
வீட்
டோடு
இருக்க
வேண்டியவளே.
தினப்புனத்தில்
காதலர்
இருவரும்
சந்திப்பதற்கு
வசதிகள்
இருந்தன.
தலைவி
வீட்டுக்குப்
போய்விட்டால்
அவர்கள்
எவ்வாறு
சந்திக்க
முடியும்?
பகலில்
சந்திப்பதென்பது
மனத்தாலும்
நினைப்பதற்கு
உரியதன்று.
இரவிலோ
கட்டுக்
காவலைக்
கடந்து
இருவரும்
சந்திப்பது
எளிதன்று.
‘என்ன
செய்தால்
நல்லது?’
என்ற
சிந்தனையில்
தோழி
ஆழ்ந்தாள்.
இந்தக்
களவுக்
காதலை
விட்டுவிட்டுத்
திருமணம்
செய்துகொண்டு
கணவன்
மனைவியாக
வாழ்வதுவே
எல்லாவற்றிற்கும்
மேலானது.
அதுவே
அச்சம்
அற்ற
வாழ்க்கை;
அறம்
நிரம்பிய
வாழ்க்கை’
என்ற
முடிவுக்கு
அவள்
வந்தாள்.
ஆனால்
திருமணம்
நிகழ்வதற்குத்
தோழியின்
விருப்பம்
மாத்திரம்
இருந்தால்
போதுமா?
தலைவனுக்கு
அந்த
எண்ணம்
தோன்ற
வேண்டும்.
அவன்
தக்கவர்களை
அனுப்பித்
தலைவியின்
தந்தையிடம்
பெண்
பேசும்படி
செய்ய
வேண்டும்.
"இனிமேல்
இவளை
இங்கே
காண
முடியாது,
ஆதலால்
இவளைத்
திருமணம்
செய்துகொண்டு
இல்வாழ்க்கை
நடத்தத்
தொடங்குங்கள்"
என்று
தலைவனிடம்
அவள்
சொல்வது
தக்கது
அன்று.
என்ன
இருந்தாலும்
அவள்
தலைவியின்
தோழிதானே?
இனி
இந்தக்
களவுக்
காதல்
நீட்டிக்
காது"
என்று
சொன்னால்
தலைவன்
உள்ளம்
வருத்தத்தை
அடையுமே!
வெளிப்படையாக, ”நீ
மணம்
புரிந்து
கொள்”
என்று
சொல்வதைவிட,
'இனிப்
பகலில்
இவளைக்
காண
முடியாது;
இரவிலே
வந்து
காணலாம்;
அப்படிச்
செய்வதிலும்
பல
இடர்ப்பாடுகள்
உள்ளன
என்று
குறிப்பாகச்
சொன்னல்
நல்லறிவுடைய
காதலன்,
‘இனி
நம்
காதலியை
மணம்
செய்து
கொள்வதே
முறை
என்ற
முடிவுக்கு
வருவான்.
தோழியின்
சிந்தனையிலே
தெளிவு
ஏற்பட்டது.
இப்படி
ஒரு
வழி
புலப்பட்டது.
தினை
விளைந்து
விட்டமையால், ‘இனிமேல்
நீங்கள்
புனங்காவலுக்குச்
செல்ல
வேண்டாம்;
வீட்டிலே
இருங்கள்’
என்று
தலைவியின்
தாயும்
சொல்லி
விட்டாள்,
இன்னும்
ஓரிரண்டு
நாட்
களில்
அவர்கள்
தினைப்புனத்துக்கு
வருவது
நின்றுவிடும்.
இதுவே
தலைவனிடம்
தன்
கருத்தைப்
புலப்படுத்துவதற்குரிய
செவ்வியென்று
தோழி
தெளிந்தாள்.
தலைவன்
வழக்கம்போல
அன்று
வந்தான்.
தலைவியைக்
கண்டு
அளவளாவிய
பிறகு
தோழி
அவனைத்
தனியே
சந்தித்தாள்.
அவனிடம்
இன்று
எவ்வாறேனும்
தன்
கருத்தைப்
புலப்படுத்திவிடுவது
என்ற
உறுதியோடு
இருந்தாள்.
மெல்லப்
பேசலானாள்.
தோழி:
இன்று
என்
தலைவி
சற்றுச்
சோர்வு
அடைந்தவளைப்
போல
இருக்கிறாள்.
அவள்
மனநிலை
சரியாக
இல்லை.
தலைவன்
: ஏன்?
என்ன
காரணம்?
என்னிடம்
யாதும்
கூறவில்லையே!
தோழி
: மகளிர்
தம்
உள்ளத்
துயரை
வெளிப்படையாக
எடுத்துச்
சொல்லமாட்டார்கள்.
குறிப்பால்
அதை
உணர்ந்து
ஆகவேண்டியவற்றைச்
செய்வது
ஆடவர்
கடமை.
தலைவன்:
அவள்
சோர்வுக்குக்
காரணம்
என்ன?
தோழி
: இனி
எம்பெருமான்
அவளே
இங்கே
வந்து
கண்டு
அளவளாவ
இயலாது.
தலைவன்:
ஏன்?
என்
உள்ளம்
தெருமரும்படி
செய்யாதே.
உள்ளதைத்
தெளிவாகச்
சொல்லிவிடு.
தோழி:
நாங்கள்
இங்கே
நாள்தோறும்
வருவது
தினைப்
புனத்தைக்
காவல்
புரிவதற்காகத்தான்.
தலைவன்:
ஆம்;
அது
எனக்குத்
தெரியாதா?
தோழி:
இதோ
தினைப்
பயிரைப்
பாருங்கள்.
கதிர்களெல்லாம்
முற்றி
விளைந்து
விட்டன.
இனி
இவற்றை
அறுத்து
வீடுகொண்டு
போய்ச்
சேர்க்க
வேண்டுவது
தான்.
இனிமேல்
எங்களுக்கு
வேலை
இல்லை.
ஆகையால்
நாளை
முதல்
நாங்கள்
இங்கே
வரமாட்டோம்.
தலைவன்
:
அப்படியானால்.?
தோழி
: எங்கள்
தாய்,
”இனிமேல்
நீங்கள்
தினைப்புனம்
காக்கப்
போக
வேண்டாம்.
வீட்டிலே
இருங்கள்"
என்று
சொல்லி
விட்டாள்.
இனி
நாங்கள்
இல்லிலே
செறிந்து
கிடப்போம்
தோழி
:
அப்படியானல்
நான்
எப்படி
உங்களை
வந்து
காண்பது?
தோழி
:
தங்களுக்கு
அரியது
யாது?
தாங்கள்
மனம்
வைத்தால்
தாங்கள்
குறிக்கும்
இன்பத்தைப்
பெறலாமே!
தலைவன்:
எப்படிப்
பெறுவது?
தோழி
:
தங்களுடைய
நாட்டில்
மலையிலே
வாழும்
பல்
வேறு
விலங்கும்
தாம்
குறியா
இன்பத்தை
எளிதிலே
எய்தும்
என்று
சொல்கிறார்கள்.
அப்படி
இருக்க,
அந்த
நாட்டுக்குத்
தலைவராகிய
தங்களுக்குத்
தாங்கள்
மனத்தாலே
நினைத்து
இன்னது
செய்ய
வேண்டு
மென்று
ஆராய்ந்து
திட்டமிட்டு
முயன்றால்
தாங்கள்
குறித்த
இன்பம்
எப்படி
அரிதாகும்?
தலைவன்
: என்
நாட்டில்
நிகழும்
நிகழ்ச்சியை
நீ
எவ்வாறு
அறிந்தாய்?
தோழி
: அந்த
நாட்டுக்கு
உரியவர்
தமக்கு
உரியவரிடம்
சொல்ல,
அவர்
எனக்குச்
சொன்னார்.
வாழைப்
பழத்தையும்
பலாப்
பழத்தையும்
வயிறு
நிறையத்
தின்று
விட்டுப்
பாறை
நெடுஞ்
சுனையில்
விளைந்த
தேறலை
அறியாது
உண்ட
கடுவன்
அயலில்
உள்ள
மிளகு
கொடி
படரும்
சந்தன
மரத்தின்மேல்
ஏறாமல்,
மணம்
பொருந்திய
பலர்க்
குவியலில்
மகிழ்ந்து
கண்படுக்கும்
மலைநாடு
தங்கள்
நாடு
என்பதை
உணர்ந்தேன்.
இவ்வாறு
குறியா
இன்பத்தை
எளிதில்
தங்கள்
மலையில்
பல்வேறு
விலங்கும்
எய்தும்
என்றும்
தெரிந்து
கொண்டேன்,
ஆதலின்
தாங்களும்
இன்பத்தை
எளிதில்
அடைவதற்குரியவர்களே.
தங்களுக்கு
உண்டாகும்
இன்பத்தைக்
கருதி
மாத்திரம்
அல்ல;
என்
தலைவியின்
நிலையை
எண்ணியும்
தாங்கள்
தக்க
முயற்சியை
மேற்
கொள்ள
வேண்டும்.
தலைவன்:
அந்தப்
பேரழகியை
நான்
இனிமேல்
எவ்வாறு
வந்து
சந்திப்பது?
தோழி
: ஆம்;
அவள்
அளவுக்கு
மிஞ்சிய
அழகையுடையவள்தான்.
அவள்
தோளின்
அழகைப்
பார்த்தாலே
போதுமே;
மூங்கிலைப்
போலப்
பருத்து
வளர்ந்த
தோளல்லவா?
அதன்
அழகு
கெடாமல்
மெலியாமல்
இருக்க
வேண்டுமே!
அன்னையின்
மொழிகளைக்
கேட்டது
முதல்
அவள்
தங்களையே
நினைத்துக்
கொண்
டிருக்கிறாள்.
அவள்
மனம்
அவள்
வசத்தில்
இல்லை.
அது
ஓரிடத்தில்
நில்லாமல்
அலையோடிக்
குமுறிக்
கொந்தளிக்கிறது.
நிறுத்த
நிறுத்த
நில்லாத
நெஞ்சத்தோடு
அவள்
தங்களிடத்தில்
அளவற்ற
காதலை
வளர்த்து
இப்படி
இருக்கிறாள்.
தலைவன்
பெருமூச்சு
விட்டான்.
சிறிது
மெளனமாக
நின்றான்,
"அப்படியானால்.’’
என்று
ஏதோ
சொல்ல
வந்தான்.
மேலே
பேச
முடியாமல்
திணறினான்.
"அப்படியானால்
தாங்கள்
எங்கள்
இல்லத்துக்கு
வந்து
தங்கள்
காதலியைச்
சந்திக்கலாம்;
அதுதான்
வழி.”
காதலன்
முகம்
சிறிது
மலர்ந்தது;
"அப்படியா!
எப்படிக்
காண்பது?”
என்று
கேட்டான்.
தோழி
மிக்க
அறிவுடையவள். "வீட்டில்
வந்து
சந்திப்பதை
எளிதென்று
இவன்
நினைக்கக்கூடாது.
அதில்
உள்ள
இடர்களையும்
தெரிவிக்க
வேண்டும்.
ஆனால்
அதைக்
குறிப்பாகவே
தெரிவிக்க
வேண்டும்”
என்று
எண்ணினாள்.
"இரவுக்
காலத்தில்
வந்து
காணலாம்.
தலைவியி
னுடைய
தந்தை
இரவிலே
வீட்டையும்
ஊரையும்
காவல்
காப்பதற்காகக்
காவலரை
வைத்திருக்கிறார்,
அவர்களுடைய
கட்டுக்
காவலைக்
கடப்பது
எளிதன்று;
கடப்பதற்கரிய
அருங்கடிக்
காவலர்[#]
அவர்கள்
சேர்ந்திருக்கும்
சமயத்தை
அறிந்துகொண்டு
தாங்கள்
வரவேண்டும்.
அவ்வாறு
வந்தால்
இரவில்
வருவதற்கும்
உரியவர்கள்
ஆவீர்கள்."
-------
கடி
- காவல்.
தலைவன்
இப்போது
சிந்தனையில்
ஆழ்ந்தான்.
இரவிலே
காவலருடைய
காவலைக்
கடந்து
செல்வது
எப்படி
என்ற
ஆராய்ச்சியிலே
இறங்கினன்,
தலைவியை
இதுகாறும்
எளிதிலே
கண்டு
அளவளாவிய
மாதிரி
இனிக்
காண
முடியாதோ
என்று
ஏங்கினான்,
அவன்
மனம்
தத்தளித்தது,
அவன்
உள்ளத்தே
தோன்றிய
துயரத்தை
அவன்
விட்ட
பெருமூச்சு
வெளிப்படுத்தியது.
தோழி
அவன்
நிலேயை
உணர்ந்தாள்.
தான்
எதை
உணர்த்த
வேண்டுமென்று
எண்ணினாளோ,
அதை
உணர்த்த
இதுவே
சமயம்
என்று
அறிந்து
குறிப்பாகச்
சொல்லத்
தொடங்கினாள்.
”தந்தை
வைத்திருக்கும்
காவலர்
சோரும்
பதத்தை
(சந்தர்ப்பத்தை)
அறிந்து
கங்குலில்
வருதலும்
தங்களுக்கு
உரியதே
என்று
சொன்னேன்.
காவலர்
காவலின்
கடுமையை
எம்பெருமான்
நினைத்துப்
பார்க்கிறதாகத்
தோன்றுகிறது.
குறித்த
இன்பத்தை
எளிதிலே
பெற
வேறு
சிறந்த
வழியும்
உண்டு”’
என்று
தலைவன்
கவனத்தைச்
சிறிதே
தன்
பக்கத்தில்
திருப்பினாள்.
”வேறு
வழி
என்ன?”
என்று
அவன்
ஆவலோடு
கேட்டான்.
”பசிய
கொடிகளுக்கு
இடையே
நிற்கும்
இந்த
வேங்கை
மரம்
அதைச்
சொல்லாமற்
சொல்கிறதே?”
"எதைச்
சொல்கிறது?”
"ஒரேயடியாகப்
பூத்துக்
குலுங்கும்
இந்த
வேங்கையைக்
காணும்போதெல்லாம்
எனக்கு
மணவீடு
நினைவுக்கு
வருகிறது.
அலங்காரம்
செய்த
மணவீடும்
அணிசெய்த
மணமகளும்
போல
ஒள்ளிய
பூங்கொத்துக்கள்
மலர்ந்து
விளங்குகிறது.
இந்த
வேங்கை
மரம்.
இதைக்
கண்டு
குறிஞ்சி
நில
மக்கள்
தங்கள்
தங்கள்
பெண்களுக்குதி
திருமணம்
செய்ய
முயல்வார்கள்.
மாலை
நேரத்தில்
திங்கள்
தோன்றினால்
அதைச்
சுற்றி
இந்த
மாதத்தில்
கோட்டை
கட்டியிருப்பதைக்
காணலாம்.
அந்தப்
பரி
வேடமும்
இது
கல்யாண
காலம்
என்பதைத்
தெரிவிக்குமே!
விலங்குகள்கூட
எதிர்பாராத
இன்பத்தை
அடையும்
நாட்டுக்குத்
தலைவராகிய
தாங்கள்,
எதிர்பாராத
இன்பத்தை
அடைய
வழியா
இல்லை?
தங்களுக்கு
அரிய
தென்ற
செயலும்
உண்டா?
எதுவானாலும்
விரைவில்
ஆராய்ந்து
முடிவு
கட்டிச்செய்ய
வேண்டும்.
தலைவியின்
உள்ளம்
படும்பாடு
எனக்குத்தெரியும்.
அவள்
இன்புற
வழி
பிறக்க
வேண்டும்,'
இப்படி
அவள்
சொல்லச்
சொல்லத்
தலைவனுக்கு,
‘இனி
நம்
காதலியை
முறைப்படியே
திருமணம்
செய்து
கொள்வதுதான்
ஏற்ற
வழி’
என்ற
உறுதி
உண்
டாயிற்று.
தலைவன்
பகலிலே
தலைவியைச்
சந்திக்கும்
பகற்
குறிக்கண்
வந்தபொழுது,
அவனுக்குத்
தலைவியின்
தாய்
தலைவியை
இல்லிலே
இருக்க
வைக்கும்
செறிப்பை
அறிவுறுத்தி,
அவன்
திருமண்ம்
செய்து
கொள்வதற்குரிய
முயற்சியிலே
முனையும்படியாகத்
தோழி
சொல்வதாக
அமைந்திருக்கிறது
பாட்டு.
குறிஞ்சி
கோழிலை
வாழைக்
கோள்மிகு
பெருங்குலை
ஊழுறு
தீங்கனி
உண்ணுநர்த்
தடுத்த
சாரற்
பலவின்
சுளையொடு
ஊழ்படு
பாறை
நெடுஞ்சினை
விளைந்த
தேறல்
அறியாது
உண்ட
கடுவன்,
அயலது 5
கறிவளர்
சாந்தம்
ஏறல்செல்
லாது
நறுவீ
அடுக்கத்து
மகிழ்ந்துகண்
படுக்கும்
குறியா
இன்பம்
எளிதில்
நின்மலைப்
பல்வேறு
விலங்கும்
எய்தும்
நாட!
குறித்த
இன்பம்
நினக்குஎவன்
அரிய? 10
வெறுத்த
ஏஎர்
வேய்டிரை
பணைத்தோள்
நிறுப்ப
நில்லா
நெஞ்சமொடு
நின்மாட்டு
இவளும்
இனையள்;
ஆயின்
தந்தை
அருங்கடிக்
காவலர்
சோர்பதன்
ஒற்றிக்
கங்குல்
வருதலும்
உரியை:
பைம்புதல்
15
வேங்கையும்
ஒள்இணர்
விரிந்தன;
நெடுவெண்
திங்களும்
ஊர்கொண்
டன்றே.
[
கொழுவிய
இலைகளை
உடைய
வாழையின்
காய்கள்
மிக்க
பெரிய
குலையிலிருந்துதானே
கனிந்து
உதிர்ந்த
இனிய
கனியையும்
உண்ணும்
இயல்பையுடைய
மக்கள்
அருகில்
சென்றல்
அவர்களை
மேலே
செல்ல
விடாமல்
தடுத்த
மலைச்சாரலில்
உள்ள
பலாப்பழத்தின்
சுளையோடு,
முதிர்ந்து
உதிர்ந்த,
பாறையில்
உள்ள
ஆழமான
சுனையிலே
விளைந்த,
தேனைத்
தேனென்று
அறியாமல்
நீர்
என்று
எண்ணி
உண்ட
ஆண்
குரங்கு,
அயலிலே
வளர்ந்துள்ளதாகிய
மிளகு
கொடி
படர்ந்த
சந்தன
மரத்தின்மேல்
ஏறாமல்,
மணம்
மிக்க
மலர்க்
குவியலாகிய
படுக்கையில்
இன்புற்றுத்
துயிலுவதற்கு
இடமானதும்,
இவ்வாறே
தாம்
எதிர்பாராத
இன்பத்தை
எளிதிலே
நின்மலையில்
வாழும்
பல
வேறு
வகைப்பட்ட
விலங்குகளும்
அடைவதற்கு
இடமானது
மாகிய
நாட்டை
உடையவனே!
மனத்தால்
நினைத்து
எதிர்பார்க்கும்
இன்பங்கள்
உனக்கு
ஏன்
அரியனவாகும்?
மிக்க
அழகு,
மூங்கிலையொத்த
பருமையையுடைய
தோள்,
நிறுத்த
நிறுத்த
வருத்தத்தை
விட்டு
நில்லாத
நெஞ்சம்
இவற்றோடு
உன்னிடத்தில்
இந்தத்
தலைவியும்
இத்தகைய
ளானள்;
ஆயினும்
அவள்
தந்தை
வைத்த
கடப்பதற்கு
அரிய
காப்புத்
தொழிலையுடைய
ஊர்காவலர்
அயர்வு
அடையும்
சமயம்
அறிந்து
நீ
இராக்
காலத்தில்
தலைவியி
னிடம்
வருவதற்கும்
உரியாய்;
பசுமையான
செடிகளினிடையே
ஓங்கிய
வேங்கை
மரமும்
விளக்கத்தையுடைய
பூங்கொத்துக்களை
மலரச்
செய்தன;
நீண்ட
வெள்ளிய
சந்திரனும்
பரிவேடத்தைக்
கொண்டது.
(ஆதலின்
திருமணம்
செய்துகொள்ள
எண்ணினால்
அதற்கு
இதுவே
காலம்.)
1.
கோழிலை-கொழுமையான
இலை,
கோள்-காய்.
2.
ஊழுறு-உதிர்கின்ற,
தீங்கணி-இனிய
பழம்.
உண்ணு
நர்-உண்பார்.
தடுத்த-மேலே
செல்லவிடாமல்
தடுத்த,
3.
ஊழ்படு-உதிர்ந்த,
4.
நெடுஞ்சுணை-ஆழமான
சுனை,
விளைந்த-நாட்பட்டுப்
புளித்த,
தேறல்-தேன.
5.
அறியாது
உண்ட-தேன்
என்று
அறிந்து
கொள்ளாமல்
நீர்
என்று
எண்ணி
உண்ட,
கடுவன்-ஆண்
குரங்கு.
அயலதுஅயலிலே
உள்ளதாகிய.
6.
கறி-மிளகு
கொடி.
சாந்தம்-சந்தன
மரம்.
ஏறல்
செல்லாது-ஏழுமல்,
"சாந்தம்
ஏறா
தென்றது,
மரமாயிற்
சாந்தமே
உள்ளதென்று”
என்று
குறிப்பெழுதுவர்
பழைய
உரைகாரர்.
7.
வீ-பூ
அடுக்கம்-குவியல்,
கண்
படுக்கும்-துயிலும்,
8.
குறியா-நினைக்காத,
எளிதில்-எளிதாக,
“குறியா
இன்பம்
என்பது
முயற்சியும்
உளப்பாடும்
இன்றி
வந்த
இன்பமெனக்
கடுவனுக்கும்
தலைவனுக்கும்
ஏற்பக்
கொள்க’
என்பது
பழைய
குறிப்புரை.
10.
எவன்-ஏன்,
அரிய
-
கிடைத்தற்கரியனவாகும்.
11.
வெறுத்த-மிக்க.
ஏர்-அழகு,
செய்யுளின்
ஒசை,
நிரம்புவதற்காக
அளபெடுத்தது.
வேய்-மூங்கில,
புரைஒத்த,
பணை-பருமை, “ஏரையுடைய
வேயை
ஒத்த
பெருந்தோள்”
என்று
கூட்டுவர்
பழைய
உரைகாரர்.
12.
நிறுப்ப-வருந்தாமல்
நிறுத்தவும்.
நின்
மாட்டு-உன்னிடத்தில்.
‘நிறுப்ப
நில்லா
நெஞ்சம்-நின்ற
நிலையி
னின்றும்
அழியாமல்
நிறுத்தவும்
அவ்வளவில்
நில்லாத
நெஞ்சம்’
(பழைய
உரை)
13.
இணையள்-இத்தகையள்;
உன்னை
எண்ணி
வருந்தும்
இயல்புடையவள்
என்றவாறு,
'பனைத்தோள்
இவள்'
என்று
கூட்டுவார்
பழைய
உரைகாரர்.
ஆயின்-ஆயினும்.
14.
கடி-காவல்.
சோரி
பதன்-சோருகின்ற
செவ்வி.
ஒற்றி-அறிந்து.
15.
கங்குல் -
இரவில்.
இதுகாறும்
பகல்
வந்ததுபோல
இரவில்
வருவ
தற்கும்
உரியை
என்று
சொல்ல
வருதலால்
கங்குல்
வருதலும்
உரியை
என்று
கூறினாள்.
அந்த
உம்மையைக்
கங்குலும்
வருதல்
உரியை
என்று
பிரித்துக்
கூட்டினால்
பொருள்
சிறக்கும்.
"கங்குல்
வருதலும்
உரியை
என்றது,
இவள்
நின்னையின்றி
அமையாளாய்,
நின்னைக்
காண்டல்
வேண்டி,
நின்வர
விற்கு
உடன்பட்டிருத்தலான்,
வருதற்குரியை
நீ
என்றவாறு,
பகற்குறியேயன்றிக்
கங்குல்
வருதலும்
உரியை"
(பழைய
உரை.)
பைம்புதல்
- பசுமையான
செடிகள்.
செடியைப்
புதல்
என்பது
பழைய
வழக்கு.
அதிலிருந்து
புதர்
என்று
வழங்கும்
சொல்
பிறந்தது.
16.
இணர் -
பூங்கொத்து.
விரிந்தன
- மலர்ந்தன.
”வேங்கையும்
விரிந்தன”
என்றது,
திணைப்புனம்
அறுத்து
இற்செறிப்புண்டாள்
என்றவாறு;
எனவே
பகற்குறியும்
மறுத்துக்
காவலர்
சோர்பதன்
ஒற்றி
எனவே
இரவுக்குறி
யருமைகூறி,
அதுவும்
மறுத்துத்
தோழி
வரைவு
கடா
யினவாறு’
(பழைய
உரை).
17.
காதலரைப்
பிரிந்தாருக்கு
நீண்டபொழுதாகத்
தோன்றுதலின்,
நெடு
வெண்டிங்கள்
என்றாள்.
‘நெடு
வெண்டிகள்
என்றார்,
ஆதித்தனுக்கு
மேலாகலான்'
என்று
பழைய
உரைகாரர்
குறித்தார்.
சூரியமண்டலத்துக்குப்
மேலே
சந்திரமண்டலம்
இருக்கிறதென்று
பழங்காலத்தில்
சிலர்
கூறியுள்ளனர்.
அதை
எண்ணி
இவ்வாறு
எழுதினர்.
ஊர்-பரிவேடம்;
சந்திரனைச்
சுற்றிக்
கோட்டை
கட்டி
யிருக்கிறது
என்று
சொல்வதுண்டு.
அதுதான்
ஊர்
அல்லது
பரிவேடம்.
கொண்டன்று
- கொண்டது
வளர்தல்
கொண்டது
என்றுமாம்.
வளர்
பிறையின்றிக்
கல்யாண
நாட்
கொள்ளாராகலின்,
அதுவும்
ஆயிற்று
என்றாள்”
(பழைய
உரை.)
இந்த
பாட்டின்
துறை,
“பகற்
குறிக்கட்
செறிப்பறி
வுறீஇத்
தோழி
வரைவு
கடாயது”
என்பது. "பகலிலே
தலைவன்
தலைவியைச்
சந்தித்த
இடத்தில்,
தலைவியை
அவள்
தாய்
வீட்டிலேயே
இருக்கும்படி
ஏற்பாடு
செய்த
தைத்
தலைவனுக்கு
உணர்த்தி,
அதன்
வாயிலாகத்
திருமணம்
செய்ய
வேண்டுமென்ற
எண்ணத்தைத்
தோழி
தலைவனுக்கு
உண்டாக்கியது"
என்பது
இதன்
பொருள்.
தலைவனுடைய
நாட்டில்
நிகழ்வதாகச்
சொன்ன
செய்திகளைத்
தலைவனுடைய
செய்கையை
நினைப்பூட்டும்
குறிப்பாகக்
கொள்வது
ஒருமுறை.
அதை
உள்ளுறை
உவமம்
என்பார்கள்.
நேராக,
இது
போன்றது
இது
என்று
உவமையாக
இராமல்
அதை
உள்ளே
வைத்துச்
சொல்வதால்
உள்ளுறை
உவமம்
என்ற
பெயர்
வந்தது.
உள்ளுறை-உள்ளே
மறைந்திருப்பது.
இந்தப்
பாட்டிலே
கடுவனுடைய
செயல்களாகச்
சொன்னவை
தலைவனுடைய
செயல்களைக்
குறிப்பிக்கப்
பயன்படுகின்றன.
பழைய
உரையாசிரியர்
இதன்
உள்ளுறையைப்
பின்
வருமாறு
விளக்குகிறார் "கடுவனனது
தேனை
அறியாது
நுகர்ந்து,
பின்பு
தனது
தொழிலாகிய
மரமேறவும்
மாட்டாது,
வேறு
ஓரிடத்துச்
செல்லவும்
மாட்டாது,
தனக்கு
அயலாகிய
சந்தனத்தின்
நிழலிற்
பூமேலே
உறங்கு
கின்றாற்
போல,
நீயும்
இக்
களவொழுக்கமாகிய
இன்பம்
நுகர்ந்து,
நினது
தொழிலாகிய
அறநெறியையும்
தப்பி,
இக்
களவினை
நீங்கி
வரையவும்
மாட்டாது,
இக்
கள
வொழுக்கமாகிய
இன்பத்திலே
மயங்கா
நின்றாய்
என்றவாறு."
இந்தப்
பாட்டுக்குக்
குறிஞ்சி
என்று
திணை
வகுக்கப்
பெற்றிருக்கிறது.
குறிஞ்சிக்கு
உரிய
முதற்
பொருளில்,
”நின்மலைப்
பல்வேறு
விலங்கும்”
என்று
நிலம்
வந்தது.
"நெடு
வெண்
திங்களும்
ஊர்
கொண்டன்று"
என்பதனால்
கூதிர்க்காலம்
வந்தது.
வாழை,
பலா,
தேன்,
கடுவன்,
மிளகு
கொடி,
சந்தன
மரம்,
வேங்கை,
நாடன்
என்னும்
குறிஞ்சிக்
கருப்
பொருள்கள்
வந்தன.
புணர்ச்சிக்கு
நிமித்தமாகிய
வரைவு
கடாயது,
குறிஞ்சிக்குரிய
உரிப்பொருள்.
இதைப்
பாடியவர்
கபிலர்.
அப்
புலவர்
பிரான்
குறிஞ்சித்
தினைப்
பாடல்களைப்
பாடுவதில்
வல்லவர்.
இது
அகநானூற்றில்
உள்ள
இரண்டாம்
பாட்டு,
3.
காரும்
தேரும்
கார்
காலம்
வந்தது.
வருவார்
வருவார்
என்று
தம்மைப்
பிரிந்துசென்ற
காதலரை
நினைந்து
தம்
இல்லிலே
இருந்து
கடமையாற்
றும்
காதலிமாரின்
அகத்திலே
உவகையும்
முகத்திலே
முறுவலும்
தழைக்கக்
கார்காலம்
வந்தது.
காதலர்
தம்
காதலியரைப்
பிரிந்து
செல்லுவதற்குக்
காரணமான
செயல்களை
நிறைவேற்றிவிட்டுத்
தம்
காதலியரைக்
காணும்
அவாவோடு
மீள்வதற்கு
உரிய
காலம்
அது.
வெம்மை
நிறைந்த
காலத்தில்
வெம்மையான
நிலத்தைக்
கடந்து
வெம்மையான
வறுமையையும்
பகையையும்
போக்க
எண்ணித்
தலைவியருடைய
உள்ளம்
வெதும்பத்
தம்
உள்ளமும்
வெம்மை
பெறப்
பிரிந்து
சென்றவர்கள்
மழையால்
நிலம்
குளிர்ந்து
வளம்பெறக்
காடு
கவின்
பெறத்
தம்
முயற்சி
நிறைவு
பெற
வீடு
நலம்பெற
மீண்டு
வரும்
காலம்
அது.
கார்காலம்
எங்கும்
அழகைச்
செய்திருக்கிறது.
காடு
முழுவதும்
கண்கொள்ளாக்
காட்சி.
ஆவி
இடி
மின்னல்
ஆகியவையெல்லாம்
சேர்ந்து
தொகுதியாகவுள்ள
மேகங்கள்
நன்றாக
மழை
பெய்தன.
வேகமாகத்
தாரைகளைப்
பொழிந்தன.
அதனால்
நாடெங்கும்
இருந்த
வெப்பம்
தீர்ந்தது.
நீரில்லாமல்
தவித்த
இடங்களெல்லாம்
இப்போது
பொலிவு
பெற்றன.
அந்தப்
புலம்பு
(வருத்தம்)
முதுகுகாட்டி
ஓடியே
போய்விட்டது.
அது
புறங்கொடுத்துப்
போய்விட்டதென்றால்
ஞாலம்
முழுவதும்
மலர்ச்சி
அடையத்
தடை
என்ன?
மலர்ந்த
ஞாலத்தில்
புலம்பானது
புறங்
கொடுப்பக்
கருவி
வானம்
(தொகுதியாகிய
மேகம்)
கதழ்கின்ற
(விரைகின்ற)
பெரிய
உறைகளை
(துளிகளை)ச்
சிதறக்
கார்
காலமானது
கவின்
பெற்ற
கானத்தை
உண்
டாக்கியிருக்கிறது.
கானத்தின்
கவினைச்
சிறிது
பார்க்கலாமா?
அதோ
முல்லைக்
கொடி.
கானமும்
அதைச்
சார்ந்த
நிலமும்
முல்லைத்
திணையின்
பாற்படும்.
அந்தத்
திணைக்குப்
பெயர்
வந்ததே
முல்லையினால்தான்.
அந்த
முல்லை
நன்றாக
வளம்
பெற்றால்தானே
முல்லை
நிலம்
தன்
பெயரைக்
காப்பாற்றிக்
கொள்ள
முடியும்?
முல்லை
நிலத்துக்கு
வாய்ப்பான
பருவம்
கார்
காலம்.
அந்தக்
காலத்தில்
அந்நிலம்
தன்
முழு
அழகோடு
பொலிந்து
விளங்கும்.
இப்போது
கவின்
பெற்ற
காணத்தில்
முல்லை
அரும்பு
விட்டிருக்கிறது,
செடி
முழுவதும்
முல்லை
அரும்பு
கூர்
கூராகத்
தலை
நீட்டிக்கொண்டிருக்கிறது.
அதன்
கூரிய
நுனி
விளக்கமாகத்
தோன்றுகிறது.
இனி
மலர்ந்து
காடு
முழுவதும்
முல்லை
மணம்
கமழப்போகிறது.
கார்
காலத்திலே
மலரும்
வேறு
மரங்களும்
இங்கே
இருக்கின்றன.
தேற்றா
மரத்தின்
மலர்களும்
மலர்கின்றன;
மெல்லிய
அரும்புகள்
அவிழ்ந்து
மலர்ந்து
மணக்கின்றன.
தேற்றாவுக்கு
இல்லம்
என்று
ஒரு
பெயர்
உண்டு.
பச்சைக்
காம்பையுடைய
கொன்றை
மலர்களும்
மென்பிணி
(மெல்லிய
அரும்புக்
கட்டு)
அவிழ்கின்றன.
மணமும்
நிறமும்
வளமும்
மென்மையும்
உடைய
மலர்
செறிந்த
காட்டுக்கு
இப்போது
உண்டான
அருகே
தனிச்
சிறப்பு
டையது.
முல்லையும்
தேற்றா
மரமும்
கொன்றையும்
முன்பே
இங்கே
வளர்ந்திருந்தாலும்,
இப்போதுதான்
அவை
அழகாகப்
பூத்துக்
குலுங்குகின்றன.
செறிந்த
தழையும்
மலர்ந்த
மலரும்
நிர்ம்புவதற்குக்
காரணம்
கார்
காலந்தான்.
ஆகவே
இந்த
அழகை
அந்தக்
கார்
காலந்
தான்
உண்டாகிக்கியது
என்று
சொல்லுவது
பிழை
யாகுமா?
காட்டிலே
வாழும்
விலங்குகள்
பல.
முல்லை
நில
வாசிகளாகிய
விலங்குகளில்
மான்களும்
சேரும்.
கார்
காலம்
வந்துவிட்டால்
வீட்டிலுள்ள
மானனைய
மகளிருக்கு
மகிழ்ச்சி
உண்டாகிறதோ
இல்லையோ,
காட்டிலுள்ள
மான்களுக்கு
உண்டாகும்
களிப்புக்கு
எல்லையில்லை.
மழை
பெய்தமையால்
நிலப்
பரப்பு
முழுவதும்
புல்
நன்றாக
முளைத்து
வளரும்.
சலசலவென்று
நீர்
ஓடும்.
நல்ல
பசிய
புல்லை
உண்டு
தெள்ளிய
நீரைப்
பருகுவதுதான்
மான்களுக்கு
விருந்துண்ட
மகிழ்ச்சியைத்
தரும்.
மற்றப்
பருவங்களில்
ஏதோ
கிடைத்ததை
உண்டு
வாழும்;
கார்
காலத்திலோ
பச்சைப்
பசேலென்று
வளர்ந்த
அருகம்
புல்லைக்
கறித்து
உண்பதும்,
ஓடும்
தண்ணிரைப்
பருகுவதும்,
ஆண்
மானும்
பெண்
மானும்
கூடி
விளையாடுவதுமாக
அவற்றின்
வாழ்க்கையிலே
திருவிழாக்
காலம்
வந்ததுபோல
இருக்கும்.
தண்ணீர்
அரித்துக்கொண்டு
ஓடுவதனால்
அங்கங்கே
பள்ளங்களில்
பருக்கைக்
கற்கள்
இருக்கும்.
அத்தப்
பரல்களையுடைய
பள்ளத்திலெல்லாம்
மான்கள்
துள்ளி
ஒடும்.
கவலையின்றிப்
புல்லும்
நீரும்
உண்ணக்
கிடைத்துவிட்
டால்
அந்தப்
பேதை
மான்களுக்கு
வேறு
என்ன
வேண்டும்?
ஆடை
வேண்டுமா?
அணி
வேண்டுமா?
வீடு
வேண்டுமா?
வித்தை
வேண்டுமா?
எளிதிலே
மனம்
நிறைவு
பெறும்
குழந்தைகளைப்போல
அவை
களித்துக்
கலந்து
குலாவிக்
குதித்து
ஓடுகின்றன.
அவற்றின்
உடம்புகள்
மென்மையாகப்
பட்டுப்போல
இருக்கின்றன.
ஆனால்
அந்த
மென்மையான
விலங்குகளுக்கு
இறைவன்
மிகவும்
வன்மையான
பாதுகாப்பைக்
கொடுத்திருக்கிறான்;
ஆண்
மான்களுக்குப்
பெரிய
கொம்புகளைக்
கொடுத்திருக்கிறான்.
அவை
மிகவும்
வலிமையுடையவை.
அவற்றின்
பலத்துக்கு
இரும்பை
உவமையாகச்
சொல்லலாம்.
அது
மாத்திரமல்ல;
இரும்புக்
கம்பியை
முறுக்கினால்
எப்படி
இருக்குமோ,
அப்படி
அந்தக்
கொம்புகள்
தோன்றுகின்றன.
தோற்றத்தாலும்
வன்மையினாலும்
இரும்புபோல
உள்ள
பெரிய
கரிய
மருப்புக்களை
உடைய
இரலைகள்
கார்
காலத்தில்
காணத்தில்
பரலையுடைய
பள்ளங்களிலெல்லாம்
துள்ளி
விளையாடு
கின்றன.
கார்காலம்
மலர்க்
கொடிக்கும்
மரத்துக்கும்
ஊட்டந்
தந்து,
மானினத்துக்கும்
உவகையைத்
தந்திருக்கிறது.
மழையைப்
பொழிந்து
அதனாலே
காட்டில்
அழகைப்
பொழிந்திருக்கிறது.
முல்லை
வைந்நூனை
தோன்ற,
இல்லமொடு
பைங்காற்
கொன்றை
மென்பிணி
அவிழ,
இரும்புதிரித்
தன்னமாயிரு
மருப்பின் –
பரல்
அவல்
அடைய-இரலை
தெறிப்ப,
மலர்ந்த
ஞாலம்
புலம்புபுறங்
கொடுப்ப,
கருவி
வானம்
கதழ்உறை
சிதறிக்
கார்செய்
தன்றே
கவின்பெறு
கானம்.
இந்தக்
கார்
காலத்தை
எதிர்நோக்கி
யிருந்தாள்
ஒரு
காதலி.
இல்வாழ்விற்கு
வேண்டிய
பொருளை
ஈட்டும்
பொருட்டு
அவளுடைய
காதலன்
வேறு
ஊருக்குச்
சென்றான்.
"கார்
காலத்தில்
வந்துவிடுவேன்"
என்று
உறுதி
மொழிகூறி
அகன்றான்.
காதலி
இல்லற
வாழ்வில்
செய்தற்குரிய
கடமைகளை
நன்கு
நிறைவேற்றுகிறவள்.
அறத்திற்கும்
இன்பத்திற்கும்
பொருள்
எவ்வளவு
இன்றியமையாதது
என்பதை
உணர்ந்தவள்.
தன்
காதலனைச்
சிலகாலம்
பிரிந்திருக்க
நேர்ந்தாலும்,
அந்தப்
பிரிவு
பின்னால்
மிகுதியான
பயனைத்
தருவதற்கு
ஏதுவாக
இருப்பதைத்
தெளிந்து
அவன்
செல்வதைத்
தடுக்கவில்லை.
தனக்கும்
பிரிவினால்
துன்பம்
உண்டானாலும்
அறத்தைக்
கருதிப்
பொறுத்திருக்க
வேண்டும்
என்று
எண்ணினாள்,
அவன்
பிரிந்து
சென்ற
பிறகுதான்
பிரிவின்
துன்பம்
அவளுக்கு
அநுபவத்தில்
தெரிய
வந்தது.
ஆயினும்
கடமையை
உணர்ந்து
அதை
வெளிப்படுத்தாமல்
பொறுத்து
ஆற்றிக்கொண்டிருந்தாள்.
கற்புடைய
மகளிர்
இவ்வாறு
தம்
கணவர்
பிரிந்த
காலத்தில்
கடமையுணர்ச்சியோடு
வீட்டிலே
இருந்து
வாழ்வதுவே
முல்லை
நிலத்துக்குரிய
நிகழ்ச்சி.
அதை
முல்லைத்
திணையின்
உரிப்பொருள்
என்று
புலவர்கள்
சொல்வார்கள்.
இங்கே
காதலி
தன்
துயரை
வெளிக்காட்டாமல்
இருந்தாலும்
அவளுடன்
நெருங்கிப்
பழகும்
ஆருயிர்த்
தோாழிக்கு
உண்மை
தெரியும்.
தலைவன்
தான்
கூறிய
உறுதிமொழிப்படியே
கார்
காலத்தில்
வந்துவிடுவான்
என்ற
நம்பிக்கை
இருந்தது.
ஆகவே
கார்
காலத்தை
அவர்கள்
எதிர்நோக்கி
யிருந்தார்கள்.
கார்
காலம்
வந்துவிட்டது.
முன்னே
சொன்னபடி
கவின்
பெற்ற
கானத்தை
உண்டாக்கும்
கார்ப்பருவம்
வானம்
மழை
பொழியவும்
ஞாலம்
வெப்பத்துக்கு
விடை
கொடுக்கவும்
வந்துவிட்டது.
அதைக்
கண்டாள்
தோழி.
அவர்கள்
வாழும்
ஊர்
முல்லை
நிலத்து
ஊர்.
ஆகவே
கவின்
இழந்து
வாடிய
கானம்
இப்போது
கவின்
பெற்றதைக்
கண்ட
தோழிக்கு, "இனித்
தலைவர்
வந்துவிடுவார்”
என்ற
மகிழ்ச்சி
உண்டாயிற்று.
அதோடு
தலைவன்
வந்துகொண்டிருக்கிறான்
என்ற
செய்தியும்
அவளுக்குக்
கிடைத்தது.
இனி
அவள்
சும்மா
இருப்பாளா?
தன்
தலைவியிடம்
ஓடினாள்.
"அவர்
வந்துவிட்டார்”
என்று
குதித்துக்
கொண்டே
சொன்னாள்.
"எங்கே
வந்து
விட்டார்?”
என்று
கேட்டாள்
தலைவி.
"இதோ
வந்துகொண்டே
இருக்கிறார்”
என்று
தோழி
கூறினாள்.
“எப்படி
உனக்குத்
தெரியும்?”
"கார்
காலம்
வந்துவிட்டது.”
“அதை
யார்
சொன்னார்கள்?
"இதோ
கவின்
பெற்ற
காணம்
சொல்கிறதே!
தலைவி
: அவர்
வருகிறார்
என்றால்
தேரில்
அல்லவா
வர
வேண்டும்?
தோழி:
ஆம்,
தேரில்
தான்
வருகிறார்,
இல்லையென்று
யார்
சொன்னார்கள்?
தலைவி
: தேரில்
வந்தால்
மணியோசை
நெடுந்
தூரம்
கேட்குமே!
அதுவும்
அவர்
தேரின்
மணி
ஒலி
எனக்கு
நன்றாகத்
தெரியுமே
ஒன்றும்
கேட்கவில்லையே!
தோழி:
மணியின்
ஒசை
கேட்காதபடி
அவர்
செய்து
விட்டார்.
இவர்கள்
பேசிக்
கொண்டிருக்கட்டும்;
நாம்
தலைவனிடம்
போவோம்.
பொருள்
ஈட்டும்
பொருட்டுச்
சென்ற
அவன்
குறித்த
காலத்துக்குள்
போதிய
பொருளை
ஈட்டினான்.
பொருளை
மாத்திரம்
எண்ணியவனாக
இருந்தால்
அவன்
மேலும்
மேலும்
பொருளைத்
தேடிக்
கொண்டே
இருப்பான்.
பொருளாசைக்குத்தான்
எல்லை"
என்பது
இல்லையே!
அவனோ
அறத்தையும்
இன்பத்தையும்
மறவாதவன்.
பொருளைக்
கருவியாகக்
கொண்டு
அறல்
செய்யவும்
இன்பம்
நுகரவும்
எண்ணியவன்.
ஆகவே
அவனுக்கு
ஒரளவு
பொருள்
கிடைத்தவுடன்
போதும்
என்ற
மன
நிறைவு
உண்டாயிற்று.
தன்
பிரிவால்
தன்
காதலி
துன்புறு
வாளாதலின்
அந்தப்
பிரிவை
எத்தனைக்கு
எத்தனை
குறுக்கிக்
கொள்ளலாமோ
அத்தனைக்கு
அத்தனை
நல்லது
என்பதை
அவன்
உணர்ந்தவன்.
ஆகவே
பொருள்
போதிய
அளவு
கிடைத்தவுடன்
தன்
ஊருக்கு
மீள
எண்ணினான்.
அவனுடைய
உள்ளத்தில்
அவன்
காதலி
எப்போதும்
இடம்
கொண்டிருந்தாள்.
அவளுடைய
அழகையெல்லாம்
ஓய்வு
நேரங்களில்
எண்ணி
எண்ணி
இன்புறுவான்.
அவள்
தன்
கையிலே
அழகான
வளைகளை
அணிந்திருந்தாள்.
வளைச்
செட்டி
வந்தால்
எதையோ
எடுத்தோம்,
போட்டுக்
கொண்டோம்
என்று
இருக்க
மாட்டாள்.
நன்றாக
ஆராய்ந்து
பொறுக்கி
எடுத்து
அணிந்து
கொள்வாள்.
அவள்
உடம்பு
முழுவதும்
இயற்கையாகவே
கம்மென்று
ஒருவகை
நறுமணம்
கமழும்.
அதற்கு
உவமையாக
எதை
சொல்வது?
உவமை
இல்லாதது
அந்த
நறுமணம்.
ஆனாலும்
எதையாவது
உவமை
சொல்லிப்
பார்க்கலாமே
என்ற
விருப்பம்
உண்டாயிற்று.
ஒருநாள்
அவன்
உறையூருக்குப்
போயிருந்தான்.
தன்
காதலியையும்
அழைத்துக்
கொண்டு
சென்றிருந்தான்.
அங்கே
பங்குனி
உத்தரத்
திருவிழா
மிகச்
சிறப்பாக
நடைபெறும்.
சோழனுடைய
தலைநகரம்
ஆதலின்
விழாவின்
சிறப்புக்குச்
சொல்ல
வேண்டுமா?
பல
ஊர்களிலிருந்து
ஆயிரக்
கணக்கான
மக்கள்
அங்கே
அந்த
விழாவைப்
பார்க்க
வருவார்கள்.
முரசு
முழக்கமும்,
இன்னி
சைக்
கருவிகளின்
ஒவியும்,
மக்களுடைய
ஆரவாரமும்
எங்கும்
நிறைந்திருக்கும்.
அந்த
விழாவுக்குச்
சென்ற
தலைவன்
சுற்றுப்
புறத்தில்
உள்ள
இடங்களையும்
போய்ப்
பார்த்து
இன்புற்றான்,
உறந்தைக்குக்
கிழக்கே
உயர்ந்த
பெரிய
குன்றம்
இருக்
கிறது.
இப்போது
திருச்சிராப்பள்ளிக்
குன்றமென்று
வழங்குவதுதான்
அது,
அக்காலத்தில்
அந்தக்
குன்றத்தில்
இயற்கை
இளம்
நன்றாக
அமைந்திருத்தது.
அந்தக்
குன்றத்துக்குச்
சென்று
அதன்
அழகைப்
பார்த்தான்.
அவனுடைய
காதலியும்
உடன்
வந்திருந்தாள்.
அங்கே
எங்கே
பார்த்தாலும்
காந்தள்
மலர்
கொத்துக்
கொத்தாகப்
பூத்திருந்தது.
மலைப்
பாங்கில்
வளர்வது
அது.
அதைப்
பார்த்தான்.
சில
மலர்களைப்
பறித்துக்
கையில்
வைத்து
மோந்து
பார்த்தான்.
அப்போதுதான்
தன்
காதலியின்
திருமேனிக்கு
அதை
ஒருவாறு
உவமையாகச்
சொல்லலாம்
என்று
அறிந்து
கொண்டான்.
அவளிடமே
அதைச்
சொன்னான்;
அவள்
நாண
முற்றுத்
தலை
கவிழ்ந்தாள்.
அன்று
முதல்
அவன்
அந்தக்
கறங்குகின்ற (ஒலிக்கின்ற)
இசை
நிரம்பிய
விழாவை
யுடைய
உறந்தையை
மறக்கவில்லை;
அதற்குக்
குண
(கிழக்கு)
திசையில்
உள்ள
நெடும்பெருங்
குன்றத்தையும்
அதில்
அடர்த்து
பூத்திருந்த
காந்தளின்
போது
அவிழ்ந்த
அலரையும்
மறக்கவில்லை;
அந்த
மலரின்
மணத்தை
வீசும்
ஆய்
தொடியையுடைய
அரிவையாகிய
தன்
காதவியின்
அழகையும்
பண்பையும்
நினைந்து
நினைந்து
இன்புற
லானான்.
தலைவியைப்
புகழும்போது
அவள்
மேனியின்
நறுமணத்துக்குக்
காந்தளை
உவமை
கூறுவான்.
இதை
எப்படியோ
தலைவியின்
தோழிகூட
ஒருநாள்
கேட்டு
விட்டாள்.
'என்ன
இப்படி,
பக்கத்தில்
மனிதர்கள்
இருப்பதையே
தெரிந்து
கொள்ளாமல்
நீங்கள்
உங்கள்
வருணனையை
விரிக்கிறீர்களே'
என்று
காதலி
அவனை
அப்போது
பொய்க்
கோபத்தோடு
கடிந்து
கொண்டாள்.
இப்போது
அந்த
நிகழ்ச்சிகளெல்லாம்
தலைவனுடைய
நினைவுக்கு
வந்தன.
தன்
காதலியின்
மாட்சிமைப்பட்ட
அழகை
நேரிலே
சென்று
நுகராமல்
இனி
ஒரு
கணமும்
தாமதிக்கக்
கூடாது
என்று
நிச்சயித்துக்
கொண்டான்.
அவன்
ஒரு
தேர்
வைத்திருந்தான்;
அதை
ஒட்டும்
வலவனும்
இருந்தான்.
அந்தச்
சாரதி
அவனுக்கு
ஏவலாளன்;
தோழன்;
துணைவன்.
அவன்
அழகான
குதிரைகளை
நன்றாகப்
பாதுகாத்து
வைத்திருந்தான்.
குதிரைகளின்
பிடரி
மயிரை
யெல்லாம்
ஒழுங்காகக்
கத்தரித்து
மட்டஞ்
செய்தான்.
வர்ண
மயிரமைந்த
கவரியை
அவற்றின்
தலையில்
அணிந்தான்.
அதற்குத்
தலை
யாட்ட
மென்றும்
உளை
யென்றும்
பெயர்.
அதை
வைத்துவிட்டால்
குதிரை
போகும்பொழுது
அழகாகத்
தோன்றும்.
வாரெல்லாம்
புதிதாகப்
போட்டிருந்தான்.
அதன்
நிறம்
நரம்பைப்
பார்த்தாற்போல
இருந்தது.
“இன்று
ஊருக்குப்
புறப்பட
வேண்டும்.
தேரை
அலங்கரித்து
ஆயத்தம்
பண்ணுக’
என்று
தலைவன்
வலவனை
ஏவினன்.
அவன்
மிக
விரைவில்
ஆவனவற்றைச்
செய்து
விட்டான்.
"எத்தனை
வேகமாகப்
போகவேண்டும்?"
என்று
கேட்டான்
சாரதி.
”குதிரை
போகிற
வேகத்தில்
போகட்டும்.
அவற்றைத்
துன்புறுத்த
வேண்டாம்.
கடிவாள
வாரை
இறுக்கிப்
பிடிக்க
வேண்டாம்.
தளர
விடு.
யாழ்
நரம்பைப்போல
மெல்லப்
பிடித்து
விடு"
என்றான்.
குதிரைகள்
தாமே
வேகமாகப்
போகும்;
ஆனாலும்
தேர்வலவன்
தன்
தலைவன்
பேச்சைக்
கேட்டு
வியந்தான்,
தன்
காதலியைப்
பார்க்கப்போகும்
ஆர்வத்தில்,
"உன்னால்
எவ்வளவு
வேகத்தில்
ஒட்ட
முடியுமோ,
அவ்வளவு
வேகமாக
ஒட்டு"
என்று
தலைவன்
சொல்வான்
என்று
எதிர்
பார்த்தான்.
தலைவன்
உயிர்களிடத்தில்
அன்புடையவன்.
அந்த
இயல்பு
என்றும்
மாறுவதில்லை.
காதலியைக்
காணப்
போகும்
இந்த
அவசரத்திலும்
அவன்
குதிரைகளைத்
துன்புறுத்த
விரும்பவில்லை.
”குதிரைகளின்
கடிவாள
வாரைத்
தளரப்
பிடி?”
என்று
சொன்னதைக்
கேட்டு
வியந்த
வலவனுக்கு,
அடுத்தபடி
இன்னும்
பெரு
வியப்பை
அளிக்கத்
தக்க
ஒரு
செய்தியைத்
தலைவன்
சொன்னான்.
"தேரின்
மணிகள்
நாம்
போகும்போது
ஒலிக்கக்
கூடாது"
என்றான்
தலைவன்.
”ஏன்?
தேரின்
வருகையை
வழிப்போவருக்குத்
தெரிவிக்கத்தானே
மணிகள்
கட்டியிருக்கின்றன?”
"அது
உண்மைதான்.
ஆனால்
மக்கள்
நிரம்பிய
நகரத்தில்தான்
மணி
வேண்டும்.
இப்போது
நாம்
காட்டு
வழியாகப்
போகப்
போகிறோம்.
அங்கே
மணியின்
ஒலி
வேண்டியதில்லை.
ஆகையால்
மணிகளின்
நாக்கைக்
கட்டி
விடு”.
இதைக்
கேட்ட
வலவனுக்குத்
தலைவன்
கருத்து
விளங்கவில்லை.
நகரத்தில்
மணிகள்
அவசியம்
என்பது
விளங்கியது.
காட்டில்
வேண்டாம்
என்பதற்குக்
காரணம்
என்ன?
காட்டில்
ஒலித்தால்
என்ன
குறைந்து
விடும்?
அவன்
தன்
ஐயத்தைத்
தீர்த்துக்கொள்ள
விரும்பினான்.
”காட்டில்
மணிகள்
ஒலித்தால்
என்ன?”
என்று
தலைவனைக்
கேட்டான்.
”இப்போது
எங்கே
பார்த்தாலும்
மழை
பெய்திருக்கிறது.
கானத்தில்
இந்த
மழையினால்
எங்கும்
மரங்கள்
பூத்துப்
பொலியும்.
காட்டு
வழியின்
இருமருங்கும்
பூத்த
மரங்கள்
நிற்பதை
நாம்
பார்த்து
மகிழலாம்,
மலர்ந்த
மலர்களில்
தாதை
ஊதித்
தேனுண்ணும்
வண்டுகள்
இருக்கும்,
நம்மைப்போல
வேண்டிய
பொருளை
ஈட்டுவதற்குப்
பிரிந்து
செல்லும்
நிலை
அவற்றுக்கு
இல்லை.
ஆண்
வண்டும்
பெண்
வண்டும்
சேர்ந்து
சேர்ந்து
இரட்டையாகத்
தாதையும்
தேனையும்
உண்டு
அந்த
மலராகிய
மெத்தென்ற
படுக்கையிலே
நெடுநேரம்
தங்கியிருக்கும்.
என்ன,
நான்
சொல்கிறது
தெரிகிறதா?”
என்று
தலைவன்
சொல்லிச்
சிறிது
நிறுத்தினான்.
தலைவனுடைய
உள்ளம்
தன்
துணைவியோடு
ஒன்று
படும்
வேட்கையுடையதாக
இருப்பதை
அந்தப்
பேச்சினுாடே
வலவன்
உணர்ந்து
புன்னகை
பூத்தான்.
"ஆம்,
தெரிகிறது.
ஆனால்-
” என்று
முடிப்பதற்குள்
தலைவனே
பேசலானான்.
”அச்சமின்றிச்
சுதந்திரமாக
இன்ப
வாழ்வு
நடத்தும்
வண்டுகளின்
அமைதி
நமக்கு
இருக்கிறதா?
இல்லையே!
பொருளுக்காக
அன்புடையவர்களைப்
பிரிந்து
ஊர்
கடந்து
நாடு
கடந்து
வரவேண்டியிருக்கிறது.
பிரிவின்
வருத்தத்தை
நன்கு
உணர்ந்த
நாம்,
அமைதியாக
இருக்கும்
வண்டினங்களின்
இன்ப
வாழ்க்கைக்கு
உதவி
ஏதும்
செய்ய
இயலாவிட்டாலும்
கெடுதலாவது
செய்யாமல்
இருக்கலாமல்லவா?
மணியோசையைக்
கேட்டுப்
பயந்து
அவை
மலரை
விட்டுத்
துணையைவிட்டுச்
சிதறுண்டு
போகாமல்
இருப்பதற்காகத்
தான்
மணிகளின்
நாவைக்
கட்டச்
சொன்னேன்.”
தலைவனுக்குள்ள
ஜீவகாருண்யத்தின்
சிறப்பை
வலவன்
தெரிந்துகொண்டு
வியப்பே
மயமானான்.
ஆனால்
மறுபடியும்
அவனுக்கு
ஓர்
ஐயம்
தோன்றிற்று.
”நீங்கள்
நினைப்பது
சரிதான்.
வண்டினங்களின்
இன்ப
வாழ்வைக்
குலைப்பது
தவறு;
பாவம்.
ஆனால்
நம்முடைய
தேரின்
ஒசையும்
குதிரைகள்
ஓடும்
ஓசையும்
வண்டுகளைப்
பேதுறச்
செய்யாவா?”
என்று
வலவன்
கேட்டான்.
"நல்ல
கேள்வி
நான்
அதை
நினைக்காமலா
இருப்பேன்?
காடு
என்பது
ஓசை
ஒலிகளே
இல்லாத
தனி
மோன
ராஜ்யம்
அல்லவே?
அங்கே
மரங்கள்
காற்றால்
அசைகின்ற
ஒலியும்,
விலங்கினங்களின்
முழக்கமும்,
பறவைகளின்
ஓசையும்,
மான்
முதலியவை
ஓடும்
சத்தமும்
இருக்கின்றன.
அந்த
ஒலிகளினிடையேதான்
வண்டுகள்
தேனை
நுகர்ந்து
இன்புறுகின்றன.
அவை
காட்டு
ராஜ்யத்துக்குரிய
ஓசைகள்
வண்டுகளுக்குப்
பழக்கமான
ஓசைகள்;
அவற்றைக்
கேட்டு
அவை
அஞ்சுவதில்லை.
தேர்
ஓடும்
ஒலியும்
குதிரையின்
குளம்
பொலியும்
அந்த
ஓசைகளைப்
போலவே
இருக்கும்
ஆகையால்
அவற்றைக்
கேட்டும்
வண்டுகள்
அஞ்சா,
ஓசையே
இல்லாமல்
இருக்கவேண்டும்
என்பது
என்
நோக்கம்
அன்று.
வண்டுகளின்
காதில்,
கணிரென்ற
புதுவகையான
ஓசை
விழவேண்டாம்
என்ற
எண்ணத்தால்தான்
மணியின்
ஓசையை
விலக்க
நினைத்தேன்.
அந்த
ஓசைதான்
நெடுந்தூரம்
சென்று
கிண்னென
இயம்பும்.
வண்டுகள்
முன்பு
கேளாத
ஓசை
அது.
துணை
யொடு
வதிந்த
தாது
உண்
பறவைகளாகிய
அவற்றைப்
பேதுறச்
செய்யும்.
நான்
பிரிந்து
சிலகாலம்
இருந்தவன்;
இப்போது
என்
காதலியோடு
சேரப்
போகிறேன்.
இந்த
நிலையில்
தம்
துணைகளோடு
ஒன்றியிருக்கும்
வண்டுகளைப்
பிரிக்கும்
செயலைச்
செய்யலாமா?"
வலவன்
தலைவனுடைய
பேரன்பையும்
நுண்ணறிவை
யும்
அறிந்து
வாய்பேச
இயலாமல்
நின்றுவிட்டான்.
தலைவனுக்குத்தான்
எத்தனை
கூரிய
அறிவு!
இப்படியெல்லாம்
நடக்கும்,
இதற்கு
இப்படிப்
பாதுகாப்புச்
செய்யவேண்டும்
என்று
ஆராய்ந்து
செய்கிறனே!
உயிர்களிடத்தில்
அவனுக்கு
உள்ள
அன்புதான்
எவ்வளவு
சிறந்தது!
குதிரையை
வருத்தக்கூடாது
என்கிறான்,
வண்டுகளின்
இன்பத்துக்கு
இடையூறு
செய்யக்கூடாது
என்கிறான்.
அவனுடைய
அருள்
தன்மையை
வலவன்
வியந்தான்.
பிற
உயிர்களின்
இன்பத்தை
எண்ணி
வாழும்
மகனுக்கு,
வேண்டிய
இன்பம்
எளிதிலே
கிடைக்கும்
என்ற
உண்மை
நிச்சயமாகத்
தலைவன்
திறத்தில்
பலிக்கும்
என்ற
உறுதி
கொண்டான்.
உள்ளத்துக்குள்
தலைவனையும்
தலைவியையும்
வாழ்த்தினான்.
தேர்
புறப்பட்டுவிட்டது.
வளைந்த
உளையையும்
(தலை
யாட்டம்),
கத்திரிகையினாலே
கொய்த
பிடரிமயிரையும்
உடைய
புரவிகளின்
வாயிலே
பூட்டிய
கடிவாள
வாரைத்
தளரவிட்டுத்
பிடித்தான்
வலவன்.
மணிகளின்
நாவைக்
கட்டிவிட்டான்.
தேர்
தலைவனுடைய
ஊரை
அணுகியது.
அதைக்
கண்டவர்கள்
தலைவன்
வரும்
செய்தியைத்
தோழிக்குச்
சொன்னார்கள்.
அதைக்
கேட்டே
தோழி
தலைவிக்குச்
சொல்லலானாள்.
குதிரையின்
வாரைப்
பரிய
(தளர)
விட்டதையும்
மணி
நாவை
ஆர்த்ததையும்
தோழி
சொன்னாள்.
”அழகான
வேலைப்பாடுள்ள
தேர்மீதில்
அதோ
வருகிறார்
தலைவர்;
இந்த
முல்லை
நிலத்
தலைவராகிய
குறும்பொறை
நாடர்
வருகிறார்;
உன்
ஆருயிர்க்
காதலர்
வருகிறார்,
இனி
உன்
பிரிவுத்
துன்பம்
ஒழியும்.
உன்
மாட்சிமைப்பட்ட
நலத்தை
விரும்பி
வந்துவிட்டார்.
அவர்
தாம்
முன்பெல்லாம்
சொல்வாரே!
சிராப்பள்ளிக்
குன்றத்தில்
வளர்ந்த
காந்தளைப்
போன்ற
நறுமணம்
உன்
மேனியில்
வீசுகிற
தென்று.
அந்த
நறுமணமும்
பிற
நலங்களும்
அவர்
உள்ளத்திலே
என்றும்
இருக்கின்றன
அல்லவா?
அதனால்
சொன்னபடியே
கானத்தைக்
கவின்
பெறச்
செய்த
இந்தக்
கார்
காலத்தில்
வத்துவிட்டார்.”
தோழி
கூறி
முடித்தாள்;
வாயிலில்
தேரும்
வந்து
நின்றது.
தோழி
தலைவியிடம்
கார்காலம்
வந்ததையும்
தலைவன்
வந்ததையும்
சொல்வதாக
அமைந்தது
பின்வரும்
பாட்டு,
முல்லை
முல்லை
வைந்நுனை
தோன்ற,
இல்லமொடு
பைங்காற்
கொன்றை
மென்பிணி
அவிழ
இரும்பு
திரித்தன்ன
மாயிரு
மருப்பிற்
பரல்
அவல்
அடைய
இரலை
தெறிப்ப,
மலர்ந்த
ஞாலம்
புலம்புபுறம்
கொடுப்பக் 5
கருவி
வானம்
கதழ்உறை
சிதறிக்
கார்செய்
தன்றே,
கவின்பெறு
கானம்;
குரங்குஉளைப்
பொலிந்த
கொய்சுவற்
புரவி
நரம்பு
ஆர்த்
தன்ன
வாங்குவள்
பரியப்,
பூத்த
பொங்கர்த்
துணையொடு
வதிந்த 10
தாதுஉண்
பறவை
பேதுறல்
அஞ்சி
மணிநா
ஆர்த்த
மாண்வினைத்
தேரன்,
உவக்காண்
தோன்றும்,
குறும்பொறை
நாடன்,
கறங்குஇகை
விழவின்
உறங்தைக்
குணாது
நெடும்பெருங்
குன்றத்து
அமன்ற
காந்தட் 15
போதுஅவிழ்
அலரி
நாறும்
ஆய்தொடி
அறிவை!
நின்
மாண்நலம்
படர்ந்தே,
[
முல்லை
யரும்பின்
கூர்மையானமுனை
தெளிவாகத்
தெரியவும்,
தேற்றாவின்
மொட்டோடு
பசுமையான
காம்பையுடைய
கொன்றையின்
மொட்டு
மலரவும்,
இரும்புக்
கம்பியை
முறுக்கினதுபோன்ற
கரிய
பெரிய
கொம்புகளையுடைய
ஆண்
மான்கள்
பருக்கைக்
கற்களையுடைய
பள்ளம்
முழுவதும்
துள்ளவும்,
விளக்கம்
பெற்ற
உலகத்தில்
வெப்பமாகிய
வருத்தம்
ஓடவும்,
தொகுதி
யாகிய
மேகங்கள்
வேகமான
துளிகளைச்
சிதறும்படி
செய்து
கார்காலம்
அழகு
பெற்ற
காட்டை
உண்டாக்கியது;
வளைந்த
தலையாட்டத்தையும்
கத்தரித்த
பிடரி
மயிரையும்
இடைய
குதிரைகளின்
நரம்பைக்
கட்டியது
போன்ற
தோற்றத்தையுடையதும்,
கையினலே
இழுப்பதுமாகிய
வார்
தளர,
மலர்ந்த
மரங்களில்
பெடை
வண்டுகளோடு
தங்கிய
தாதை
உண்ணும்
ஆண்
வண்டுகள்
கலங்குவதற்கு
அஞ்சி,
மணிகளின்
நாக்கைக்
கட்டியதும்
மாட்சிமை
பெற்ற
சிற்பத்
தொழிலையுடையதும்
ஆகிய
தேரையுடையவனாகி,
சிறிய
கரடுகளையுடைய
முல்லை
நிலத்
தலைவனாகிய
உன்
காதலன்,
அங்கே
தோன்றுகிறான்;
நீ
பார்ப்பாயாக;
ஒலிக்கின்ற
இசைகளை
உடைய
விழவைப்
பெற்ற
உறையூர்க்குக்
கிழக்கே
உள்ளதாகிய
உயர்ந்த
பெரிய
குன்றத்தில்
நெருங்கி
வளர்ந்த
காந்தளினது
பேரரும்பு
மலர்ந்த
மலரின்
மணத்தை
வீசும்,
ஆராய்ந்தெடுத்த
வளையை
அணிந்த
பெண்ணே,
நின்
சிறப்பை
உடைய
அழகை
நினைந்து
விரும்பி.
விரும்பித்
தோன்றுகிறான்
என்றபடி.
கானம்
கார்
செய்தன்று;
குறும்பொறை
நாடன்,
வள்
பரிய,
அஞ்சி
ஆர்த்த
தேரனாகி,
நின்
நலம்
படர்ந்து
தோன்றும்
என்று
கூட்டிப்
பொருள்
கொள்ளவேண்டும்,
1.
வை-கூர்மை-நுனை-முனை.
இல்லம்-தேற்றா
மரம்,
இதன்
கொட்டையைக்
கலங்கல்
நீரைத்
தெளிய
வைக்க
உபயோகிக்கிறோம்.
2.
கால்-காம்பு
பிணி-மொட்டு.
அவிழ-மலர.
3.
திரித்தன்ன-திரித்தது
அன்ன
என்பதன்
விகாரம்;
திரித்தாலன்ன
என்பதன்
விகாரம்
என்று
கூறுவதும்
உண்டு.
மா-கரிய.
இரு-பெரிய.
மருப்பின்-கொம்பை
உடைய,
4.
பரல்-பருக்கைக்
கல்;
கூழாங்கல்.
அவல்
-பள்ளம்,
அடைய-முற்றும்.
இரலை-கலைமான்.
தெறிப்ப
-துள்ளிக்
குதிக்க,
மாயிரு
மருப்பின்
இரலை
பரல்
அவல்
அடையத்
தெறிப்ப
என்று
கூட்டிக்கொள்ள
வேண்டும்.
மருப்பின்
இரலை
என்று
தொடரும்
சொற்களுக்கு
இடையே
வந்த
"பரலவ
லடைய"
என்ற
தொடரை
இடைப்
பிறவரல்
என்று
கூறுவர்.
5.
மலர்ந்த-மலர்ச்சி
பெற்ற,
ஞாலம்-உலகம்,
புலம்பு-வருத்தம்;
மழையில்லாமையால்
உண்டான
வெப்பமாகிய
வருத்தம்
புறங்கொடுப்ப-புறங்காட்டி
ஒட,
'புறக்
கொடுப்ப"
என்றும்
பாடம்
உண்டு;
‘புறத்தேபோக"
என்று
அதற்குப்
பொருள்
எழுதுவர்
பழைய
உரையாசிரியர்.
6.
கருவி-ஆவி,
இடி,
மின்னல்
முதலியவற்றின்
தொகுதி.
வானம்-மேகம்.
கதழ்-விரையும்,
உறை-நீர்த்
துளி.
7.
கார்-கார்காலம்;
எழுவாய்.
செய்தன்று-செய்தது.
கவின்-அழகு.
கானம்-காட்டை.
8.
குரங்கு-வளைந்த,
உளைப்
பொலிந்த-தலையாட்டத்தால்
விளக்கம்
பெற்ற,
கொய்-கத்தரிகையால்
கத்தரித்த,
சுவல்-பிடரி
மயிர்,
புரவி-குதிரை,
9.
ஆர்த்தன்ன
- ஆர்த்தது
அன்ன;
கட்டினது
போன்ற,
வாங்கு-
கையினால்
இழுக்கும்.
வள்-வார்;
இங்கே
கடிவாள
வார்.
பரிய-தளர,
10.
பொங்கர்-மரத்தில்,
துணை-பெடை
வண்டு.
வதிந்த-தங்கிய,
தாது
உண்
பறவை
என்றதனால்
வண்டாயிற்று.
11
பேதுறல்-கலங்குதலுக்கு.
நரம்பு
ஆர்த்தன்ன
பறவை
என்று
கூட்டுவர்
பழைய
உரையாசிரியர்;
யாழ்
நரம்பு
ஒலித்தாற்
போன்ற
இசையையுடைய
வண்டு
என்று
பொருள்
கொள்ள
வேண்டும்.
12.
ஆர்த்த-கட்டிய.
மாண்
வினை-மாட்சிமைப்
பட்ட
வேலைப்பாட்டை
உடைய;
இது
தேருக்கு
அடை.
தேரன்-தேரை
உடையவனாகி.
13.
உவக்
காண்:
அங்கே
பார்
என்னும்
பொருளை
உடையதோர்
இடைச்சொல்.
இதை,
ஒட்டி
நின்ற
இடைச்சொல்
என்று
பரிமேலழகர்
கூறுவர்.
குறும்பொறை
நாடன்
என்பது
முல்லை
நிலத்
தலைவனைக்
குறிக்கும்
பெயர்.
சிறிய
சிறிய
கரடுகள்
முல்லை
நிலத்தில்
இருப்பதால்
அப்படிப்
பெயர்
வந்தது.
14.
கறங்கு-ஒலிக்கின்ற
இசை-ஒலி.
விழவு
உறையூரில்
பங்குனி
உத்தரம்
மிகச்
சிறப்பாக
நடைபெற்றதென்று
இறையனரகப்
பொருளின்
உரையினால்
தெரியவருகிறது.
உறந்தை-உறையூர்,
குணாது-கிழக்கில்
உள்ளதாகிய,
15.
நெடுமை-உயரம்.
உறையூருக்குக்
கிழக்கே
உள்ள
குன்றம்
என்று
சொன்னமையால்
திருச்சிராப்பள்ளி
மலையாயிற்று,
அமன்ற-நெருங்கி
வளர்ந்த,
16.
போது-மலரும்
பருவத்தில்
உள்ள
பேரரும்பு,
அலரி
நாறும்-மலரின்
மணத்தை
வீசும்.
அலரின்
நாறும்
என்பதும்
ஒரு
பாடம்; "மலரைப்
போல
மணம்
வீசும்”
என்று
அதற்குப்
பொருள்
கொள்ள
வேண்டும்,
17
ஆய்தொடி
- ஆராய்ந்
தெடுத்தவளை,
அரிவை
என்பது
மகளிர்
பருவங்களில்
ஒன்றாயினும்
இங்கே
அச்சொல்
பருவத்தைக்
குறியாமல்
பெண்
என்னும்
அளவில்
நின்றது.
மாண்
நலம்-மாட்சிமைப்
பட்ட
அழகு.
படர்ந்து-நினைத்து,
விரும்பி.]
முல்லைத்
திணைக்குரியதாகிய
இப்
பாட்டில்
காணம்
என்றதனால்
நிலமும்,
கார்
என்றதனால்
காலமுமாகிய
முதற்
பொருள்கள்
வந்தன.
முல்லை,
இல்லம்,
கொன்றை,
இரலை,
குறும்
பொறை
நாடன்
என்ற
கருப்பொருள்கள்
வந்தன.
தலைவி
தன்
மனையின்கண்
இருக்கும்போது
நிகழ்ந்தது.
இது.
ஆதலின்
இருத்தல்
என்னும்
உரிப்
பொருளும்
வந்தது.
இதன்
துறை
"தோழி
தலைமகளைப்
பருவங்காட்டி
வற்புறுத்தியது"
என்பது.
வற்புறுத்தியது-துணிவு
பெறச்
செய்தது.
இதைப்
பாடியவர்
குறுங்குடி
மருதனார்,
இது
அகநானுாற்றில் 4-ஆவது
பாட்டு.
4.
காட்டு
வழி
காதலன்
வந்து
மறைவிலே
நிற்கிறான்,
அவனை
வழக்கம்போல்
கண்டு
அளவளாவும்
பொருட்டுத்
தோழியைத்
துணையாகக்
கொண்டு
காதலி
போகிறாள்.
ஒருவரும்
அறியாமல்
காதலன்
வருவதும்,
வீட்டில்
உள்ளவர்கள்
அறியாமல்
கட்டுக்
காவலைக்
கடந்து
சென்று
காதலி
அவனைச்
சந்திப்பதும்
எவ்வளவு
இடர்ப்பாடான
செயல்கள்!
ஒவ்வொரு
நாளும்
என்ன
துன்பம்
நேருமோ
என்றும்,
தம்முடைய
களவுக்
காதல்
வெளிப்பட்டு
விடுமோ
என்றும்
தலைவி
அஞ்சிக்கொண்டே
இருக்கிறாள்.
இந்த
அச்சம்
தலைவனைக்
கண்டு
அளவளாவும்
பொழுது
அவளுக்கு
மறந்து
போகிறது.
அவனைக்
காணாத
பொழு
தெல்லாம்
அச்சமும்
கவலையும்
அவள்
உள்ளத்தில்
தோன்றித்
துன்புறுத்துகின்றன.
அவர்கள்
இரவிலே
வீட்டுப்
புறத்திலே
சந்தித்தார்கள்.
காடும்
மலையும்
கடந்து
தலைவன்
வரவேண்டும்.
இடையில்
எவ்வளவோ
இடையூறுகள்
நேரலாம்.
மழை
பெய்து
வழிதெரியாமல்
போகலாம்.
காட்டாற்றில்
வெள்ளம்
மிகுதியாக
வரலாம்.
இரை
தேடி
உலவும்
புலி
முதலிய
விலங்குகளால்
துன்பம்
உண்டாகலாம்.
இவற்றையெல்லாம்
தலைவி
நினைந்து
பார்க்கிறாள்.
நினைக்க
நினைக்க,
அவளுடைய
துயருக்கு
முடிவே
இல்லை
யென்று
தோற்றுகிறது.
சில
நாட்கள்
தலைவனால்
வர
இயலாமற்
போகும்.
அப்போதெல்லாம்
அவனைச்
சந்திக்காத
துன்பம்
அளவு
கடந்து
நிற்கும்.
சில
நாட்களில்
அவன்
வந்து
நிற்பான்.
காவல்
மிகுதியால்
அவள்
போக
முடியாது.
அவன்
வராத
சமயத்தில்
அவள்
போய்ப்
பார்த்து
விட்டு
ஏமாந்து
வருவாள்.
இத்தகைய
காரணங்களாலும்
அவ்
விருவரும்
சந்திக்க
முடியாமல்
போவது
உண்டு.
இப்படி
எத்தனை
நாளைக்கு
உறுதியில்லாத
சந்திப்பிலே
இன்பம்
காணுவது?-தலைவிக்குக்
கவலை
அதிகமாயிற்று.
தன்
உள்ளக்
கிடக்கையைத்
தன்
காதலனுக்கு
எடுத்துச்
சொல்லலாம்
என்று
காதலி
நினைத்தாள்.
அவனைக்
கண்டுவிட்டால்தான்
எல்லாத்
துன்பங்களும்
மறந்து
போகின்றனவே
அவனைக்
கண்டு
அளவளாவும்
நேரம்
மிக
அருமையானது.
அந்த
அரிய
காலத்தில்
மனத்துக்குத்
துன்பத்தை
உண்டாக்கும்
இத்தகைய
பேச்சையா
பேசுவது?
அவனுடைய
முன்னிலையில்
அவள்
மெழுகுப்
பொம்மையாக
உருகிப்
போகிறாளே!
நின்று
நிதானித்துத்
தன்
துயரத்தைச்
சொல்ல
முடியுமா
என்ன?
விளக்கை
எடுத்துக்கொண்டு
சென்று
இருளைத்
தேடிப்
பிடிக்க
முடியுமா?
தலைவன்
அருகில்
இருக்கும்
போது
துயரத்தைப்
பற்றிய
நினைவு
தலையெடுக்குமா?
ஆனலும்
தோழி
தலைவிக்கு
அடிக்கடி
சொல்கிறாள்;
’நீ
எப்படியும்
அவரிடம்
நம்
நிலைமையை
வற்புறுத்திச்
சொல்லத்தான்
வேண்டும்?’
என்று
பல
முறை
கூறுகிறாள்.
தலைவியின்
நன்மையை
எண்ணியே
அப்படிச்
சொல்கிறாள்.
தலைவனைக்
காணும்
பொழுதைவிடக்
காணாப்பொழுது
அதிகமாதலால்,
தலைவனைச்
சந்திப்பதால்
உண்டாகும்
இன்பத்தைவிட
அவனைப்
பிரிந்திருப்பதால்
உண்டாகும்
துன்பமே
அளவில்
அதிகமாக
இருக்கிறது.
இந்த
நிலையில்
எவ்வளவு
காலத்துக்கு
இருக்க
முடியும்?
எப்படியாவது
தன்
காதலனுக்குத்
தான்
பிரிவினால்
படும்
துயரத்தைச்
சொல்லிவிட
வேண்டும்
என்று
தீர்மானித்துக்
கொண்டாள்.
தோழியும்
அவளுக்கு
ஊக்கம்
ஊட்டினாள்.
“இன்று
எப்படியாவது
சொல்லி
விடுகிறேன்,
பார்?”
என்றாள்
தலைவி.
தலைவன்
வீட்டுக்கு
வெளியில்
உள்ள
சோலையில்
வந்திருக்கிறான்.
வந்து
குறிப்பாக
ஓசை
செய்கிறான்.
அவன்
தான்
வந்ததைத்
தெரிவிக்கும்
சங்கீதம்
அது.
அதைக்
கேட்டவுடன்
தலைவிக்கு
ஒருவகையான
பரபரப்பு
உண்டாகிறது.
தன்
தாய்
முதலியவர்கள்
தூங்குகிறார்களா
என்று
கவனித்துவிட்டு
மெல்ல
எழுந்து
வருகிறாள்.
அவளுடன்
தோழியும்
துணையாகச்
செல்கிறாள்.
வீட்டுக்கு
வெளியே
வந்து
விட்டார்கள்.
“இன்று
எப்படியாவது
தலைவருக்கு
நம்முடைய
இன்னலைச்
சொல்லிவிடு.
நாளைக்கு
நாளைக்கு
என்று
தள்ளிப்
போட்டுக்கொண்டே
போனுல்
நமக்குத்தான்
துன்பம்”
என்றாள்
தோழி.
"தோழி,
நீ
சொல்வது
என்
நன்மைக்குத்தான்
என்பது
எனக்குத்
தெரியாதா?
நன்றாகத்
தெரிகிறது.
ஆனால்
அவருக்கு
முன்னே
நிற்கும்போது
எல்லாம்
மறந்து
போகிறது.
நான்
என்
செய்வேன்!"
என்று
தலைவி
கூறினாள்.
"அப்படியாளுல்
இன்றைக்கும்
உன்
உறுதியெல்லாம்
அவருக்கு
முன்னே
குலைந்துதானே
போகும்?
எப்படி
நீ
அவரிடம்
துணிந்து
சொல்லப்
போகிறாய்?”
”சொல்லவேண்டு
மென்றுதான்
உறுதியுடன்
தீர்மானம்
செய்து
கொள்கிறேன்.
சொல்லிவிடலாம்
என்றும்
தோன்றுகிறது.
எல்லாம்
வீட்டில்
இருக்கும்
போது;
அவரைக்
காணாமல்
இருக்கும்போது.
கண்டு
விட்டாலோ
நான்
என்னையே
மறந்து
போகிறேன்?”
"அப்படியானால்
இதற்கு
வழி
என்ன...எனக்கு
ஒன்று
தோன்றுகிறது.
அப்படிச்
செய்யலாமா?”
”சொல்,
தோழி.
என்ன
செய்யலாம்,
சொல்.
எனக்கும்
நம்
நிலையை
அவர்
அறிய
வேண்டும்
என்ற
ஆவல்
இருக்கத்தான்
இருக்கிறது.
வழி
தெரியாமல்
திண்டாடுகிறேன்.
ஒரு
வழியைச்
சொல்.”
"அவர்
இதோ
வந்திருக்கிறார்.
நீ
நேரே
அவரிடம்
போக
வேண்டாம்.
அவர்
வத்தது
தெரியாதது
போல
நாம்
போவோம்,
அவர்
நிற்கும்
இடத்துக்கு
அருகில்,
மறைவாக
நாம்
நிற்போம்.
என்னுடன்
பேசுகிறவளைப்
போல
நீ
உன்
மனத்துயரத்தை
எடுத்துச்
சொல்.
அது
அவர்
காதில்
விழும்.
அவருக்கு
நம்
நிலை
தெளிவாகத்
தெரிந்தால்
இந்தத்
துன்பத்தினின்றும்
நம்மை
மீட்க
முயல்வார்.”
நீ
சொல்வது
தக்கதாகவே
தோன்றுகிறது.
அவர்
சிறைப்புறத்தாராக -
நடுவே
மறைப்பு
இருக்க
அதற்கு
அப்பாலே
நிற்பவராக-இருக்கும்போது,
என்னால்
என்
குறையைச்
சொல்ல
முடியுமென்றே
படுகிறது.
அவர்
முகத்தைக்
காணாமல்
உன்னோடே
தானே
சொல்லப்
போகிறேன்?
சொல்லிவிடுகிறேன்."
இவ்வாறு
அவ்விருவரும்
ஒரு
வழியைக்
கண்டு
பிடித்தார்கள்.
தலைவன்
அருகிலே
மறைவாக
நிற்கிறான்
சிறைப்புறத்தானாக
நிற்கிறன்.
தலைவியும்
தோழியும்
அந்த
மறைவுக்கு
இப்பால்
நிற்கிறார்கள்.
தோழி
பேச்சை
ஆரம்பிக்கிறாள்.
தோழி:
ஒவ்வொரு
நாளும்
தலைவரைப்
பிரிந்திருக்கும்
போது
நீ
எவ்வளவு
அல்லற்
படுகிறாய்
அவரை
ஒரு
நாள்
சந்திக்காமற்
போனாலும்
புழுவாகத்
துடித்துப்
போகிறாயே!
தலைவி
: நான்
என்ன
செய்வேன்
தோழி!
அவரைக்
காணாத
காலத்தில்
என்
உயிர்
என்
உடலில்
இருக்கிற
தில்லை.
எப்போதும்
அவர்
அருகிலே
இருக்கவேண்டும்
என்று
தோன்றுகிறது.
அவர்
வராத
நாட்களில்
நாமே
அவரைத்
தேடிக்கொண்டு
அவர்
ஊருக்கே
போய்விடலாம்
என்று
தோன்றுகிறது.
தோழி:
அவர்
ஊருக்குப்
போவதாவது!
அது
என்ன,
எளிதிலே
முடிகிற
காரியமா?
தலைவி
: ஆம்,
அவரைச்
சந்திக்காமல்
போகும்
இராக்
காலத்தில்
ஒருவரும்
அறியாமல்
அவர்
ஊருக்குப்
போகலாம்
என்றே
நினைக்கிறேன்.
தோழி
: பாதி
ராத்திரியில்
காட்டு
வழியில்
செல்ல
வேண்டும்.
மலைப்
பகுதிகளை
யெல்லாம்
கடந்து
போக
வேண்டுமே!
அப்படிப்போவது
விளையாட்டா?
ஆடவர்களே
செல்ல
முடியாத
அருமைப்பாடு
உடைய
தல்லவா
அந்த
வழி?
அதில்
நீ
நள்ளிரவில்
போகலாம்
என்கிறாயே!
தலைவி
: இங்கே
படும்
துன்பத்தைக்
காட்டிலும்
அப்படிப்
போவதனால்
துன்பம்
மிகுதியாக
இருக்கும்
என்று
நான்
நினைக்கவில்லை.
அன்றியும்
துன்பத்தின்
முடிவில்
இன்பம்
இருந்தால்,
முன்
பட்ட
துன்பமெல்லாம்
மறந்து
போய்விடும்.
தோழி:
கங்குலில்
காட்டு
விலங்குகள்
எங்கும்
திரிந்து
கொண்டிருக்கும்
என்ற
செய்தி
உனக்குத்
தெரியுமா?
தலைவி
: நன்றாகத்
தெரியுமே!
கறையான்கள்
அணு
அணுவாகக்
கட்டிய
புற்றில்
அந்தக்
கறையான்களே
ஈசலாக
மாறிப்
பறக்கும்.
அந்தக்
ஈசலுள்ள
புற்றிலே
பாம்பு
வந்து
குடியிருக்கும்.
புற்றிற்குள்
கறையான்
முட்டையும்
கறையான்
புழுவும்
அடை
அடையாக
இருக்கும்.
அந்த
அடையைப்
புற்றஞ்
சோறு
என்றும்
குரும்பி
என்றும்
சொல்வதை
நான்
கேட்டிருக்கிறேன்.
தோழி
: ஈசற்
புற்றையும்
அதனுள்
இருக்கும்
பாம்பையும்
பற்றி
நாம்
அஞ்ச
வேண்டியதில்லையே!
தலைவி
: பொறு,
பொறு.
அந்தப்
புற்றஞ்
சோற்றைத்
தின்பதென்றல்
கரடிகளுக்கு
மிகுதியான
விருப்பம்,
ஆகையால்
பாதி
ராத்திரியில்
அவை
ஈசற்
புற்றை
அடைந்து
தம்முடைய
கைகளைப்
புற்றுக்குள்ளே
விடும்.
பெரிய
கையையுடைய
ஆண்
கரடிகள்
அவை.
தோல்
உறைக்குள்ளே
அமைந்த
நகங்கள்
கூர்மையாக
இருக்கும்.
அந்தக்
கைகளைப்
புற்றுக்குள்
விட்டு
அங்குள்ள
குரும்பியாகிய
உணவை
எடுத்து
அவை
உண்ணும்.
அப்படிக்
கைகளை
உள்ளே
விடும்போது
அதனாள்
சுகமாகக்
கிடக்கின்ற
பாம்பை
நகங்கள்
குத்தும்,
அதனால்
பாம்புக்குத்
துன்பம்
உண்டாகும்.
தோழி:
அதற்கும்
நமக்கும்
என்ன
தொடர்பு?
தலைவி
: அந்தப்
பாதி
ராத்திரியில்
இருட்
பிழம்புபோலக்
கரடிகள்
புற்றுக்களைத்
தேடிக்
கொண்டு
வந்தால்,
நாம்
தடையின்றி
வழியிலே
செல்ல
முடியுமா?
புற்றிலே
கையை
விட்ட
கரடியின்
நகத்தால்
குத்தப்
பட்ட
பாம்பு
சீறியெழுந்து
ஓடாதா?
புற்றுக்குள்ளே
கிடக்கும்
பாம்புக்கு
நாம்
அஞ்ச
வேண்டாம்.
கரடியால்
துன்புறுத்தப்பட்ட
பாம்பு
சீறி
ஒடும்போது
அதற்கு
அஞ்ச
வேண்டாமா?
தோழி
:
நள்ளிரவில்
காட்டு
வழியே
போவது
அரிது;
போனால்
கரடியும்
பாம்பும்
துன்புறுத்தும்
என்று
சொல்கிறாய்.
நானும்
இரவில்
காட்டு
வழியே
போவது
அரிது
என்றுதானே
சொல்கிறேன்?
தலைவி
: நீ
போகக்
கூடாது
என்று
சொல்கிறாய்,
நானே
இரவிலே
காட்டிலே
போவதனால்
உண்டாகும்
இடையூறுகளைத்
தெளிவாக
அறிந்திருக்கிறேன்;
அப்படி
அறிந்திருந்தும்,
போவது
அரிதன்று
என்று
துணிவு
கொள்கிறேன்.
இதுதான்
உன்
கருத்துக்கும்
என்
கருத்துக்கும்
உள்ள
வேறுபாடு.
தோழி
: போகிற
வழியில்
கரடி
மாத்திரந்தானா
இருக்கும்?
தலைவி
:
கரடியைவிடக்
கொடிய
விலங்குகள்
இருக்கும்
என்பதும்
எனக்கு
நன்றாகத்
தெரியும்.
புலி
முதலிய
காட்டு
விலங்குகள்
இரவிலே
தானே
ஒடியாடி
விளை
யாடி
உணவு
தேடி
அலையும்?
காட்டுப்
பன்றிகள்
அங்கும்
இங்கும்
ஓடும்
பன்றியைக்
கண்ட
ஆண்
புலி
அதை
அடித்துக்
கொல்லும்.
ஒரே
வாயில்
அதை
விழுங்கும்படி
அந்தப்
புலிக்கு
அவ்வளவு
பெரிய
வாய்,
ஆழமான
வாய்.
பேழ்
வாயையுடைய
புலி,
தான்
கொன்ற
கேழலை
(பன்றியை)த்
தன்
மனைவிக்கும்
குட்டிகளுக்கும்
ஊட்டுவதற்காக
இழுத்துச்
செல்லும்,
பலா
மரங்கள்
நிறைந்த
காட்டில்
பலாப்
பழம்
கம்மென்று
மணக்கும்.
புலி
காட்டுப்
பன்றி
யைத்
தரதரவென்று
இழுத்துச்
செல்லுவதனால்
அந்த
மலைச்சாரலெல்லாம்
அதன்
இரத்தமும்
ஊனும்
சிதறி
விழுந்து
புலால்
நாற்றம்
வீசும்.
மூங்கில்கள்
வளர்ந்து
ஓங்கிய
மலையில்
இந்தக்
காட்சிகளை
நேரில்
கண்டவர்கள்
இவற்றைச்
சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
முதல்
நாள்
பலாப்பழம்
மணம்
வீசின
இடத்தில்
அடுத்த
நாள்
முதல்
சில
நாள்
புலால்
நாற்றம்
சகிக்க
முடியாதாம்.
பேழ்
வாயை
யுடைய
ஏற்றை(ஆண்
புலி)
கேழலை
அட்டு
அதைப்
பலாஅமன்ற
(செறிந்த)
அடுக்கம்
(மலைச்சாரல்)
நாறும்படி
ஈர்த்துச்
சென்றதுதான்
அதற்குக்
காரணம்.
அங்கே
மூங்கில்கள்
ஒன்றேடு
ஒன்று
உராய்ந்து
ஒலிக்கும்.
அந்த
ஒலிகூடப்
பயத்தை
உண்டாக்கும்.
இவ்வளவு
அச்சந்தரும்
வழியாக
இருந்தாலும்
அந்த
வழிகள்
போவதற்கு
அரிய
அல்ல.
தோழி:
நீ
சொல்வதைக்
கேட்கக்
கேட்க
எனக்குச்
சிரிப்புத்தான்
வருகிறது.
“நெருப்புச்
சுடும்;
ஆளுல்
அதை
நான்
தொடுவேன்.
தேள்
கொட்டும்
என்று
எனக்கு
நன்றகத்
தெரியும்;
ஆனால்
அதை
நான்
தொடுவேன்?
என்று
சொல்வதுபோல
இருக்கிறது
உன்
பேச்சு.
காட்டு
வழியைப்
பற்றி
இவ்வளவு
தான்
தெரியுமா?
இன்னும்
தெரியுமா?”
தலைவி
: இன்னும்
எத்தனையோ
தெரியும்.
கரடியும்
பாம்பும்
கேழலும்
புலியும்
உலாவும்
மலைச்
சாரலில்
நள்ளிரவில்
இன்னும்
நிகழும்
நிகழ்ச்சிகளைச்
சொல்கிறேன்
கேள்.
மலைச்
சாரலில்
சில
பள்ளமான
இடங்கள்
உண்டு.
அங்கே
எப்போதும்
நீர்வளம்
மிகுந்திருக்கும்.
ஈரம்
அரு
த
குழிகள்
பல
உண்டு.
தாழ்ந்த
இடங்களையுடைய
அந்த
அசும்புகளில் (பள்ளங்களில்)
சுரபுன்னை
மரங்கள்
வளர்ந்திருக்கும்.
வாழை
மரங்களும்
செறிந்து
வளர்ந்திருக்கும்.
வாழை
மரம்
என்றால்
யானைகளுக்கு
அதிக
விருப்பம்,
வழையோடு
வாழையும்
ஓங்கிய
அந்த
இடத்தில்
வாழையைத்
தின்ன
வந்த
யானை
பள்ளத்தில்
விழுந்து,
மேலே
ஏறமாட்டாமல்
தவிக்கும்;
பிளிறும்,
அந்த
முழக்கத்தைக்
கேட்ட
பெண்
யானையானது
அங்கே
வந்து
பார்க்கும்.
களிறு
அசும்பிலே
(குழியில்)
விழுந்து
மேலேற
மாட்டாமல்
இருப்பதைக்
கண்டு
அதை
மீட்க
முயலும்,
கைகொடுத்துத்
தூக்க
முடியுமா?
பள்ளத்தில்
அல்லவா
யானை
விழுந்து
கிடக்கிறது?
அதிலிருந்து
தாவி
ஏற
முடியாது.
படிகளின்மேல்
காலை
வைத்து
மெல்ல
ஏறலாம்.
காட்டு
யானைகளுக்கு
இப்படி
உதவி
செய்கிறவர்கள்
யார்?
மண்ணை
வெட்டிப்
படியாக்கும்
மக்கள்
யார்
வரப்
போகிறார்கள்?
பிடி
ஒரு
தந்திரம்
செய்யும்.
அருகிலுள்ள
மரங்களை
முறித்து
அந்தக்
குழியில்
போடும்.
அந்த
மரங்களையே
படிகளாகக்
கொண்டு
களிறு
மேலே
ஏறி
வந்துவிடும்.
ஆண்
யானை
பிளிறுவதும்,
அதைக்
கேட்டு
வந்த
பிடி
கத்துவதும்,
மரங்களை
முறித்துப்
போடுவதுமாகிய
ஓசை
நெடுந்தூரம்
கேட்கும்.
மலையின்
மேலே
உள்ள
குகையிலே
சென்று
மோதி
எதிரொலிக்கும்.
வானை
முட்ட
வளர்ந்த
சிகரத்தின்
விடர்களில்
(குகைகளில்)
சென்று
தாக்கிய
ஒலி
நாலு
திசையிலும்
சிலம்பும்.
அந்த
ஓசையைக்
கேட்டால்
உள்ளம்
நடுங்கும்.
தோழி
: அப்படி
இருந்தாலும்
போவது
அரிதன்று
என்று
நீ
சொல்லுகிறாய்.
அப்படித்தானே?
மறைவிலே
நின்று
இவர்களுடைய
பேச்சைக்
கேட்டுக்
கொண்டிருக்கிற
தலைவனுக்கே
சிரிப்பு
வருகிறது.
மலைச்
சாரலைப்
பற்றியும்
அதனூடே
செல்லும்
வழியின்
அருமையைப்
பற்றியும்
இத்தனை
செய்திகளைத்
தலைவி
எப்படி
அறிந்தாள்
என்று
வியப்படைகிறான்,
இத்தனை
இடையூறுகளை
அறிந்தும்
அவற்றைக்
கடந்து
செல்வது
அரிதன்று
என்று
சொல்கிறாளே!
அதற்கு
காரணம்
இன்னது
என்று
அவனுக்குப்
புலனாகவில்லை.
அதைத்
தெரிந்துகொள்ள
வேண்டும்
என்ற
ஆவல்
அவனுக்கு
அதிகமாகிக்
கொண்டே
வருகிறது.
தலைவி
பேசிக்கொண்டே
இருக்கிறாள்.
தலைவி
: ஆம்;
அவருடைய
நாட்டில்
மலையில்
இரவில்
இத்தனை
நிகழ்ச்சிகள்
நிகழ்கின்றன.
இத்தனை
இடையூறுகளுக்கும்
இடையே
எப்படிப்
போவது
என்று
நீ
நினைக்கிறாய்.
காட்டு
விலங்குகளின்
தொல்லை
இருக்கட்டும்.
பகலிலே
போனல்தான்
அந்த
வழிநெடுக
ஒரே
மாதிரி
நேராக
இருக்குமா?
வளைந்து
வளைந்து
செல்லும்,
நடுநடுவில்
ஏறியும்
இறங்கியும்
போகும்.
இடையிடையே
குண்டுக்
கற்களும்
பாறைகளும்
குறுக்கிடும்.
அந்தக்
கற்களுக்குக்
கணக்கே
இல்லை.
பத்து
எட்டு
நடந்தால்
அங்கே
ஒரு
கல்
குறுக்கிடும்.
அப்புறம்
கொஞ்ச
தூரம்
சென்றால்
அங்கே
ஒரு
பாறை
நிற்கும்.
இப்படியாகப்
பிறங்கல்
(உயர்ந்து
நிற்கும்
கல்)
இடையிடையே
கிடக்கும்
வழி
அது.
தோழி
: என்ன
துணிவோடு
இந்த
வழியில்
நீ
போவாய்?
தலைவி
: இவ்வளவு
இன்னலையும்
தாண்டிக்கொண்டு,
இத்தனை
சிக்கலான
வழியில்,
இருளும்
இடையூறும்
கொடுமையும்
அருமையும்
நிறைந்த
இந்த
அருவழியில்,
மெல்லிய
விலங்கு
ஒன்று
போவதை
நான்
அறிவேன்.
மெத்தென்ற
மேனியும்
மருண்ட
நோக்கும்
மென்மையே
உருவெடுத்தது
போன்ற
தோற்றமும்
உடைய
அவ்விலங்கு
போகும்போது
நான்
போகக்
கூடாதா?
தோழி:
அது
என்ன
விலங்கு?
தலைவி
: எந்த
விலங்கை
மெல்லியலாராகிய
மங்கை
மாருக்கு
உவமை
சொல்லுகிறார்களோ,
எந்த
விலங்கின்
கண்களைப்
பெண்மணிகளின்
கண்களுக்கு
ஒப்புக்
கூறுகிறார்களோ,
எந்த
விலங்கு
பிற
பிராணிகளைக்
கொன்று
உண்ணும்
கொடிய
விலங்குகள்
நிரம்பிய
காட்டிலே
புல்லையும்
நீரையும்
உண்டு
வாழ்கிறதோ,
அந்த
விலங்கைத்
தான்
சொல்கிறேன்.
தோழி
: மட
மான்
போன்ற
பெண்ணே
உன்
கருத்து
எனக்கு
விளங்கிவிட்டது.
தலைவி
: ஆம்,
மான்
அந்த
வழியில்
போகும்போது,
மடமானே,
எழில்
மானே
என்றெல்லாம்
அழைக்கும்
என்
போன்ற
பெண்
போகக்
கூடாதா?
மான்
செல்லும்
வழியிலே
மான்
போன்ற
நானும்
மெல்ல
மெல்லப்
போகலாமே!
தோழி
:
இருட்டில்
வழி
எப்படித்
தெரியும்?
தலைவி
: மின்னல்
மின்னுமே;
அந்த
மின்னலின்
ஒளியிலே
மெல்ல
மெல்லச்
சிறுக
அடியிட்டு
நடந்து
போகலாம்;
மயங்காமல்,
வழி
தட்டுக்
கெடாமல்
நடந்து
போய்
விடலாம்.
தோழி
:
எல்லாவற்றையும்
தண்ணீர்
குடிப்பது
போல
எளிதிலே
சொல்லி
விட்டாய்.
செயலில்
செய்யும்
போதல்லவா
துன்பம்
தெரியும்?
தலைவி:
துன்பம்
இல்லாமல்
இன்பம்
ஏது?
எவ்வளவுக்கு
எவ்வளவு
துன்பத்தின்
கடுமை
மிகுதியாக
இருக்கிறதோ
அவ்வளவுக்கு
அவ்வளவு
அதன்
பின்
கிடைக்கும்
இன்பத்தின்
சுவை
மிகுதியாகும்.
இங்கே,
தலைவர்
வருவார்
வருவார்
என்று
காத்துக்
கிடந்து,
அவர்
வராததனால்
ஏமாந்து
நைந்து
சாம்புவதை
விட,
அவரை
நிச்சயமாகக்
காணலாம்
என்ற
நம்பிக்கை
இருக்குமானால்
எவ்வளவு
இடையூறுகளானாலும்
பொறுத்துக்கொண்டு
செல்லலாம்.
ஆனால்
ஒன்று
மிகவும்
முக்கியமானது.
தோழி:
என்ன
அது?
தலைவி
: இத்தனை
அல்லற்பட்டுக்கொண்டு
நாம்
போனல்
தம்மை
வா
என்று
அன்போடு
வரவேற்கிறவர்கள்
அங்கே
இருக்க
வேண்டும்.
தோழி:
ஏன்?
நம்
தலைவர்
வரவேற்கமாட்டாரா?
தலைவி
:
உரிமையுடன்
வரவேற்க
வேண்டுமே,
"இவ்வளவு
இடர்ப்பட்டு
நீங்கள்
இங்கே
எப்படி
வந்தீர்கள்?
வழிதெரியாமல்
குறுக்கும்
நெடுக்குமாக
நீங்கள்
அலைந்திருப்பீர்களே!
என்று
சொல்லி
அன்போடு
விசாரிப்பவர்கள்
இருந்தால்
எவ்வளவு
துன்பமானாலும்
பொறுத்துக்
கொண்டு
போகலாம்.
தோழி:
உண்மை
அன்பு
உடையவர்கள்
அப்படிச்
செய்ய
மாட்டார்களா?
நிச்சயமாக
விசாரிப்பார்கள்.
தலைவி
:
தலையெல்லாம்
மழைத்
துளியால்
நனைந்துவிடும்.
ஈரத்
தலையோடு
நாம்
அங்கே
போய்
நிற்கும்போது, *நான்தான்
வருகிறேன்
என்றேனே!
உங்களை
யார்
வரச்
சொன்னர்கள்?”
என்று
கேளாமல்,
அன்போடு
மெல்ல
மெல்ல
மழைத்
துளியால்
நனைந்த
நீல
மணி
போன்ற
கரிய
நம்முடைய
கூந்தலை
அவிழ்த்துவிட்டு
முதுகு
மறையும்படியாகச்
செய்து
வாரிப்
பிழிந்து,
”அடடா!
எத்தனை
அன்போடு
என்னைத்
தேடிக்
கொண்டு
வந்திருக்கிறீர்கள்!"
என்று
யாராவது
சொல்வார்களா? 'இந்தச்
சிடுக்கான
வழி
உங்களுக்குத்
தெரியுமா?
எப்படித்
தெரியும்?’
என்று
கேட்பார்களா?
தோழி
: நாம்
கரடியையும்
பாம்பையும்
புலியையும்
யானையையும்
கண்டு
அஞ்சாமல்
அவற்றைத்
தாண்டிக்
கொண்டு
சென்ற
அருமையை
நிச்சயம்
பாராட்டி
நம்
இளைப்பை
ஆற்றப்
புகுவார்
நின்
காதலர்.
தலைவி
:ஐந்து
பகுதியாகப்
புனையும்
என்
மணியை
ஒத்த
ஐம்பாலை
(கூந்தலை)ச்
சிறுபுறம் (முதுகு)
புதைய
வாரிக்
கூந்தற்
கொத்தைப்
பிழிந்து,
”நீயிர்
இச்சுரம்
அறிதலும்
அறிதிரோ"
என்றுகூறி,
அன்போடு
உசாவி
ஆறுதல்
கூறுபவர்களைப்
பெறுவதாக
இருந்தால்,
இந்தக்
கடிய
வழியைக்
கடந்து
செல்வது
அரிது
அன்று;
இது
நிச்சயம்.
ஈயற்
புற்றத்தின்
ஈரமான
பக்கத்தை
அடுத்து
வந்து
குரும்பியாகிய
வல்சியை
(உணவை)
உண்ணும்
பெருங்கையையுடைய
கரடியேற்றைக்கும்
அஞ்சமாட்டேன்.
அந்தக்
கரடியின்
வள்
உகிர்
கதுவ
லால்
மதன்
(பலம்)
அழியும்
பாம்புக்கும்
அச்சம்
கொள்ளேன்.
கங்குலின்
பாதியென்றும்
தளர்ச்சி
அடையமாட்டேன்.
பெரிய
கேழலை
அட்ட
பேழ்
வாயை
யுடைய
ஆண்
புலிக்கும்
அஞ்சேன்.
கழைகள்
நரலும்
ஓசையைக்
கேட்டு
நெஞ்சம்
கலங்கேன்.
அசும்பிலே
பட்ட
களிற்றின்
ஆரவாரத்துக்கும்,
அதனை
மேலே
ஏற்றும்பொருட்டு
மரத்தை
முறித்துப்படியாக
இடும்பிடியின்
முழக்கத்துக்கும்
என்
உள்ளம்
ஒடியாது.
மான்
செல்லும்
வழியிலே
நடப்பேன்.
தலைவர்
நம்
கூந்தலே
வாரிப்
பிழிவாரி
என்பது
உறுதியானால்,
அவர்
நம்மை
அன்போடு
கண்டு
பேசி
ஆறுதல்
கூறுவது
திண்ணமானால்;
அவற்றால்
வரும்
இன்பம்
அளவிடற்
கரியதல்லவா?
அந்த
இன்பம்
கிடைக்குமானால்,
இத்தனை
இடையூறுகளையும்
கடந்து
செல்வது
அரிது
அன்று.
தலைவி
ஆவேசம்
வந்தவளைப்
போலப்
பேசினாள்,
தலைவன்
காதில்
அவள்
கூறியவை
யாவும்
விழுந்தன.
"நம்மிடத்தில்
தான்
இவளுக்கு
எத்தனை
காதல்
நம்மைப்
பிரிந்து
இருப்பதைக்
காட்டிலும்
இரவிலே
இந்தக்
கடுமையான
வழியைக்
கடக்கும்
துன்பத்தைப்
பொறுப்பது
மேல்
என்றல்லவா
சொல்கிறாள்?
இவள்
மனம்
இவ்வளவு
தூரம்
வருந்தும்படி
நாம்
செய்தது
தவறு.
இனியும்
இந்தக்
களவு
ஒழுக்கத்தை
மேற்கொண்டு
இவளைச்
சந்திப்பது
தவறு.
விரைவில்
முறைப்படி
இவளுக்குப்
பரிசம்
போட்டு
மணம்
செய்து
கொள்ள
முயல
வேண்டும்.
அப்பால்
ஒரு
கணமும்
இவளை
விட்டுப்
பிரியாமல்
உலகறியக்
கணவன்
மனைவியராக
வாழலாம்’
என்ற
தீர்மானத்தை
அவன்
செய்து
கொண்டான்.
தலைவி
விரும்பிய
முடிவு
அதுதானே?
தலைவி
தோழியிடம்
கூறுவதாகப்
பாட்டு
அமைந்
திருக்கிறது.
குறிஞ்சி
ஈயற்
புற்றத்து
ஈர்ம்புறத்து
இறுத்த
குரும்பி
வல்சிப்
பெருங்கை
ஏற்றை
தூங்குதோல்
துதிய
வள்உகிர்
கதுவலின்
பாம்புமதன்
அழியும்
பால்நாட்
கங்குலும்
அரிய
அல்லமன்:
இகுளை!
பெரிய
5
கேழல்
அட்ட
பேழ்வாய்
ஏற்றை
பலாஅமல்
அடுக்கம்
புலாவ
ஈர்க்கும்
கழைநரல்
சிலம்பின்
ஆங்கண்,
வழையொடு
வாழை
ஓங்கிய
தாழ்கண்
அசும்பில்
படுகடுங்
களிற்றின்
வருத்தம்
சொலியப்
10
பிடிபடி
முறுக்கிய
பெருமரப்
பூசல்
விண்தோய்
விடரகத்து
இயம்பும்
அவர்நாட்டு,
எண்ணரும்
பிறங்கல்
மான்அதர்
மயங்காது
மின்னாவிடச்
சிறிய
ஒதுங்கி
மென்மெலத்,
துளிதலைத்
தலைஇய
மணிஏர்
ஐம்பால்
15
சிறுபுறம்
புதைய
வாரிக்
குரல்பிழியூஉ,
‘நெறிகெட
விலங்கிய
நீயிர்
இச்சுரம்
அறிதலும்
அறிதிரோ?’
என்னுநர்ப்
பெறினே.
[
ஈசல்
நிறைந்த
ஈரமான
பக்கத்தை
அடைந்த,
புற்றஞ்
சோற்றை
உணவாகக்
கொண்ட,
பெரிய
கையை
யுடைய
ஆண்
கரடியானது,
தொங்கும்
தோலாகிய
உறையை
யுடைய
கூர்மையான
நகத்தால்
பற்றுவதனால்
புற்றுக்
குள்ளே
வாழும்
பாம்புகள்
தம்
வலிமை
அழிந்து
துன்புறும்
ஒரு
நாளின்
பாதியாகிய
நள்ளிரவிலும்
செல்லும்
செயல்
அருமையை
உடையதன்று;
தோழி
பெரிய
வாயையுடைய
ஆண்
புலி
பலா
மரங்கள்
செறிந்த
மலைச்
சாரலெல்லாம்
புலால்
நாற்றம்
வீசும்படியாக
அதை
இழுக்கும்
மூங்கில்கள்
ஒலிக்கும்
மலைச்
சாரலையுடைய
அவ்விடத்தே,
சுரபுன்னை
மரங்களோடு
வாழை
மரங்கள்
ஓங்கி
வளர்ந்த
தாழ்ந்த
இடத்தையுடைய
பள்ளத்தில்
(அவ்
வாழையைத்
தின்னும்
பொருட்டுச்
சென்று)
விழுந்த
கோபத்தையுடைய
ஆண்
யானையின்
வருத்தத்தை
நீக்கும்
பொருட்டு
அதன்
மனைவியாகிய
பெண்
யானை
படியாவதற்காக
முறித்து
இட்ட
பெரிய
மரங்களால்
உண்டான
பெரிய
ஓசை
வானத்தைத்
தொடும்
மலையின்
குகையிலே
சென்று
ஒலிக்கும்
அவருடைய
நாட்டில்,
எண்ணுவதற்கரிய,
உயர்ந்து
தோன்றும்
பல
கற்களினிடையே
மான்
செல்லும்
வழியில்
கலக்கமின்றி,
மின்னல்
ஒளி
விட
அதன்
துணைகொண்டு
குறுக
அடியிட்டு
மெல்ல
மெல்லச்சென்று,
மழைத்துளி
தலையிலே
பெய்த
ஈரமான
நீல
மிணியைப்
போன்ற
கூந்தலை
(அவிழ்த்துவிட்டு)
மேல்
முதுகு
மறையும்
படியாக
வாரிக்
கூந்தற்
கொத்தைப்
பிழிந்து,
"வழி
தெரியாமல்
தடுமாறிக்
குறுக்கும்
நெடுக்கும்
வந்த
நீங்கள்
இந்த
அரிய
வழியை
அறிவீர்களோ?"
என்று
அன்புடன்
உசாவுபவரைப்
பெற்றால்.
மென்மெல
ஒதுங்கிப்
பெறின்
அரிய
அல்ல
என்று
கூட்டிப்
பொருள்
செய்ய
வேண்டும்.
ஒதுங்கி
என்பதை
ஒதுங்க
என்பதன்
திரிபாகக்
கொண்டு,
பெறின்,
பானுட்
கங்குலும்
ஒதுங்க
அரிய
அல்ல
என்று
கூட்டிப்
பொருள்
உரைப்பார்
பழைய
உரையாசிரியர்.
t.
ஈயல்-ஈசல்.
புற்றம்-புற்று,
ஈர்ம்புறம்-ஈரமான
பக்கம்.
இறுத்த-வந்தடைந்த
2.
குரும்பிய
-
புற்ருஞ்சோறு.
வல்சி-உணவு.
ஏற்றை
- ஆண்
விலங்கு.
குரும்பி
வல்சி
என்ற
அடைமொழிகளால்
கரடியென்று
தெரியவருகிறது.
3.
துரங்கு-தொங்கும்.
துதிய-
உறையையுடைய.
வள்-கூர்மையான,
உகிர்-நகம்,
கதுவலின்-பற்றுவதனால்,
4.
மதன்-வலிமை.
பால்
நாள்-நாளில்
பாதி;
என்றது
நடு
யாமத்தை.
கங்குல்-இரவு.
5.
அரிய
அல்ல-அரியவை
அல்ல;
செல்லும்
செய்கைகள்
பலவகையாக
இருத்தலால்
அரிய
என்று
பன்மையாகச்
சொன்னாள்.
மன்:
உறுதியை
உணர்த்தியது.
சொல்லு
வாரில்லை
யென்ற
கழிவிரக்கத்தைக்
குறித்ததாகப்
பழைய
உரைகாரர்
சொல்வர்.
இகுளை-தோழியே.
6.
கேழல்-காட்டுப்
பன்றி,
அட்ட-கொன்ற,
பேழ்
வாய்-ஆழமான
வாயையுடைய,
கேழல்
அட்ட
என்ற
அடை
மொழிகளால்
ஏற்றை
என்பது
இங்கே
ஆண்
புலி
யைக்
குறித்தது.
7.
அமல்-செறிந்த,
அடிக்கம்
-
மலைப்பக்கம்.
புலாவ
- புலால்
நாற்றம்
வீசும்படியாக,
ஈர்க்கும்-தரையின்மேல்
இழுத்துச்
செல்லும்,
8.
கழை-மூங்கில்,
நரல்-ஒன்றனோடு
ஒன்று
உராய்ந்து
ஒலிக்கும்.
சிலம்பு-மலை.
ஆங்கண்-அவ்விடத்தில்,
வழை-சுரபுன்னை.
இது
மலையில்
வளர்வது.
"வழைய
மல்
வியன்
காடு"
(பதிற்றுப்
பத்து,
41:13)
என்றும், "வழை
யமை
நறுஞ்சாரல்"
(கலித்தொகை,
53:1)
என்றும்
வேறு
நூல்களிலும்
வந்திருப்பது
காண்க.
9.
தாழ்
கண்-தாழ்ந்த
இடத்தை
உடைய,
’அசும்பு
-மலையில்
நீர்
அறாத
குழி’
(பழைய
உரை.)
10.
படும்-விழுந்த,
கடுமை-இங்கே
கோப்ம்
. சொலிய-போக்க,
11.
படி
முறுக்கிய-படியாக
ஒடித்து
இட்ட,
பூசல்
- பெரிய
ஓசை,
12.
விண்
தோய்-வானத்தளவும்
உயர்ந்த,
விடர
கத்து-குகைகளில்,
இயம்பும்-ஒலிக்கும்.
அவரென்றது
தலைவனை.
13.
பிறங்கல்-உயர்ந்து
தோன்றும்
கற்கள்.
மான்
அதர்-மான்
செல்லும்
வழி.
மயங்காது-இதுவோ
அதுவோ
என்று
கலங்காமல்.
14.
மின்னுவிட-மின்னல்
ஒளியைவிட்டு
விளங்க,
சிறிய,
குறுகிய
எட்டு;
சிறிய
ஒதுங்கி-குறுக
அடியிட்டு
நடந்து;
மெத்தென
நடந்து
என்பது
பழைய
உரை,
ஒதுங்கி
- நடந்து,
மென்
மெல
ஒதுங்கி
என்று
முன்னே
கூட்டிப்
பொருள்
கொள்ளவேண்டும்.
மென்மெல
வாரி
என்று
கூட்டுவர்
பழைய
உரையாசிரியர்,
15.
தலைத்தலைஇய-தலையிலே
பெய்த
மணி,
ஏர் -
நீல
மணியின்
அழகையுடைவ.
ஐம்பால்-கூந்தல்;
ஐந்து
வகையாக
முடிக்கும்
பகுதியை
உடைமையால்
கூந்தலுக்கு
இப்
பெயர்
வந்தது;
பால்-பகுதி.
அந்த-ஐந்தாவன-சூழல்
அளகம்,
கொண்டை,
பனிச்சை,
துஞ்சை
என்பன.
கருமை
நீளம்,
நெய்ப்பு,
கடை
குழன்றிருத்தல்,
வளைவு
என்னும்
ஐந்து
தன்மையுடைமையால்
ஐம்பால்
என்னும்
பெயர்
வந்ததாகக்
கூறுபவர்களும்
உண்டு
16.
சிறுபுறம்-மேல்
மிதுகு.
புதைய-மறைய.
குரல்;
கூர்தல்,
பிழியூஉ-பிழிந்து.
17.
நெறிகெட-வழி
தட்டுப்படாது
போக,
விலங்கிய-தப்பிக்
குறுக்கும்
நெடுக்கும்
சென்ற,
வழி,
செலவு
கெட
விலங்கிய
சுரம்
என்று
கூட்டுநர்
உரைகாரர்.
சுரம்
-
கடத்தற்கு
அரிய
வழி.
18.
அறிதலும்
அறிதிரோ-அறிவீர்களோ,
என்னு
நர்-என்று
கூறி
விசாரிப்பவரை.
பெறின்-பெற்றால்.
பெறுவது
நிச்சயமில்லை
யென்ற
குறிப்பை
உடையது.
"தலைமகன்
சிறைப்
புறத்தானாகத்
தோழிக்குச்
சொல்லுவா
ளாய்த்
தலைமகள்
சொல்லியது"
என்பது
இதன்
துறை.
சிறை
என்பது
மறைப்பு.
மறைவான
இடத்திக்கு
அப்புறத்தில்
தலைவன்
இருந்தபோது
தலைவி
கூறியது
இது.
அவன்
அங்கே
இருப்பதைத்
தெரிந்துகொண்டு,
அவன்
காதில்
விழவேண்டும்
என்ற
கருத்தோடே
சொல்வது
இது.
இந்தப்
பாட்டில்
தலைவனுடைய
நாட்டில்
நிகழ்வனவாக
மூன்று
நிகழ்ச்சிகளைச்
சொன்னாள்
தலைவி,
பாதி
ராத்திரியில்
கரடி
புற்றஞ்
சோற்றை
எடுக்கும்போது
புற்றுக்குள்ளே
இருக்கும்
பாம்பின்மேல்
அதன்
நகங்கள்
பட்டு
அப்
பாம்பு
துன்பத்தை
அடைவது
ஒரு
நிகழ்ச்சி.
இவ்வாறு
சொல்வதற்கு
உட்பொருள்
ஒன்று
உண்டென்றும்,
தலைவனுடைய
செயலையே
வேறு
வகையில்
மறைத்துச்
சொன்னது
இது
என்றும்
கொள்வது
மரபு.
இவ்வகையாக
உள்ளடக்கிய
பொருளை
இறைச்சி
என்றும்
உள்ளுறை
யுவமம்
என்றும்
புலவர்கள்
சொல்வார்கள்.
அந்த
இரண்டுக்கும்
உள்ள
வேறுபாடு
மிகவும்
நுட்பமானது.
கரடியின்
செயலுக்கு
உரிய
இறைச்சிப்
பொருளாகப்
பழைய
உரையாசிரியர்
எழுதியிருப்பது
வருமாறு:
*ஏற்றையானது
பாம்பை
வருத்தவேண்டும்
என்னும்
கருத்து
இல்லையாயினும்,
அது
தன்
காரியம்
செய்யவே
வள்உகிர்
படுதலாகிய
அவ்வளவிற்குப்
பாம்பு
வலியழிந்தாற்போல,
அவர்
நம்மை
வருத்த
வேண்டும்
என்னும்
கருத்து
இல்லையாயிருக்கவே,
தமது
காரியமாகிய
களவின்
பத்திலே
ஒழுகவே,
ஆறு
இன்னாமை,
ஊறு
இன்னாமை[1]
முதலாகிய
இவ்வளவிற்கே
நாம்
வருந்தும்படியாய்
விட்
டது
என்றவாறு’
-------
1. ஆறு
இன்னாமை-தலைவன்
வரும்
பொல்லாங்
குடையதாக
இருத்தல்,
ஊறு
இன்னாமை-அவன்
வரும்
போது
உண்டாகும்
இடையூறுகள்
தீயனவாக
இருத்தல்.
அடுத்த
நிகழ்ச்சி
ஆண்
புலி
கேழலை
இழுக்கும்
செயல்
அதற்குரிய
உள்ளுறைப்
பொருளைப்
பின்வருமாறு
உரை
யாசிரியர்
தெளிவுபடுத்துவார்.
’புலியானது
தான்
நுகர்தற்
பொருட்டுக்
கேழலை
அட்டுப்
பழ
நாற்றத்தையுடைய
பலா
அமல்
அடுக்கம்
புலாவ
ஈர்த்தாற்போல,
அவரும்
இன்பம்
துய்த்தற்
பொருட்டு
வந்து
நம்மைக்
கூடி,
அக்கூட்டத்தாலே
புகழ்ச்சியை
உடைத்தாகிய
நம்
குடியை
இகழ்ச்சியுடைத்
தாம்படி
பண்ணினார்’
என்றவாறு.
ஆண்
யானை
பள்ளத்தில்
அது
ஏறும்பொருட்டுப்
பிடி
மரத்தை
முறித்துப்
போடும்
நிகழ்ச்சியின்
உட்
கருத்தை
யும்
பழைய
உரைகாரர்
தெரிவிக்கிறார்,
'வாழை
நுகர
வந்த
யானை
அதன்
அயலதாகிய
அசும்பின்
குழியிலே
விழுந்ததாக,
பின்பு
அக்குழியினின்றும்
ஏறமாட்டாது
வாழையாகிய
உணவையும்
இழந்துழி,
பிடி
அது
ஏறுதற்குப்
படியாக
மரம்
முறிக்கின்ற
ஓசை
விண்
தோய்
விடரகத்து
இயம்பினாற்போல,
அவரும்
நமது
நலம்
நுகர
வந்து
களவொழுக்கமாகிய
குழியிலே
விழுந்து
இக்
களவொழுக்கமாகிய
இதனை
விட்டு
வரையவும்
மாட்டாது
[1] நமது
காவலருமையால்
இக்
களவொழுக்கினை
நுகரவும்
மாட்டாது
துயரப்படுகின்று
பூமி,
அறத்தொடு
நிலை[2]
முதலாகிய
இவற்றால்
மகளிராகிய
நாமே
வரைய
முயலும்
வழி,
அம்
முயற்சியானே
ஊரெல்லாம்
அறியும்
படி
பண்ணினார்,என்றவாறு.’
-------
[1].
கல்யாணம்
செய்து
கொள்ள
முடியாமல்,
[2].
அறத்தொடு
நிலை-அறத்தொடு
நிற்றல்;
தலைவி
தலைவன்
ஒருவன்பால்
காதல்
கொண்டிருக்கிறாள்
என்ற
உண்மையைத்
தெரிவித்தல்.
இந்தப்
பாட்டுக்
குறிஞ்சித்
தினையைச்
சார்ந்தது.
அடுக்கம்,
சிலம்பு,
விண்டோய்
விடரகம்
என்பவற்றல்
மலைப்
பகுதி
என்பது
பெறப்பட்டது.
இது
குறிஞ்சித்
திணையில்
முதற்
பொருளாகிய
நிலம்.
காலம்
சிறுபொழுது
பெரும்பொழுது
என
இருவகைப்படும்.
பானுட்
கங்குல்
என்பதனால்
யாமமாகிய
சிறு
பொழுதும்,
துளிதலைத்
தலைஇய
என்ற
குறிப்பினுல்
சிறு
தூறல்
தூறும்
கூதிர்க்
காலமாகிய
பெரும்
பொழுதும்
சொல்லப்
பெற்றன.
கரடி,
கேழல்,
புலி,
யானை
என்னும் "விலங்குகளும்"
வழை,
வாழை
என்னும்
மரங்களும்
குறிஞ்சி
நிலத்துக்குரிய
கருப்பொருள்கள்,
இரவுக்குறியில்
தலைவன்
கேட்கப்
பேசுவதாதலின்
புணர்ச்சியின்
நிமித்தமாகிய
உரிப்பொரு
ளாயிற்று.
“இரவிலே
காட்டில்
நிகழும்
இத்தனை
நிகழ்ச்சிகளையும்
தலைவி
அறிந்திருக்கிறாள்.
ஆதலின்
நாம்
இவளைத்
தேடி
வரும்போது
இந்த
இடையூறுகளைத்
தாண்டி
ஊறு
பாடின்றி
வரவேண்டுமே
என்ற
அச்சம்
இவளுக்கு
இருக்கும்"
என்ற
எண்ணமும்
தலைவனுக்கு
உண்டாகும்படி
இக்கூற்றுச்
செய்கிறது.
ஒரு
பக்கம்
புற்றெழுந்த
இடத்தில்
கரடியும்
பாம்பும்
காட்சி
தரவும்,
மற்றொரு
சார்
புலி
கேழலை
அடுதலும்
அட்டு
இழுத்துச்
செல்லுதலுமாகிய
செயல்கள்
நிகழவும்,
வேறொரு
சார்
களிறு
குழியில்
விழுந்து
பிளிறப்
பிடி
மரத்தை
ஒடித்துப்போட
ஒரே
ஆரவாரமாக
இருக்கவும்
எம்மருங்கும்
அஞ்சுவதற்குரிய
சூழலாக
மலைச்
சாரற்
காட்டைப்
புலவர்
காட்டுகிறார்,
இதனைப்
பாடியவர்
பெருங்குன்றுார்
கிழார்,
அவருடைய
இயற்
பெயர்
இன்னதென்று
தெரியவில்லை.
இது
அகநானுாற்றின்
எட்டாவது
பாட்டு.
5. “தேரைக்
கண்டேன்"
கார்
காலம்
வந்துவிட்டது.
எங்கும்
மழை
பெய்து
நிலம்
குளிர்ந்திருக்கிறது.
காடும்
அதைச்
சார்ந்த
பகுதியு
மாகிய
முல்லை
நிலத்தில்
எங்கே
பார்த்தாலும்
ஒரே
பசுமைக்
காட்சி.
இயற்கையாகவே
அழகுடைய
முல்லை
நிலம்
இப்போது
பின்னும்
பேரழகு
பெற்று
விளங்குகிறது.
பூமியெல்லாம்
செம்மண்
நிலம்.
எங்கே
வெட்டினாலும்
செவ்வரக்கைப்
போல
இருக்கும்
மண்ணைக்
காணலாம்.
அரக்கைப்
போன்ற
செந்நிலத்தில்
பெரிய
வழிகள்
இருக்கின்றன.
வழிகளின்
இரு
மருங்கும்
மரமும்
செடியும்
கொடியும்
வளர்ந்திருக்கும்.
காயா
மரங்கள்
முல்லை
நிலத்துக்கு
உரியவை.
அவை
மழை
பெய்தமையால்
நன்றாகத்
தளிர்த்துப்
பூத்துக்
குலுங்குகின்றன.
மலர்ந்த
மலர்கள்
உதிர
உதிரப்
புதிய
மலர்கள்
பூக்கின்றன.
அப்படி
உதிர்ந்த
மலர்கள்
செந்நிலப்
பெரு
வழியில்
படர்ந்து
கிடக்கின்றன.
செம்மண்
தரையில்
நீலநிற
மலர்
பரவிக்
கிடந்தால்
அது
எடுப்பாகத்
தெரியுமல்லவா?
மழைக்
காலத்தில்
காடுகளில்
இந்திர
கோபப்
பூச்சிகள்
தரையில்
ஊரும்
செக்கச்
செவேலென்ற
நிறமும்
பட்டுப்
போன்ற
மென்மையும்
உடைய
அந்தப்
பூச்சிகளைப்
பட்டுப்
பூச்சி
யென்றும்
சொல்வதுண்டு.
ஈயல்
மூதாய்
என்று
புலவர்கள்
சொல்வார்கள்.
அந்த
இந்திர
கோபப்
பூச்சிகள்
முல்லை
நிலத்து
வழி
முழுவதும்
ஊர்கின்றன.
ஊரும்
பொழுது
கோடு
கிழித்தாற்
போன்ற
சுவடுகள்
உண்டாகின்றன;
கோலம்
போட்டாற்
போன்ற
கீற்றுகள்
அமைகின்றன.
சேற்றிலும்
மணலிலும்
நண்டும்
நத்தையும்
ஊர்ந்து
செல்லும்போது
சுவடுகள்
கோடு
கோடாக
அமைவதைப்
பார்த்திருக்கிறோம்
அல்லவா?
இங்கே
செந்நிலப்
பெருவழியில்
பல
இந்திர
கோபப்
பூச்சிகள்
ஒரே
கூட்டமாக
ஊர்கின்றன;
ஒருங்கே
ஊர்கின்றன;
வரி
(கோடு)
அமைய
ஊர்கின்றன.
அப்படி
ஊர்வதை
வரித்தல்
என்று
சொல்வார்கள்.
ஈயல்
மூதாய்
பல
இந்தப்
பெரு
வழியில்
வரிக்கின்றன.
முன்பே
காயா
மலர்
உதிர்ந்து
பரவிக்
கிடக்கும்
அந்த
வழியில்
இந்திர
கோபப்
பூச்சிகள்
ஊர்கின்றன.
காயாம்
பூ
கரு
நீல
நிறமானவை;
இந்திரகோபப்
பூச்சியோ
இரத்தம்
போல
நல்ல
சிவப்பு
நிறம்
உடையவை.
இவை
இரண்டையும்
கலந்து
பார்க்கும்போது
நீல
மணியும்
பவளமும்
ஒன்றாகக்
கிடப்பது
போலத்
தோன்றுகின்றன.
நீல
மணியையும்
பவளத்தையும்
இடையிடையே
கோத்து,
வளை,
மாலை
முதலிய
அணிகளை
இயற்றுவதுண்டு.
அப்படி
நீலமணியும்
பவளமும்
இணைந்த
இணைப்பை
மணிப்பிரவாளம்
என்றும்
மணிமிடை
பவள
மென்றும்
சொல்வது
வழக்கம்.
காயாம்
பூவும்
ஈயல்
மூதாயும்
கலந்து
மணிமிடை
பவளம்
போலக்
காட்சி
அளிக்கின்றன.
இத்தகைய
காட்டு
வழி,
தன்னுடைய
எல்லையிலே
ஒரு
குன்றத்தைக்
கொண்டிருக்கிறது.
சிறிய
குன்றை
வளைந்து
அந்த
முல்லை
நிலம்
இருக்கிறது.
அழகிய
காடு
அது.
மரங்கள்
செறிந்து
வளர்ந்திருப்பதனால்
மற்ற
இடங்களில்
எளிதிலே
செல்வது
போல
அந்தக்
காட்டுக்குள்
செல்ல
இயலாது;
அது
செல்லுதற்கு
அரிய
இடங்களை
உடையது.
இன்னும்
மக்கள்
புகாமல்,
அவர்கள்
காற்றே
படாமல்
உள்ள
பல
இடங்கள்
இந்த
அடர்ந்த
காட்டுக்குள்
இருக்கின்றன.
குன்றத்தைச்
சூழ்ந்த
அழகிய
காட்டு
நிலத்தின்
அரிய
இடங்களிலே
மான்கள்
உல்லாச
மாக
வாழ்கின்றன.
ஆண்
மானும்
பெண்
மானும்
ஒருங்கு
இயைந்து
வாழ்கின்றன.
மென்மையான
பிணையைத்
தழுவி
ஆண்
மானாகிய
இரலை
அங்கும்
இங்கும்
ஓடுகின்றது.
ஆண்
மானுடைய
கொம்பு
முறுக்கினது
போல
இருக்கிறது;
திரிந்த
மருப்பை
உடைய
இரலை
அது.
மழை
பெய்தமையால்
புதிய
புல்
முளைத்து
வளர்ந்திருக்கிறது.
புல்லை
உண்ணுவதற்காகப்
பிணை
மானும்
கலை
மானும்
துள்ளிக்
குதித்து
ஒடுகின்றன.
பிணை
மானை
விட்டு
விடாமல்
தன்
அருகிலே
அது
வருகிறதா
என்று
கவனித்துக்
கொண்டே
ஆண்
மான்
குதித்துக்
குதித்து
ஒடுகிறது.
தனக்கு
விருந்தாகிய
புல்லை
உண்ணுகையில்
தன்
பிணையை
விட்டு
உண்டால்
அதற்கு
உண்டதாகவே
தோற்றாதே!
ஆகவே
புல்லை
அருந்தும்
பொருட்டுச்
செல்லும்
கலைமான்
மடப்
பிணையைத்
தழுவிக்
கொண்டே,
துள்ளிக்
குதித்துச்
செல்கிறது.
காட்டில்
மற்றொரு
பகுதியில்
மக்கள்
வந்து
பயன்
பெறும்
இடங்கள்
இருக்கின்றன.
முல்லை
நிலத்தில்
வாழும்
கோவலர்கள்
விரிந்த
நிலப்
பரப்பில்
மேய்வதற்குரிய
மாடுகளை
அழைத்துச்
சென்று
மேயச்
செய்கிறார்கள்.
அங்கங்கே
பரவலாக
அவற்றைக்
காலாற
நடந்து
மேய
விடுவார்கள்.
அந்த
நிலப்
பரப்பு
முழுதும்
ஆக்கள்
பரவி
யிருக்கின்றன.
ஆயர்கள்
பசுக்களை
அப்படிப்
பரப்பி
விட்டுத்
தாங்கள்
காட்டின்
அழகிலே
மனத்தைப்
பறி
கொடுத்து
உலாவுகிறார்கள்.
முல்லை
நிலத்தில்
அங்கங்கே
கரடுகள்
இருக்கும்.
அவற்றைக்
குறும்பொறை
என்று
சொல்வார்கள்.
அவற்றின்
அருகில்
முல்லைக்
கொடி
படர்ந்திருக்கிறது.
கார்
காலத்தில்
முல்லை
பூத்துச்
சொரியும்.
வேறு
மலர்களும்
மலர்ந்திருக்கின்றன.
ஆயர்களுக்கு
மலரென்றல்
மிகுதியான
விருப்பம்.
அப்படியே
பறித்துத்
தம்
தலையிலே
வைத்துக்
கொள்கிறார்கள்.
மணமுள்ள
மலர்களைப்
பறித்து
விளையாடுகிறார்கள்.
அவர்கள்
மேயும்படி
விட்ட
நல்ல
பசுக்கள்
நன்றாக
வளர்ந்த
அறுகம்
புல்லை
வயிறு
நிறைய
மேய்கின்றன.
கட்டும்
காவலும்
தனியுரிமையும்
இல்லாத
அந்த
நிலத்துப்
புல்லெல்லாம்
ஆவுக்குச்
சொந்தம்.
வயிறு
நிறையப்
புல்லைத்
தின்று
அசை
போட்ட
பசுக்கள்
மாலை
நேரம்
ஆனவுடன்
வீட்டுக்குப்
போக
அவாவுகின்றன்.
வீட்டைப்
பற்றி
அவற்றிற்குக்
கவலை
இல்லை.
வீட்டிலே
உள்ள
கன்றுகளை
நினைத்துக்
கொள்கின்றன.
காலையில்
வந்தவை
அவை.
வேண்டிய
மட்டும்
அறுகம்
புல்லைத்
தின்று
அசை
போட்டு
விட்டன.
அவற்றின்
வயிறு
மாத்திரமா
நிரம்பியிருக்கின்றன?
மடியும்
நிரம்பிவிட்டன.
அவற்றின்
கனம்
அந்த
மாடுகளாலேயே
தாங்கமுடியவில்லை.
அந்தக்
கனம்
கன்றுகளை
நினைப்பூட்டுகின்றன.
நினைத்தவுடன்
மடியில்
இனிய
பால்
பிலிற்றுகிறது.
கோவலர்கள்
தலை
நிறையப்
பூவை
அணிந்து
கொண்டார்கள்.
மாலையிலே
மலர்ந்த
முல்லைப்
பூ
அவர்கள்
குழலிலே
மணக்கிறது.
பசு
மாடுகளை
யெல்லாம்
ஓட்டிக்
கொண்டு
வருகிறார்கள்.
வீங்கிய
மாட்சிமையுடைய
மடியிலிருந்து
தீம்பால்
பிலிற்ற
அந்த
மாடுகள் "அம்மா!"
என்று
தம்
கன்றுகளை
அழைத்துக்கொண்டே
மாட்டுக்
கொட்டிலில்
புகுகின்றன.
இப்படித்
தம்
கன்றுகளைப்
பயிரும்
(அழைக்கும்)
குரலை
உடையனவாய்ப்
பசுக்கள்
கொட்டிலுக்குள்ளே
புகுவதைக்
காதலி
அறிந்தாள்.
அவள்
வீட்டுக்குள்ளே
இருந்தாலும்
ஆவினம்
கன்றை
அழைக்கும்
குரல்
அவள்
செவியில்
பட்டு
மாலை
வந்ததைத்
தெரிவிக்கிறது.
வெளியிலே
வந்து
பார்க்கிறாள்.
கோவலர்
நறும்
பூக்களைச்
சூடி
வருவதைக்
காண்கிறாள்.
"இது
வெறும்
மாஜ
அல்ல;
கார்
காலத்து
மாலை"
என்ற
எண்ணம்
உண்டாகிறது.
மன்று
(கொட்டில்)
நிறையப்
புகுதரும்
பசுமாடுகளின்
வரவை
எதிர்நோக்கி
வீட்டிலே
கட்டப்பெற்றிருக்கும்
கன்றுகள்
இருக்கின்றன.
வயிறு
நிறைய
மேய்ந்து
மடி
நிறையப்
பால்
ததும்பப்
பசுமாடுகள்
மாலையில்
வந்து
விட்டன.
தலைவி
அந்தக்
காட்சியைக்
காணும்போது
அவள்
உள்ளம்
வருந்துகிறது.
கன்றையும்
பசுவையும்
கண்டு
வருந்தவில்லை.
அவற்றின்
நிலையோடு
தன்நிலையை
ஒப்பிட்டுப்
பார்த்துக்
கொண்டாள்.
அப்போது
அவளுக்குத்
துயரம்
பெருகியது.
அவளுடைய
காதலன்
வெளி
நாடு
சென்றிருக்கிறான்.
இல்லறத்துக்கு
இன்றியமையாத
பொருளை
ஈட்டும்
பொருட்டுச்
சென்றிருக்கிறான்.
இல்லறத்துக்குரிய
கடமைகளை
ஆற்றிக்கொண்டு
காதலி
வீட்டில்
இருக்கிறாள்.
சென்ற
காதலன்,
கார்
காலம்
வந்தவுடன்
நான்
வந்து
விடுகிறேன்
என்று
சொல்லிச்
சென்றான்.
பசு
மாடுகள்
வயிறு
நிறைய
மேய்ந்து
குறித்த
காலத்தில்
கன்றை
அழைத்துக்கொண்டே
வந்துவிட்டன.
தலைவனும்
தான்
ஈட்ட
வேண்டிய
பொருளை
ஈட்டிக்கொண்டு
உரிய
காலத்தில்
காதலியை
நாடி
வரவேண்டியவன்
அல்லவா?
மாலை
வந்துவிட்டது;
பசு
மாடுகள்
வந்துவிட்டன.
அது
போலக்
கார்காலம்
வந்துவிட்டது;
காதலனும்
வந்து
விட்டான்
என்று
சொல்வதற்கில்லையே!
இதுதான்
தலைவி
வருத்தத்தை
அடைவதற்குரிய
காரணம்.
காதலனும்
காதவியும்
இல்வாழ்க்கையிலே
சிறந்து
நின்றனர்.
தன்
முன்னோர்
ஈட்டிய
பொருளைச்
செலவிட்டு
வாழ்வது
அறிவுடைமையன்று
என்று
எண்ணும்
ஆண்
மகன்
அந்தக்
காதலன்.
தன்னுடைய
முயற்சியால்
ஈட்டிய
பொருளால்
செய்யும்
அறமே
முழுப்
பயனைத்
தரும்
என்றும்,
அதனால்
வரும்
இன்பமே
நல்லின்பம்
என்றும்
நினைப்பவன்.
அவன்
இசை,
ஓவியம்,
காவியம்
ஆகிய
கலைகளில்
ஈடுபட்டவன்.
இசை
வல்ல
பாணர்களும்
கவி
வல்ல
புலவர்களும்
அவனுக்கு
நண்பர்கள்.
அடிக்கடி
பாணரை
அழைத்து
இன்னிசை
யாழ்
வாசிக்கச்செய்து
காதவியுடன்
கேட்டு
இன்புறுவான்.
அவருக்குள்
மிகவும்
வல்லவனாகிய
பாணன்
ஒருவன்
தலைவனோடு
நெருங்கிப்
பழகுபவன்,
தலைவனுக்கும்
தலைவிக்கும்
எப்போதும்
நன்மையையே
விரும்புபவன்,
அந்தப்
பாணன்.
சில
சமயங்களில்
அவர்கள்
ஏவும்
குற்றேவல்களையும்
அவன்
செய்வதுண்டு.
தலைவன்
ஊரில்
இல்லாதபோதும்
அடிக்கடி
அவன்
வீட்டுக்கு
வந்து
தலைவியைப்
பார்த்துப்
பேசியிருந்து
விட்டுச்
செல்வான்.
தலைவி
தன்
காதலன்
பிரிவைத்
தாங்கவேண்டும்
என்ற
உள்ளம்
படைத்தவளாக
இருந்தாலும்
அவன்பால்
இருந்த
காதல்
அவளைப்
படாத
பாடு
படுத்தியது.
அவளை
அறியாமலே
சோர்வு
உண்டாகியது.
முகத்தில்
இயற்கையாக
இருந்துவந்த
பொலிவு
இல்லை.
ஆயினும்
செய்ய
வேண்டிய
கடமைகளைத்
தக்கவண்ணம்
செய்து
வந்தாள்.
எப்படியும்
தன்
காதலன்
குறிப்பிட்ட
காலத்தில்
வந்து
விடுவான்
என்ற
நம்பிக்கை
இருந்தமையால்
பிரிவுத்
துன்பத்தைப்
பொறுத்து
வந்தாள்.
கார்காலம்
எப்போது
வரும்
வரும்
என்று
அவள்
எதிர்பார்த்துக்
கொண்டே
இருந்தாள்.
கார்
காலம்
மெல்ல
மெல்ல
வந்தது.
அதன்
அடையாளங்களாகிய
மழையும்
முல்லை
மலரும்
காயாம்
பூவும்
வந்தன.
தலைவன்
இன்னும்
வரவில்லை.
'இப்போது
தானே
கார்
காலம்
அடியெடுத்து
வைக்கிறது?
இன்னும்
சரியானபடி
வந்து
புகவில்லை’
என்றுதானே
சமாதானம்
செய்து
கொண்டாள்.
கார்
காலம்
நன்றகவே
வந்துவிட்டது.
காட்டுக்குப்
போய்
வந்தவர்கள்
எல்லாம்
கார்
காலத்துக்குரிய
அடையாளங்கள்
அனைத்தும்
தோன்றியிருப்பதைப்
பேசிக்
கொள்கிறார்கள்.
அந்தப்
பேச்சுத்
தலைவியின்
காதில்
விழுகிறது.
அதோடு
முல்லைப்
புலத்தில்
ஆக்களைப்
பரப்பிக்
கோவலர்
நறும்
பூவைச்
செருகிக்
கொண்டு
வருவதையும்,
அறுகம்
புல்லை
வயிறு
நிரம்பத்
தின்று
விட்டுக்
கம்பீரமாக
நடை
போட்டுக்கொண்டு
நல்ல
ஆக்கள்
தம்
மடியினின்றும்
பால்
சோரக்
கன்றைப்
பயிரும்
குரலோடு
மன்றுகள்
நிறையப்
புகுவதையும்
பார்த்தாள்.
“கார்
காலம்
வந்துவிட்டது.
இக்காலத்தில்
பகலாக
இருந்தால்
கடமை
செய்வதில்
மனம்
ஈடுபட்
டிருக்கும்.
மாலை
வந்துவிட்டது.
இனி
எப்படி
நான்
பொழுது
போக்குவேன்?
வரவேண்டிய
என்
காதலர்
வராமல்
இருக்கிறாரே!
இதை
எண்ணாமல்
இருக்க
முடிய
வில்லையே!
இரவெல்லாம்
தூக்கம்
வராதே!
நம்முடைய
உறுதியெல்லாம்
மாலையைக்
கண்டவுடன்
போய்
விட்டதே!
இந்த
இரவு
முழுவதையும்
கழித்துக்
காலையில்
எழுந்திருக்க
வேண்டுமே!
காலையில்
எப்படி
இருப்போமோ!"
என்று
அவள்
துயரச்
சிந்தனையிலே
மூழ்கி
விட்டாள்.
அப்போது
அவர்களுடைய
நன்மையை
விரும்பும்
பாணன்
வந்து
சேர்ந்தான்.
அவனைக்
கண்டவுடன்
தலைவிக்கு
அதுகாறும்
இருந்த
பொறுமை
தளர்ந்து
விட்டது.
உணர்ச்சி
எல்லை
கடந்து
நின்றது.
ஒருவருக்குத்
துயரம்
மிகுதியாக
இருந்தால்
அதை
தமக்கு
வேண்டியவரோடு
சொன்னால்
ஆறுதல்
உண்டாகும்
என்பார்கள்.
பாணனைக்
கண்டாளோ
இல்லையோ,
வேறு
ஒன்றும்
பேசவில்லை.
”பாணனே,
உங்கள்
தலைவர்
செயலைப்
பார்த்தாயா?
கார்
காலம்
வந்துவிட்டதே
காடும்
வழியும்
மழையும்
கார்
காலம்
வந்துவிட்டதென்று
சொல்கின்றன.
ஆணினம்
கன்றுகளை
அழைத்துக்கொண்டு
கொட்டிலுக்குள்
புகும்
மாலைக்
காலத்தில்
நான்
அவரை
நினைந்து
நினைந்து
வாடுகிறேன்.
அவர்
இந்தக்
கார்
காலத்து
மாலையிலும்
நான்
எவ்வளவு
துன்பப்படுவேன்
என்பதைச்
சிறிதும்
நினைக்கவில்லையே!
இனி
விடிந்தால்
என்ன
ஆவேனோ!”
என்று
தலைவி
தன்
துயரத்தைக்
கொட்டி
விட்டாள்.
பாணன்
என்ன
சொல்வான்?
அவளுக்குச்
சமாதானமாகச்
சொல்ல
என்ன
இருக்கிறது?
இதற்கு
முன்பெல்லாம், “கார்காலம்
வந்தால்
வருவார்’
என்று
சொல்ல
முடிந்தது.
அந்தக்
கார்
காலம்
வந்துவிட்டது
என்று
அவள்
நன்றாக
உணர்ந்த
பிறகு,
அவளுக்கு
ஆறுதல்
கூற
ஒரு
வகையும்
இல்லை.
பாணன்
ஒன்றும்
பேசவில்லை.
பேசாமல்
கேட்டுக்
கொண்டிருந்தான்.
அவளுடைய
சோகக்
குரல்
அவன்
உள்ளத்தை
வெதுப்பியது.
தன்
கடமையை
உணர்ந்த
பெருமாட்டி
அவள்;
அறத்தை
வளர்க்க
வேண்டும்
என்பதற்காகத்
தன்
துன்பத்தை
எண்ணாமல்
தலைவனைப்
போய்
வா
என்று
சொன்ன
மனையாட்டி;
யார்
என்ன
சொன்னலும்
காதில்
வாங்கிக்
கொள்ளாமல்,
தன்
காதலன்
சொன்ன
சொல்
தவறாமல்
உரிய
காலத்தில்
வந்துவிடுவான்
என்ற
நம்பிக்கையையே
பற்றுக்கோடாகக்
பற்றிக்
கொண்டு
பொறுமையாக
இருந்த
மடவரல்;
காதலனுடைய
பிரிவினால்
உள்ளம்
நைந்தாலும்
செய்யவேண்டிய
அறங்களைச்
செவ்வனே
செய்து
வந்த
இல்லற
அரசி.
அத்தகையவள்
வாய்
விட்டு
இப்படிச்
சொல்ல
வேண்டுமென்றால்
அவள்
மனத்தில்
எவ்வளவு
துன்பம்
குமுறிக்
கொந்தளிக்க
வேண்டும்!
இத்தகைய
நிலையில்
ஆறுதல்
சொல்ல
இயலுமா?
பாணன்
அவளைப்
பார்த்துப்
பார்த்து
வருந்தினான்,
அவள்
வருத்தத்தை
மறப்பதற்கு
ஏதேனும்
வழியிருந்தால்
அதைச்
செய்யலாமென்று
எண்ணினான்.
அவனிடம்
எந்தத்
துயரத்தையும்
மாற்றுவதற்குரிய
ஒன்று
இருக்கிறது.
யாழை
வாசித்தால்
எல்லாவற்றையும்
மறந்து
கேட்டுக்
கொண்டே
இருக்கலாமே!
தலைவியும்
தலைவனும்
தன்னுடைய
யாழிசையிலே
ஈடுபட்டு
நின்றதைப்
பலமுறை
கண்டவன்
அவன்.
ஆகவே
தன்
யாழை
உறையினின்றும்
எடுத்தான்.
இராகங்களைப்
பண்
என்று
தமிழில்
சொல்வார்கள்.
இன்ன
இன்ன
காலத்தில்
இன்ன
இன்ன
பண்ணைப்
பாடவேண்டும்
என்ற
வரையறை
உண்டு.
காலை
நேரமானல்
மருதப்
பண்ணையும்,
மாலை
நேரமானால்
செவ்வழிப்
பண்ணையும்
பாடுவார்கள்.
இப்போது
மாலைக்
காலமாதலின்
பாணன்
யாழிலே
சுருதி
கூட்டிச்
செவ்வழிப்
பண்ணை
ஆலாபனம்
செய்தான்,
விரைவாக
அந்தப்
பண்ணில்
ஒரு
பாட்டை
வாசித்தான்;
கடவுளை
வாழ்த்தும்
பாட்டு
அது.
இத்தகைய
சமயங்களில்
இசையும்
கடவுள்
நினைவும்
நல்ல
ஆறுதலை
அளிக்கும்
என்ற
எண்ணத்தால்
நல்
யாழில்
செவ்வழியை
இசைத்துக்
கடவுளை
வாழ்த்தினான்.
மற்றக்
காலங்களிலானால்
இந்த
இசையைக்
கூர்ந்து
கேட்பாள்
தலைவி.
இப்போதோ
இசை
அவளுக்கு
ஆறுதலைத்
தரவில்லை.
அவள்
காதுகள்
காதலனுடைய
தேர்
வரும்
ஓசை
கேட்கிறதா
என்றே
கவனித்தன.
இசையினால்
தலைவி
சிறிதும்
ஆறுதல்
பெறாததைக்
காணக்
காணப்
பாணனுக்கு
ஊக்கம்
குறைந்து
விட்டது.
அவனுக்கே
முகம்
வாடியது;
ஏதோ
மாதிரி
இருந்தது.
அடுத்தபடி
என்
செய்வது?
"அவர்
இருக்கும்
ஊருக்குச்
சென்று
இந்தப்
பெருமாட்டியின்
நிலையைச்
சொல்வது
தான்
இனிச்
செய்யத்தக்க
காரியம்?”
என்று
அவனுக்குத்
தோன்றியது.
ஆகவே
தலைவன்
பால்
செல்லப்
புறப்பட்டான்.
அவன்
முகத்திலும்
நடையிலும்
சோர்வு
இருந்தது.
தலைவியின்
நிலையை
உணர்ந்ததனால்
அவனுக்கு
உண்டான
துயரம்
அவன்
உடம்பிலே
தோன்றியது.
வீட்டை
விட்டுப்
புறப்பட்டு
விட்டான்.
எங்கே
போவது,
எப்படிப்
போவது
என்பதை
எண்ணினானோ
என்னவோ!
இங்கேயிருந்து
இவள்
படும்
வேதனையைப்
பார்த்துக்
கொண்டிருப்பதைக்
காட்டிலும்
அவரிடம்
சென்று
இவள்
துன்பத்தைத்
தீர்க்க
வழி
செய்வது
மேல்
என்ற
நினைவினால்
அவன்
புறப்பட்டான்.
தலைவனுடைய
வீட்டை
விட்டுப்
புறப்பட்டவன்
அந்த
வீதியைக்
கூடத்
தாண்ட
வில்லை.
அதற்குள்ளே
அவன்
கண்முன்னே
தலைவன்
தேர்
தோன்றியது.
தேரைப்
பார்த்தான்.
அதிலே
கட்டியிருந்த
குதிரைகளைப்
பார்த்தான்,
அவை
வாயு
வேகமாக
வந்திருக்க
வேண்டுமென்று
தோன்றியது.
உடம்பெல்லாம்
வேர்க்க,
வாயில்
நுரை
தள்ளப்
படபடப்போடு
வந்த
அவற்றின்
நிலையே
தலைவனுடைய
மனம்போல
முடுகி
வந்திருக்க
வேண்டுமெனத்
தெரிவித்தது.
காட்டுவழி
எப்படி
எப்படியோ
இருக்கும்.
வளைந்து
வளைந்து
வரவேண்டியிருக்கும்,
மேடும்
பள்ளமுமான
வழியில்
வரவேண்டியிருக்கும்.
இப்படி
மாறுபாடான
வழியில்
வேகமாக
வந்திருக்கின்றன
அந்தக்
குதிரைகள்,
வருகிற
வேகத்தில்
வழியிலேயுள்ள
சிறு
கற்களையெல்லாம்
தேர்ச்
சக்கரம்
மோதி
அரைத்துச்
சடசடவென்ற
ஒலியை
எழுப்பியிருக்கும்.
பல
ஆரக்
கால்களையுடைய
அந்தச்
சக்கரங்கள்
இறுதியானவை.
தேர்
தூரத்தில்
வரும்
போதே
அதன்
ஓசை
அதன்
வரவைத்
தெரிவித்து
விட்டது.
கார்
காலத்து
மழை
பெய்யும்போது
சடசட
வென்று
முழங்குவதுபோல
அந்த
ஓசை
இருந்தது.
ஊருக்குள்ளே
புகுந்தால்
நல்ல
இடங்கள்
முன்னே
இருந்தன.
நல்ல
முன்னிடங்களை
உடைய
அந்த
ஊருக்குத்
தலைவன்
தேரில்
வரும்
காதலன்,
தேர்
பக்கத்தில்
வந்த
பிறகு
அதன்
அலங்காரங்கள்
கண்ணுக்குத்
தெரிந்தன
. அழகான
தேர்;
பல
வகையான
சிற்ப
வேலைப்பாடுகளை
உடையதாய்
வேறு
அலங்காரங்களும்
புனைந்ததாய்
இருந்தது.
அதைக்
கண்டான்
பாணன்.
"நாம்
கடவுளைப்
பாடியது
வீண்
போகவில்லை"
என்று
எண்ணி
ஆறுதல்
பெற்றான்.
தலைவன்
தன்
வீட்டை
அடைந்தான்.
பாணன்
புறப்பட்டபோது
அவனோடு
இருந்த
தோழர்களிடம்
சொல்லிவிட்டுப்
புறப்பட்டான்,
போன
வேகத்தில்
அவன்
திரும்பி
வந்ததை
அவர்கள்
கண்டார்கள்.
“ஏன்
வந்துவிட்டாய்?”
என்று
அவனருகிலே
இருந்து
பழகும்
தோழர்கள்
கேட்கவே,
தான்
புறப்பட
நேர்ந்த
காரணத்தையும்,
தலைவன்
தேர்
வந்துவிட்டதையும்
கூறித்
தான்
போகவேண்டிய
அவசியம்
இல்லாமற்
போனதைப்
புலப்படுத்தினான்.
அவன்
கூறுவதாக
அமைத்திருக்கிறது
பாட்டு.
முல்லை
"அரக்கத்து
அன்ன
செந்நிலப்
பெருவழி
காயாஞ்
செம்மல்
தா
அய்ப்
பலஉடன்
ஈயல்
மூதாய்
வரிப்பப்,
பவளமொடு
மணிமிடைக்
தன்ன
குன்றம்
கவைஇய
அங்காட்டு
ஆரிடை,
மடப்பிணை
தழீஇத்
5
திரிமருப்பு
இரலைபுல்
அருந்
துகள,
முல்லை
வியன்புலம்
பரப்பிக்
கோவலர்
குறும்பொறை
மருங்கின்
நறும்பூ
அயரப்,
பதவுமேயல்
அருந்த
மதவுநடை
நல்ஆன்
வீங்குமாண்
செருத்தல்
தீம்பால்
பிலிற்றக்
10
கன்றுபயிர்
குரல
மன்றுநிறை
புகுதரும்
மாலையும்
உள்ளார்
ஆயின்,
காலை
யாங்குஆ
குவங்கொல்?
பாண"
என்ற
மனையோள்
சொல்எதிர்
சொல்லல்
செல்லேன்,
செவ்வழி
நல்யாழ்
இசையினென்,
பையெனக்
15
கடவுள்
வாழ்த்திப்
பையுள்
மெய்ந்
நிறுத்து
அவர்திறம்
செல்வேன்,
கண்டனென்
யானே:
விடுவிசைக்
குதிரை
விலங்குபரி
முடுகக்
கல்பொருது
இரங்கும்
பல்ஆர்
நேமிக்
கார்மழை
முழக்குஇசை
கடுக்கும்
20
முனைநல்
ஊரன்
புனைநெடுந்
தேரே.
[
செவ்வரக்
கைப்
போன்ற
சிவந்த
நிலமாகிய
முல்லை
நிலத்தின்
பெரிய
வழியிலே
காயாமரத்தின்
பழம்பூப்
பரவவும்,
பலவாக
ஒருங்கே
இந்திரகோபப்
பூச்சிகள்
ஊர்ந்து
கோடு
கிழிக்கவும்,
பவளத்தோடு
நீலமணி
கலந்தது
போன்ற
காட்சியைத்
தருவதற்கு
இடமாகிய,
குன்றத்தைச்
சூழ்ந்த,
அழகிய
காட்டின்
புகுவதற்கரிய
இடங்
களில்
மென்மையை
உடைய
பெண்
மானை
உடனழைத்துக்கொண்டு
முறுக்கிய
கொம்பையுடைய
ஆண்
மானானது
புல்லை
அருந்தும்
பொருட்டுத்
துள்ளிக்குதித்துச்
செல்லவும்,
முல்லையாகிய
பெரிய
நிலப்பரப்பில்
பசுக்களைப்
பரவச்
செய்து
இடையர்கள்
சிறிய
கரடுகளின்
பக்கத்திலே
மலர்ந்த
மணமுடைய
பூக்களைக்
கொண்டு
விளையாடி
இன்புறவும்,
அறுகம்புல்லை
மேய்ந்து
அசைபோட்ட
செருக்குள்ள
நடையையுடைய
நல்ல
பசுக்கள்,
புடைத்த
சிறப்பையுடைய
மடி
இனிய
பாலைச்
சோரவிடக்
கன்றுகளே
அழைக்கும்
குரலை
உடையனவாய்க்
கொட்டிவிலே
நிறையப்
புகுகின்ற
மாலைக்
காலத்திலும், (இங்கே
வந்து
என்
துயரத்தைக்
களைய
வேண்டும்
என்று
என்
தலைவர்)
நினை
யாரானால்,
காலையில்
நாம்
எப்படி
ஆவோம்?
பாணனே
என்ற
வீட்டுத்
தலைவியின்
வார்த்தைகளுக்கு
எதிரே
ஒன்றும்
சொல்லாமல்,
செவ்வழிப்
பண்ணை
நல்ல
யாழில்
இசைத்து
விரைவில்
கடவுளை
வாழ்த்தி,
என்
உடம்பிலே
துன்பத்தை
நிற்கும்படியாக
வைத்து,
தலைவர்
பால்
செல்லப்
புகும்பொழுது
யான்
கண்டேன்.
ஒட்டுகின்ற
வேக
முள்ள
குதிரைகள்,
வெவ்வேறு
வகையாக
மாறுபட்டுச்
செல்லும்
கதியிலே
வேகமாகச்
செல்ல,
வழியிலே
உள்ள
கற்களிலே
மோதி
ஒலிக்கும்
பல
ஆரக்கால்களையுடைய
சக்கரத்தைப்
பெற்றதும்,
கார்காலத்தில்
பெய்யும்
மழையின்
முழக்கத்தை
யொத்த
ஓசையையுடையதும்
ஆகிய,
நல்ல
முன்னிடங்களை-யுடைய
ஊர்க்குத்
தலைவனது
அலங்கரிக்கப்பெற்ற
உயர்ந்த
தேரை.
(3-4)
பவளமொடு
மணி
மிடைந்தன்ன
காடு,
(4-5)
குன்றம்
கனவஇய
காடு
என்று
கூட்டவேண்டும். (18-21)
பல்லார்
நேமித்தோர்,
(20-21)
முழக்கிசை
கடுக்கும்
தேர்,
(21) ஊரன்
தேர், (2)
புனை
நெடுந்
தேர்
என்று
கூட்டவேண்டும்.
யான்
செல்வேன்
(17), தேரை
(21)க்
கண்டனன் (17)
என்று
முடிக்கவேண்டும்.
1.
அரக்கம்-அரக்கு;
அம்
என்பது
சாரியை;
அதற்குத்
தனியே
ஒரு
பொருளும்
இல்லை.
முல்லை
நிலம்
சிவப்பாக
இருப்பதாகச்
சொல்வது
மரபு.
தேர்
வரும்
வழி
ஆதவினாலும்
நெடுந்தூரம்
செல்வதாதலினாலும்
பெரு
வழி
ஆயிற்று.
2.
காயாம்பூவைக்
காசாம்பூ
என்று
இப்போது
வழங்குவார்கள்.
செம்மல்-பழம்பூ,
தாஅய்-தாவி;
தாவ
என்று
கொள்ளவேண்டும்.
தாய்
என்பது
செய்யுள்
ஒசைக்காக
அளபெடுத்தது.
உடன்-ஒருங்கே.
3.
ஈயல்
மூதாய்-இந்திரகோபப்
பூச்சி.
வரிப்ப
- ஊர்ந்து
செல்ல;
ஊரும்போது
வரிவரியாகச்
சுவடு
உண்டாவதனால்
வரிப்ப
என்றார்,
4.
மிடைந்தன்ன-கலந்து
செறிந்தது
போன்ற;
மிடைந்தது
அன்ன
என்பது
இப்படி
விகாரமாயிற்று.
கவைஇய-சூழ்ந்த,
3-4.
ஈயல்
மூதாய்
பவளம்
போலச்
சிவந்த
நிறம்
உடையது.
இது
கார்
காலத்தில்
முல்லை
நிலத்தில்
ஊர்வ
தென்பதை, "தண்பெயல்
எழிலி,
அணிமிகு
காணத்து
ஆன்புறம்
பரந்த,
கடுஞ்செம்
மூதாய்"
(362:3-5)
என்று
நற்றிணையிலும், 'தண்பெயல்
பொழிந்த
பைதுறு
காலைக்
, குருதி
உருவின்
ஒண்செம்
மூதாய்.
பெருவழி
மருங்கிற்
சிறுபல
வரிப்ப"
(24:3-5)
என்று
அகநானூற்றில்
வேறிடத்திலும்
வந்திருக்கும்
பகுதிகளால்
உணரலாம்.
கார்காலத்தில்
காயாம்பூக்கள்
உதிர்ந்து
கீழே
இறைந்து
கிடக்க,
ஈயல்மூதாய்
அவற்றினூரட
ஊரும்
போது
மணியும்
பவளமும்
கலந்து
கிடந்ததுபோன்ற
தோற்றத்தை
அளிப்பதாக
இங்கே
கூறினார்
புலவர்.
இப்படியே
அகநானூற்றுல்
வேறு
பாடல்களிலும்
இந்தக்
காட்சியும்
உவமையும்
வந்திருக்கின்றன: "மணிமிடை
பவளம்
போல
அணிமிகக்,
காயாஞ்
செம்மல்
தாஅய்ப்
பல
உடன்,
ஈயல்
மூதாய்
ஈர்ம்புறம்
வரிப்பப்,
புலன்
அணி
கொண்ட
கார்
எதிர்
காலை”
(304:13-6);
பெயல்வெய்து
கழிந்த
பூநாறு
வைகறைச்
செறிமணல்
நிவந்த
கள
ந்தோன்று
இயவிற்,
குறுமோட்டு
மூதாய்
குறுகுறு
ஓடி,
மணிமண்டு
பவழம்போலக்
காயா,
அணிமிகு
செம்மல்
ஒளிப்பன
மறையக்,
கார்
கவின்
கொண்ட
காமர்
சோலை”
374 10-15.)
5.
அம்-அழகிய
ஆரிடை:
அரு
இடை,
இடை
- இடம்.
மடப்பினை-மெல்லிய
பெண்மான்,
தழிஇ-தழுவி;
உடன்
கொண்டு.
6.
திரிமருப்பு-முறுக்கினாற்
போன்ற
கொம்பு.
இரலை
-ஆண்மான்
அருந்த
உகள
என்றது
அருந்துகள
என
விகாரமாயிற்று.
உகள-துள்ளிக்
குதிக்க.
7.
வியன்
புலம்-பெரிய
நிலம்,
பரப்பி-பரவச்செய்து.
கோவலர்-மாடு
மேய்ப்போர்;
இவர்கள்
முல்லை
நிலத்து
மக்கள்,
8.
குறும்பொறை-சிறு
கரடுகள்.
பூ
அயர-பூவை
வைத்துக்
கொண்டு
விளையாட
செருகி
மகிழ
என்றுமாம்.
9.
பதவு-அறுகம்புல்.
மேயல்-மேய்ச்சல்,
மேயல்
அருந்த-மேய்ந்ததை
அசைபோட்ட
அருந்த
- அருந்திய,
“மேயலாக
ஆர்ந்த”
என்பது
பழைய
உரை. "அருந்து"
என்பது
ஒரு
பாடம்,
மதவுநடை-செருக்குடைய
நடை.
10.
மாண்-மாட்சிமையையுடைய.
செருத்தல்-மடி.
தீம்பால்-இனிய
பால்.
பிலிற்ற-சோர.
11.
பயிர்தல்-அழைத்தல்.
குரல்-குரலையுடையன
வாய்.
மன்று-மாடுகள்
இருக்கும்
கொட்டில்,
நிறையப்
புகுதரும்
என்பது
நிறைபுகுதரும்
என
நின்றது.
12.
உள்ளார்-நினையார்.
தலைவர்
என்ற
எழுவாயை
வருவித்துக்
கொள்ள
வேண்டும்.
காலை
என்பதற்கு ’இக்காலத்து’
என்று
பொருள்
எழுதுவர்
பழைய
உரைகாரர்.
13.
யாங்கு –
எவ்வாறு.
14.
மனையோள் -
தலைவி;
வீட்டில்
இருந்து
அறங்காத்தலின்
இவ்வாறு
சொன்னான்.
சொல்லல்
செல்லேன்
-
சொல்லேனாகி;
முற்றெச்சம்,
செல்
என்பது
பொருளொன்றும்
இல்லாத
துணை
வினை.
15.
செவ்வழி-மாலைப்பண்,
இசையினென்
- பாடி
னேனாகி;
பாடி,
முற்றெச்சம்.
பையென-விரைவாக.
16.
பாணனுடைய
துயரம்,
அவன்
மெய்யிலே
தோற்றிய
பாவங்களால்
பிறருக்குத்
தோன்றினமையால் 'பையுள்
மெய்ந்
நிறுத்து’
என்றான்;
பையுள்-துன்பம்,
அதனை
உடம்பிலே
நிறுத்துவதாவது
உடம்பு
படபடத்தல்
முதலிய
மெய்ப்பாடுகள்
தோற்றுவது.
17.
அவர்
என்றது
தலைவரை.
இன்னாரென்றுலாமல்
அவர்
என்றாலே
உடன்
இருப்பவர்கள்
அறிந்து
கொள்வார்கள்.
அவர்
இன்னர்
என்பதைப்
பாணன்
நெஞ்சு
அறியும்.
இதனை
நெஞ்சறி
சுட்டு
என்று
கூறுவர்.
அவர்
திறம்-அவர்
பக்கல்.
செல்வேன்-செல்ல;
முற்றெச்சம்.
யானே;
ஏகாரம்
அசைநிலை;
அதற்குப்
பொருள்
ஒன்றும்
இல்லை,
18.
விடுதல்-ஒட்டுதல்;
தானே
செல்லும்
குதிரை
யாதலின்
அதன்
போக்கிலே
விட்டாலே
போதுமாதலால் ‘விடுவிசைக்
குதிரை’
என்றார்,
விரை-வேகம்.
விலங்குதல்
குறுக்கும்
நெடுக்கும்
போதல்;
ஒருமுறைக்கொருமுறை
மாறுபடுதல்,
பரி-கதி;
முடுக-விரைந்து
செல்ல;
பரிமுடுக
- ஒட்டம்
வேகமாக
19.
கல்பொருது -
வழியிலுள்ள
கல்லை
மோதி.
இரங்கும்-ஒலிக்கும்.
கல்லின்மேல்
மோதியதனால்
ஒலி
உண்டாயிற்று.
ஆர்-ஆரக்கால்,
நேமி-சக்கரம்.
20.
கார்
மழை-கார்
காலத்து
மழை.
கடுக்கும்
- ஒக்கும்.
21.
முனை-முன்னிடம்.
முன்னிடம்
நல்லதாக
உள்ள
ஊரை
யுடையவன்,
புனை-அலங்கரிக்கப்
பெற்ற.
நெடுமை
. உயரம்,
இது,
"பாணன்
தனக்குப்
பாங்காயினார்
கேட்பச்
சொல்
லியது"
என்னும்
துறையின்
பாற்
படும்.
பாங்காயினார் -
பக்கத்திலிருந்து
பழகும்
தோழர்கள்;
பாங்கன்,
பாங்கி
என்ற
பெயர்களைப்
போன்றது
இது.
தலைவன்
தலைவியைப்
பிரிந்திருக்கும்போது
தலைவிக்குத்
தூதாகப்
பாணன்
செல்வதுண்டாதலின்,
இங்கே
பாணன்
தலைவனிடம்
போகப்
புறப்பட்டான்.
இந்தப்
பாட்டு
முல்லைத்
திணைக்குரியதாதலின்
செந்நிலம்,
முல்லை
வியன்
புலம்
என
அதற்குரிய
நிலம்
வந்தது.
காயாவும்
முல்லையும்
மலருங்
கால
மென்றதனால்
கார்
காலமும்,
மாலையும்
உள்ளார்
என்று
மாலையும்
வந்தன;
இவை
முல்லைக்குரிய
பெரும்
பொழுதும்
சிறு
பொழுது
மாகும்.
காயாம்பூ,
குறும்பொறை
மருங்கின்
நறும்பூ
எனப்
பூவும்;
மடப்பிணை,
இரலை,
நல்லான்,
கன்று
என
விலங்கும்;
கோவலர்
என
மக்களும்
ஆகிய
கருப்
பொருள்கள்
வந்தன.
ஊரன்
தேர்வர
மனையோள்
அதுகாறும்
பொறுத்திருத்தலின்
இருத்தலென்னும்
உரிப்பொருள்
வந்தது.
இதைப்
பாடின
புலவர்
ஒக்கூர்
மாசாத்தனார்.
இது
அகநானுாற்றில் 14-ஆம்
பாட்டு.
6.
நகைத்த
தலைவி
அவன்
அவளை
யாரும்
அறியாமல்
கண்டு
அளவளாவி
வந்தான்.
நெடுநாள்
அவ்வாறு
களவின்பம்
துய்க்க
இயலாது
என்று
உணர்ந்து
திருமணம்
செய்து
கொள்ளத்
துணிந்தான்.
காதலன்
தானே
ஈட்டிய
பொருளைப்
பரிச
மாகக்
கொடுத்து
மணம்
செய்து
கொள்வது
வழக்கம்.
ஆதலால்
தன்
காதலிக்குக்
கொடுக்கும்
பொருளை
ஈட்டுவதற்கு
அவன்
சிறிது
காலம்
வெளியூர்
போயிருந்
தான்.
விரைவில்
வந்து
விடுவான்
என்பது
தெரிந்தும்
அந்த
இளம்
பெண்ணுக்கு
ஒருநாள்
போவது
ஒரு
யுகமாக
இருந்தது.
அந்தச்
சிறு
பிரிவையும்
தாங்காமல்
தவித்தாள்.
அவளுடைய
உயிர்த்
தோழி
அவள்
நிலையைக்
கண்டாள்.
நெடுந்தூரம்
நடந்தவனுக்குச்
சேரும்
இடம்
அருகில்
வரும்போதுதான்
மிகுதியாகக்
கால்
வலி
தெரியும்.
அவன்
மணம்
புரியும்
நோக்கத்துடன்
சென்
றிருக்கிறான்,
இன்னும்
சில
நாட்களில்
வந்து
விடுவான்.
உடனே
திருமணம்
நிகழும்.
இவ்வளவு
காலம்
காத்திருந்தவளுக்கு
இப்போது
பிரிவுத்
துன்பம்
மிகுதியாயிற்று.
தோழிக்கு
அவள்
படும்
வேதனையைப்
பார்க்கப்
பொறுக்கவில்லை. "அவர்
ஏன்
இவ்வளவு
நாள்
போன
இடத்தில்
தங்கியிருக்கிறார்?
ஆண்களுக்குப்
பெண்களின்
உள்ளமே
தெரிவதில்லை.
உன்னுடைய
மென்மையை
இன்னும்
அவர்
சரியாக
உணர்ந்து
கொள்ளவில்லை.
என்று
தான்
தோன்றுகிறது"
என்றாள்.
காதலியின்
காதில்
இது
விழுந்தது
அவள்
தன்
காதலனைப்
பிரிந்து
துன்புறுவது
உண்மைதான்.
ஆனால்
அதற்கு
யார்
காரணம்?
காதலன்
உரிய
முயற்சியைச்
செய்யத்
தான்
போயிருக்கிறன்.
அவன்
கடமையை
உணர்ந்தவன்;
அதை
நன்கு
நிறைவேற்றும்
ஆற்றல்
உள்ளவன்,
அவனைக்
குறை
கூறுவது
தவறு.
அவளுடைய
அன்பு
நுட்பமாக
இருக்கிறது.
அதையல்லவா
குறைகூற
வேண்டும்?
தன்
தோழி
தன்
காதலன்
இயல்பைப்
பழிப்பதை
அந்த
மங்கை
விரும்பவில்லை.
அவள்
எண்ணம்
தவறு
என்பதை
அவளுக்குச்
சொல்லிலிட
வேண்டும்
என்று
தோன்றியது.
”என்ன
தோழி
சொல்லுகிறாய்?
நான்
படும்
வேதனைக்கு
அவரை
ஏன்
குறை
கூறுகிறாய்?”
”அவரால்
தானே
உனக்கு
இந்தத்
துன்பம்
வந்தது?”
"அவர்
என்னை
மணம்
புரிய
வேண்டும்
என்பதற்காகவே
போயிருக்கிறார்.
இந்தப்
பிரிவு,
இனி
எப்போதும்
பிரியாமல்
உலகறிய
இணைந்து
வாழ்வதற்கு
வகை
செய்வதல்லவா?”
*அப்படியானல்
நீ
ஏன்
இப்படி
வேதனைப்படுகிறாய்?
உவகையல்லவோ
அடைய
வேண்டும்?”
"நீ
சொல்வது
அறிவுக்குத்
தெளிவாகும்.
ஆனால்
என்னிடம்
உணர்ச்சி
அல்லவா
மீதூர்கிறது?
அறிவின்
எல்லையைக்
கடந்து
நிற்பது
உணர்ச்சி,
அதைத்தான்
குறைகூற
வேண்டும்.”
"அப்படியானால்
அவரைக்
குறைகூறக்
கூடாதென்ற
சொல்கிறாய்?”
"ஆம்;
அவரை
நாம்
வாழ்த்த
வேண்டும்.
அவர்
செய்த
நலத்தை
எண்ணி
நன்றியறிவுடன்
வாழ்த்தவேண்டும்.
அன்று
ஒருநாள்
நிகழ்ந்ததை
நீ
மறந்து
விட்டாயா?”
*எதைச்
சொல்கிறாய்?”
அதைக்
காதலி
நினைப்பூட்டினாள்.
காதலன்
கனவிலே
வந்து
அளவளாவிச்
சென்று
கொண்டிருந்தான்.
அவன்
ஒரு
மலைநாட்டுக்குத்
தலைவன்.
அவனுக்குரிய
மலை
மிக
உயர்ந்தது.
அதன்
உச்சியில்
தெய்வங்கள்
வந்து
விளையாடுமாம்.
அணங்குடை
நெடு
வரை
அது.
அதன்
உச்சியிலிருந்து
பல
ஊற்றுக்கள்
புறப்பட்டு
அருவியாகிப்
பாயும்.
அந்த
அருவி
சோ
என்று
வீழும்
சாரலில்
எல்லாம்
அடர்ந்த
காடுகள்
வளர்ந்திருக்கும்.
அந்தக்
கான்கெழு
நாடன்
அவளைக்
காதலித்தான்.
அகன்ற
மார்பில்
சந்தனம்
பூசி
மாலை
அணிந்து
வருவான்.
தன்
மணங்கமழ்
மார்பில்
அவளை
அனைத்துக்
கொள்வான்.
அதன்
அகலத்தையும்
மணத்தையும்
அவள்
ஒரு
கணமும்
மறந்தறியாள்,
அவனைக்
காணாப்
பொழுதெல்லாம்
அதுவே
நினைவாக
இருப்பாள்.
மறுபடியும்
அந்த
மார்பை
அணைவது
எப்போது
என்று
ஏங்குவாள்.
அவனுடைய
மார்பு
இப்படி
ஒரு
வேதனையை
அவளிடம்
உண்டாக்கி
விட்டது.
சுறுசுறுப்பாக
மான்
குட்டியைப்
போலத்
துள்ளிக்
குதித்து
விளையாடிய
பெண்
இப்போதெல்லாம்
சோர்ந்து
கிடந்தாள்.
ஏதோ
பிரமை
பிடித்தவளைப்
போல
இருந்தாள்.
இதை
முதலில்
அவளை
வளர்த்த
செவிலித்
தாய்
பார்த்தாள். “ஏன்
இப்படி
இருக்கிறாய்?”
என்று
கேட்டாள்.
"எப்படி
இருக்கிறேன்?
எனக்கு
ஒன்றும்
இல்லையே!”
என்று
சொல்லிச்
சமாளித்துக்
கொண்டாள்
அவள்.
ஆனால்
அவள்
சரியாக
உண்பதில்லை;
உறங்குவதில்லை.
செவிலிக்குச்
சமாதானம்
உண்டாகவில்லை.
அந்தப்
பெண்ணைப்
பெற்ற
தாயும்
இதைக்
கவனித்தாள்
"ஏதாவது
நோயாக
இருக்குமோ?”
என்று
யோசித்தாள்.
நோய்
வரக்
காரணம்
ஒன்றும்
இல்லை.
இன்ன
காரணத்தால்
சேர்ந்திருக்கிறாள்
என்பதை
உணராமல்
அவர்களுடைய
மனம்
கலங்கியது;
மறுவந்தது
(சுழன்றது.)
பெண்களுக்கு
ஒன்று
தெரிந்தால்
அது
ஊர்
முழுவதும்
பரவிவிடும்
அல்லவா?
பலர்
தாயிடம்
வந்து,
“உன்
மகளுக்கு
உடம்பு
சரி
இல்லையாமே?”
என்று
கேட்கத்
தொடங்கினர்.
சில
முதிய
கிழவிகள்
வந்தார்கள்
அவர்கள்
கேட்டபோது,
“ஒரு
காரணமும்
தெரியவில்லை,
இவள்
இப்படி
இளைத்துப்
போகிறாள்’
என்றாள்
தாய்,
அந்தக்
கிழவிகள்,
“ஏதாவது
தெய்வக்
குற்றமாக
இருக்கும்.
நம்முடைய
குலதெய்வமாகிய
முருகனுக்குப்
பூசை
போடுங்கள்.
பகைவர்களை
அழித்தருளிய
பெருமான்
அவன்.
வீரத்தாலும்
கருணையாலும்
பல
புகழை
உடையவன்.
அந்த
நெடுவேளை
வழிபடுவது
நல்லது.
இவள்
நோய்
தீர்வாள்”
என்று
சொன்னார்கள்.
அவர்கள்
காலங்கண்ட
முதியவர்கள்.
அவர்கள்
சொன்னது
உண்மையாக
இருக்கும்
என்று
நினைத்த
செவிலியும்
பெற்ற
தாயும்
முருகனுக்குப்
பூசை
போட
எண்ணினர்கள்.
மலையையும்
மலையைச்
சார்ந்த
இடமுமாகிய
குறிஞ்சி
நிலத்துக்குச்
சிறந்த
தெய்வம்
முருகன்.
அவனைப்
பூசை
செய்து
திருவுள்ளம்
குளிரும்படி
செய்ய
முயன்றார்கள்.
முருகனைப்
பூசைசெய்யும்
பூசாரி
ஒருவன்
உண்டு.
அவன்
முருகனுடைய
வேலையே
தெய்வமாக
வைத்துப்
இசை
புரிபவன்.
அதனைப்
பாதுகாத்து
வைத்திருப்பதனால்
அவனுக்கு
வேலன்
என்று
பெயர்.
யார்
வீட்டில்
அழைத்தாலும்
அங்கே
சென்று
வேலுக்குப்
பூசை
செய்து
முருகனைப்
பாடி
ஆடி
அழைப்பான்.
முருகன்
ஆவேச
உருவத்தில்
வந்து
அருள்
புரிவான்.
தாயும்
செவிலியும்
அவனை
அழைத்துவரச்
செய்தார்கள்.
முருக
பூசை
போட
வேண்டும்
என்று
சொன்னார்கள்.
முருகனுக்குப்
பலி
கொடுத்து
ஆடுவதனால்
அந்தப்
பூசையை
வெறியாட்டு
என்று
சொல்வது
வழக்கம்.
வெறியாட்டெடுக்க
வேலன்
இப்போது
வந்து
விட்டான்.
பூசை
போட
இடத்தைச்
செப்பம்
செய்தார்கள்.
குப்பை
கூளம்
இல்லாமல்
செதுக்கி
அங்கங்கே
தோரணங்களையும்
மாலைகளையும்
கட்டித்
தொங்க
விட்டார்கள்.
வெறியாட்டுக்குரிய
களத்தை
நன்கு
இழைத்தார்கள்.
வேலன்
அவ்விடத்தைத்
தூய்மை
செய்து
வேலைக்
கொண்டு
வந்து
நட்டான்.
அதற்குக்
கண்ணியைச்
சூட்டினான்;
பாடினான்.
மற்றவர்களும்
பாடினார்கள்.
அந்த
இடமே
இப்போது
வளப்பம்
பொருந்திய
கோயிலாக
விளங்கியது.
எல்லோரும்
முருகனை
வாழ்த்தும்
வாழ்த்து
எதிரொலித்தது.
மலைப்பகுதியானமையின்
வளநகர்
சிலம்பும்படியாக
அந்தப்
பாட்டு
எழுந்தது,
பிறகு
வேலன்
ஆட்டைப்
பலிகொடுத்தான்.
பூவைத்
தூவினான்.
நன்றாக
முற்றி
விளைந்த
அழகிய
சிவந்த
தினையைக்
கூடை
கூடையாகக்
கொண்டுவந்து
வைத்தார்கள்.
இரத்தம்
கலந்த
தினையை
அவன்
அட்சதையைப்
போலத்
தூவினான்.
இப்படியெல்லாம்
செய்து
முருகனை
அழைத்தான்;
வர
வேண்டுமென்று
ஆற்றுப்
படுத்தினான்.
வேலனுக்கே
ஆவேசம்
வந்துவிட்டது.
கையையும்
காலையும்
அசைத்துக்
கொண்டு
ஆடினன்.
'இவ்வளவு
நாள்
என்னை
மறந்து
விட்டீர்களே!’
என்று
குறை
கூறினன்.
வீட்டில்
உள்ளவர்கள்
நடுங்கினர்கள். "கடவுளே!
எங்கள்
குற்றத்தைப்
பொறுத்துக்
கொள்ள
வேண்டும்.
இனிமேல்
மறவாமல்
பூசை
போடுவோம்.
எங்கள்
அருமைக்
குழந்தைக்கு
எந்தக்
கேடும்
வராமல்
காப்பாற்ற
வேண்டும்”
என்று
பணிந்து
வேண்டிக்
கொண்டார்கள்.
அவர்கள்
கண்களில்
நீர்
வழிந்தது.
அந்தக்
கூட்டத்தில்
அந்த
இளம்
பெண்ணும்
இருந்தாள்;
அவள்
தோழியும்
இருந்தாள்.
எங்கே
தன்
இரகசியம்
வெளியாகிவிடுமோ
என்ற
அச்சத்தோடே
காதலி
வயிற்றில்
நெருப்பைக்
கட்டிக்
கொண்டிருந்தாள்.
முருகனை
நேரே
வேலன்
வருவிக்கப்
போகிறான்
என்று
கேள்வியுற்று, “அந்தப்
பெருமானுக்குத்
தெரியாதது
என்ன?
அவன்
நம்முடைய
காதலன்
இங்கே
வருவதை
வெளிப்படுத்தி
விட்டால்
நம்
மானம்
போய்விடுமே!"
என்று
அஞ்சி
நடுங்கினாள்.
அவள்
நடுங்குவதைக்
கண்ட
சுற்றத்தார், ”கடவுளைக்
கண்டு
நடுங்குகிறாள்"
என்றே
எண்ணிக்
கொண்டார்கள்.
ஆனால்
காதலி
அஞ்சியபடி
ஒன்றும்
நடக்கவில்லை.
பூசாரி
ஆட்டம்
போட்டதுதான்
மிச்சம்.
ஆடு
உயிரை
விட்டதுதான்
பயன்.
வேலன்
பொதுவகையில், "நீங்கள்
என்னை
மறந்து
விட்டீர்கள்”
என்று
சொன்னனே
ஒழிய,
இன்ன
காரணத்தால்
அவள்
இப்படி
இருக்கிறாள்
என்று
சொல்லவில்லை.
பூசை
ஒரு
வகையாக
முடிந்தது.
அவள்
பெரு
மூச்சு
விட்டு
ஆறுதல்
பெற்றாள்.
ஒரு
பெரிய
கண்டத்தினின்றும்
தப்பிப்
பிழைத்ததாக
ஓர்
உணர்ச்சி
உண்டாயிற்று.
உண்மையில்
முருகன்
அவள்
பக்கத்தில்
இருந்து
காப்பாற்றினான்;
வேலனுக்கு
உண்மை
தெரியாமல்
மறைத்து
விட்டான்.
இரவு
வந்தது.
நிகழ்ந்த
நிகழ்ச்சிகளை
எண்ணிக்
கொண்டு
படுத்திருந்தாள்
தலைவி.
ஒரு
விதத்தில்
அவளுக்கு
அச்சம்
தீர்ந்தாலும்
மற்றொரு
வகையில்
ஒரு
புதிய
அச்சம்
தலைப்பட்டது. "இங்கே
முருகனை
ஆற்றுப்
படுத்திய
செய்தியை
அவர்
அறிவாரோ?
மலைப்பக்க
மெல்லாம்
எதிரொவிக்கும்படி
அல்லவா
கூத்தாடிப்
பூசை
போட்டார்கள்?
இந்த
ஆரவாரம்
அவருடை
காதில்
விழுந்திருக்குமோ?
அப்படி
விழுந்திருந்தால்
அவரும்
உண்மை
வெளிப்பட்டுவிடுமே
என்று
அஞ்சி
யிருப்பாரோ?”
என்று
எண்ணினாள்.
அவள்
உடம்பு
சிறிதே
நடுங்கியது.
”வெறியாட்டைப்
பற்றி
அவர்
அறிய
நியாயம்
இல்லை.
இங்கே
பகலில்
அவர்
வந்திருந்தால்
நமக்குத்
தெரியாதா?”
என்ற
எண்ணம்
அடுத்தபடி
வந்தது.
வேறு
ஒர்
எண்ணம்
இடை
நுழைந்து
மீண்டும்
அச்சத்தை
எழுப்பியது.
"இங்கேதான்
பெரிய
கூட்டம்
வந்திருந்ததே.
அம்மா
ஊரைக்
கூட்டி
அமர்க்களப்
படுத்தி
விட்டாளே!
எங்கெங்கிருந்தோ
உறவினர்களும்
நண்பர்களும்
வந்திருந்தார்கள்.
அவர்கள்
இங்கே
பூசை
நிகழ்ந்த
செய்தியை
அங்கங்கே
சொல்லியிருப்பார்கள்.
அந்தச்
செய்தி
அவர்
காதுக்கும்
எட்டியிருக்கும்,
அரை
குறையாக
விழுந்தாலும்
விழுந்திருக்கலாம்.
ஒருகால்
அவர்
தம்களவு
தெரிந்து
போயிருக்குமென்று
எண்ணி
வாராமல்
இருந்து
விடுவாரோ!”
- அவள்
உள்ளம்
கவலையால்
துடித்தது.
இப்படி
அவள்
சிந்தனைப்
புயலில்
திணறிக்
கொண்டிருந்தபோது
ஓர்
ஒலி
அவள்
காதில்
விழுந்தது.
கூர்ந்து
கவனித்தாள்.
ஆம்;
அவளுக்குத்
தெரிந்த
ஒலி.
நள்ளிரவில்
அவளை
நாடி
வரும்
தலைவன்
குறிப்பாக
இப்படி
ஓர்
ஒலியை
எழுப்புவான்.
அந்தச்
சங்கேத
ஒலிதான்
அது.
அவள்
இதுகாறும்
எண்ணி
எண்ணி
ஏங்கி
மனம்
புண்ணானதற்கு
மாற்று
மருந்தாக
உதவும்
ஒலி
அது.
அந்த
ஒலியை
அருகிலே
படுத்திருந்த
தோழியும்
கேட்டாள்.
அவளுக்கும்
அந்த
ஒலி
எங்கிருந்து
வருகிற
தென்று
தெரியும்.
அந்த
இளங்
காதலர்கள்
நடத்திய
களவுக்
காதலுக்கு
அவள்தானே
துணை?
அவளையே
கொழு
கொம்பாகப்
பற்றிக்
கொண்டு
அந்த
அழகிளங்கொடி
காதலன்மேல்
படர்ந்தது.
நள்ளிரவில்
காதலியைச்
சந்திக்கக்
காதலன்
வந்து
விட்டான்.
தான்
வந்திருப்பதை
அவன்
இந்த
ஒலியால்
புலப்படுத்தினான்,
தோழியும்
தலைவியும்
அதைக்
கேட்டார்கள்.
செவிலியும்
தாயும்
கேட்டார்களோ?
இல்லை;
அவர்கள்
நன்றாகக்
குறட்டைவிட்டுத்
தூங்கினார்கள்.
அதைத்
தெரிந்து
கொள்ளவேண்டுமல்லவா?
தோழி
மெல்ல, ”என்ன
இது?
புறக்
கடைத்
தோட்டத்துக்
கிணற்றில்
ஏதோ
விழுந்து
விட்டதுபோல்
இருக்கிறதே!"
என்று
குரல்
கொடுத்தாள்.
தலைவி,
’தெரியவில்லையே!’
என்றாள்.
வேறு
யாரும்
பேசவில்லை.
யாவரும்
துரங்குகிறார்கள்
என்பதை
அறிந்த
தலைவியும்
தோழியும்
மெல்ல
எழுந்தார்கள்.
தோழி
தலைவியை
அழைத்துச்
சென்றாள்.
வழக்கம்
போல்
தலைவி
தன்
காதலனைச்
சந்தித்தாள்.
பகல்
நேரமெல்லாம்
அவள்
பட்ட
பாட்டை
அந்த
முருகனே
அறிவான்.
தன்
காதலன்
வருவானோ,
வரமாட்டானோ
என்று
ஏங்கித்
தவித்தாள்.
அந்தத்
தவிப்பைப்
தெரிந்து
கொண்டவனைப்போல
அவன்
அன்றே
வந்து
விட்டான்.
என்ன
வியப்பு.
அவன்
மார்பில்
சந்தன
மணம்
வீசியது.
மலைச்சாரற்
பிளப்பில்
எழுந்து
வளர்ந்து
செறிந்த
பலவகையான
மலர்களைச்
சூடிக்கொண்டிருந்தான்.
அந்த
மலர்களின்
மணம்
வண்டுகளைக்
கூட்டியது.
தன்
காதலியை
நாடி
அந்த
நள்ளிரவில்
வந்தான்.
அவனுடைய
உடம்புதான்
எவ்வளவு
வலிமை
உடையது!
வேங்கைப்
புலிபோல
இருந்தான்.
யானையை
இரையாக
உண்ணுவதற்குக்
காட்டில்
புலி
நடமாடும்.
தன்
கூரிய
பார்வையை
நாற்புறமும்
செல்லவிட்டுத்
தான்
நடக்கும்
ஒலி
கேளாதபடி
ஒளிந்து
நடக்கும்.
அப்படித்தான்
அவனும்
மறைந்து
மறைந்து
வந்தான்.
அந்த
ஊரைக்
காக்கும்
காவலர்
இரவு
முழுவதும்
விழித்திருப்பார்கள்.
அந்தக்
காவலர்களுக்கும்
தெரியாமல்
அவன்
தன்
அருமைக்
காதலியைச்
சந்திக்க
வந்திருத்தான்.
அந்த
இளம்
பெண்
அவனையே
நினைந்துகொண்டிருந்தாள்;
தூக்கம்
வராமல்
புரண்டு
கொண்டிருந்தாள்.
அவளுடைய
வேதனையைப்
போக்குவதற்கு
அவன்
வந்து
விட்டான்.
காதலி
காதலனைக்
கண்டாள்.
காலையிலே
நடந்த
அமர்க்களத்தினால்
ஏங்கியிருந்த
அவளுக்கு
நெடுநாள்
பாராமல்
பார்த்ததுபோன்ற
உணர்ச்சி
எழுந்தது.
தலைவன்
வந்து
இறுகப்
புல்லினான்.
அவள்
உடம்புக்கு
இனித்தது
என்ற
சொல்வது?
உள்ளம்
குளிர்ந்தது
என்று
சொன்னால்
போதுமா?
அவள்
உயிரே
குளிர்ந்தது;
தழைத்தது.
அன்று
வராமல்
இருந்தால்
அவள்
பறித்துப்போட்ட
தளிரைப்
போல
வாடிக்கிடப்பாள்.
வாடின
பயிருக்கு
மழை
போலவும்
பசித்த
வயிற்றுக்கு
உணவு
போலவும்
அவன்
வந்து
முயங்கினான்.
அப்போது
அவள்
உள்ளம்
பூரித்தது;
உடல்
பூரித்தது.
அவனுடைய
முயக்கம்
கனவோ
என்று
சிறிதே
ஐயம்
தோன்றியது.
கையால்
அவன்
திருமேனியைப்
தடவிப்
பார்த்தாள்.
அவன்
அவளைத்
தழுவியிருந்தது
முக்காலும்
உண்மை,
பகலில்
நடந்த
கேலிக்கூத்து
அவள்
நினைவுக்கு
வந்தது.
அடேயப்பா
அந்தப்
பூசாரி
போட்ட
ஆட்டம்
அவளுடைய
நோய்க்கு
அவனா
மருந்து
சொல்கிறவன்?
அவள்
உடம்பு
துரும்பாக
இளைக்கும்
நோயைத்
தணிக்கும்
காதலன்
இதோ
முன்னே
நின்றான்.
அவன்
வந்து
போகிற
செய்தியைப்
பூசாரி
உணரவில்லை.
பூசை
போட்டு
ஆரவாரம்
செய்த
அவனுக்கு
இந்த
இரகசியம்
புலனாக
வில்லை.
அவள்
என்ன
ஆகுமோ
என்று
நடுங்கினாள்;
இரகசியம்
வெளிப்பட்டுவிடுமோ
என்று
அஞ்சினாள்.
நடுங்கவும்
அஞ்சவும்
காரணமே
இல்லை.
பூசாரி
எதையோ
உளறினான்.
அவளுக்கு
மருந்துதவும்
ஆருயிர்
மருத்துவன்
இதோ
இருக்கிறான்.
அவனைப்பற்றியும்
அவனுடன்
ஒட்டி
யிணைந்த
உறவுபற்றியும்
வேலன்
அறியவில்லை.
காதலன்
வரவு
சிறிதுகூட
அவனுக்குத்
தெரியவில்லை.
பைத்தியக்
காரன்!
பயனில்லாமல்
ஆட்டம்
போட்டான்!
இதை
எண்ணியபோது
காதலிக்குச்
சிரிப்பு
வந்து
விட்டது;
வாய்விட்டே
சிரித்தாள்.
"ஏன்
சிரிக்கிறாய்?”
என்று
தலைவன்
கேட்டான்.
”ஒன்றும்
இல்லை”
என்று
அவள்
முதலில்
சொன்னாள்.
பிறகு
அவன்
வற்புறுத்திக்
கேட்கவே,
அவள்
தாய்
வெறி
யாட்டெடுத்த
விந்தையைச்
சொன்னாள்,
அதைக்கேட்டு
அவனும்
புன்முறுவல்
பூத்தான்.
ஆணுல்
அவன்
ஒரு
தீர்மானமும்
செய்துகொண்டான். "இப்படியெல்லாம்
இவளை
வேதனை
அடையும்
படி
செய்யக்கூடாது.
இவளை
மணப்பதற்கு
ஆவன
செய்யவேண்டும்”
என்று
முடிவு
செய்தான்.
இந்த
நிகழ்ச்சியை
இப்போது
தலைவி
தன்
தோழிக்கு
எடுத்துச்
சொன்னாள்.
"என்
வேதனை
நீங்கும்
வண்ணம்
அன்றைக்கே
வந்து
அருள்
செய்தாரே!
நிகழ்ந்ததை
நான்
சொல்லக்
கேட்டு
என்னை
இத்தகைய
இடர்ப்பாட்
டில்
சிக்க
வைக்கக்
கூடாதென்றுதானே
போயிருக்கிறார்?
இத்தகைய
அன்புடையவரை
நீ
குறை
கூறலாமா?"
என்று
கூறி
நிறுத்தினாள்.
தோழி
மேலே
ஒன்றும்
பேசவில்லை.
தலைவி
கூற்றாஅக
வருவது
பின்வரும்
பாடல்.
அணங்குடை
நெடுவரை
உச்சியின்
இழிதரும்
கணங்கொள்
அருவிக்
கான்கெழு
நாடன்
மணம்கமழ்
வியன்மார்பு
அணங்கிய
செல்லல்
இதுஎன
அறியா
மறுவரற்
பொழுதில்
’படியோர்த்
தேய்த்த
பல்புகழ்த்
தடக்கை
5
நெடுவேள்
பேணத்
தனிகுவள்
இவள்’
என
முதுவாய்ப்
பெண்டிர்
அதுவாய்
கூறக்
களம்நன்கு
இழைத்துக்
கண்ணி
சூட்டி
வளநகர்
சிலம்பப்
பாடிப்
பலிகொடுத்து
உருவச்
செந்தினை
குருதியொடு
தூஉய்
10
முருகாற்றுப்
படுத்த
உருகெழு
நடுநாள்,
ஆரம்
நாற
அருவிடர்த்
தகைந்த
சாரற்
பல்பூ
வண்டுபடச்
சூடிக்
களிற்றிரை
தெரீஇய
பார்வல்
ஒதுக்கின்
ஒளித்தியங்கு
மரபின்
வயப்புலி
போல
15
நன்மனை
நெடுநகர்க்
காவலர்
அறியாமை
தன்கசை
உள்ளத்து
நம்நசை
வாய்ப்ப
இன்னுயிர்
குழைய
முயங்குதொறும்
மெய்ம்மலிந்து
நக்கனென்
அல்லனோ
யானே?
எய்த்த
நோய்தணி
காதலர்
வரவுஈண்டு
20
ஏதில்
வேலற்கு
உலந்தமை
கண்டே.
[ (தோழி)
தெய்வத்தை
உடைய
உயர்ந்த
மலையின்
உச்சியிலிருந்து
விழும்
ஊற்றுக்
கூட்டங்களைக்
கொண்ட
அருவியினால்
வளர்ந்த
காடுகள்
பொருந்திய
நாடனாகிய
தலைவனது,
நன்மணம்
கமழும்
அகன்ற
மார்பு
வருத்தியதனால்
உண்டான
துன்பம்
இது
என்று (செவிலியும்
தாயும்)
அறியாத,
மனஞ்சுழலும்
சமயத்தில்,
பகைவர்களை
அழித்த
பலவகையான
புகழ்களையும்
பரந்த
கைகளையும்
உடைய
நெடிய
முருகவேளை
வழிபட
இவள்
(நோய்)
தனி
வாள்
என்று
முதுமையான
வாயையுடைய
பெண்டிர்
அதுவே
உண்மையாகக்
கூற,
(அதைக்
கேட்ட
தாய்மார்
வேலனைக்
கொண்டு)
வெறியாடும்
களத்தை
நன்றாக
அமைத்து
முருகனுக்குக்
கண்ணியைச்
சூட்டி
வளப்பமுடைய
கோயிலில்
எதிரொலிக்கும்படி
பாடச்செய்து,
பலியைக்
கொடுத்து
அழகிய
சிவந்த
தினையை
இரத்தத்
தோடு
தூவி
முருகனை
வழிப்படுத்தி
வருவித்த
அச்சம்
நிரம்பிய
நடு
யாமத்தில்,
சந்தனம்
மணம்
வீச
அரிய
மலைப்
பிளப்பிலே
தழைத்துப்
பூத்த
மலைச்சாரலுக்குரிய
பலவகை
மலர்களை
வண்டுகள்
மொய்க்கும்படி
தலையில்
அணிந்து,
யானையாகிய
இரையைத்
தேடிய
பார்வையையும்
நடையையும்
ஒளித்து
இயங்கும்
வழக்கத்தையும்
வலிமையையும்
உடைய
புவியைப்போல,
நல்ல
மனைகளையுடைய
நீண்ட
ஊரைக்
காக்கும்
காவலர்
அறியாமல்,
தன்னை
விரும்பும்
விருப்பத்தை
உடைய
உள்ளத்தைப்
பெற்ற
நம்முடைய
விருப்பம்
நிறைவேறும்படியாக,
இனிய
உயிர்
வாடாமல்
தளிர்க்கும்
படி
(தலைவர்)
அனையுந்தோறும்,
உடம்பு
பூரித்துச்
சிரித்தேன்
அல்லனோ
யான்,
என்
உடம்பு
இளைத்தற்குக்
காரணமான
காமநோயைத்
தணிக்கும்
காதலரின்
வரவு
இங்கு
அயலானாகிய
வேலனுக்குத்
தெரியாமற்
போனதைக்
கண்டு?
நாடன்
(2) மார்பு
அணங்கிய
செல்ல்லை
(3) அறியா
மறுவரற்
பொழுதில்
(4), எனப்
பெண்டிர்
கூற
(6-7),
இழைத்து,
சூட்டி,
பாடி,
கொடுத்து,
தூஉய்,
ஆற்றுப்
படுத்த
நடுநாள்
(8-11),
நாற,
வாய்ப்ப,
குழைய,
முயங்கு
தொறும்
மலிந்து
(12-18),
யான் (19),
வரவு
உலந்தமை
கண்டு
(20-21),
நக்கனென்
அல்லனோ?
(19) என்று
கூட்டிப்
பொருள்
கொள்ளவேண்டும்.
1.
அணங்கு-தெய்வம்,
நெடுவரை-உயர்ந்த
மலை,
2.
கணம்-தொகுதி,
ஊற்றுக்
கால்களின்
தொகுதி.
கான்-காடு.
3.
வியன்
மார்பு
- அகன்ற
மார்பு.
அணங்கிய
– வருத்திய,
செல்லல்-துன்பம்.
மார்பை
அணையாமல்
அதையே
நினைந்து
வருந்தினாளாதலின்
இவ்வாறு
கூறினாள்.
4.
மறுவரல்-சுழற்சி;
இங்கே
மனக்கலக்கம்.
5.
படியோர்-பகைவர்;
"படியோர்
என்றது
பிரதியோர்
என்னும்
வடமொழித்
திரிவு"
என்பது
பழைய
உரை. “பல்புகழ்-வென்றியும்
தியாகமும்
முதலாயினவற்றான்
ஆய
புகழ்” (பழைய
உரை.)
6.
நெடுவேள்-முருகன்.
தணிகுவள்-நோய்
நீங்குவாள்.
7.
முதுவாய்ப்
பெண்டிர்-முதிய
வாயையுடைய
பெண்டிர்.
"முதுவாய்
பெண்டிர்”
என்பதும்
ஒரு
பாடமாக
இருத்தல்
கூடும்.
அப்
பாடத்துக்கு "அறிவு
வாய்ந்த
பெண்கள்"
என்று
பொருள்
கொள்ளவேண்டும்.
அது
வாய்கூறஅதை
மெய்யாகச்
சொல்ல;
வாய்-உண்மை.
8.
களம்-வெறியாடும்
களம்,
இழைத்து-அமைத்து.
சூட்டி-தலையில்
அணிந்து;
’சூட்டி-சூட்டர்
என்றது
வேலிற்கு;
அவ்வேலன்
முருகனை
இங்ஙனம்
ஆற்றுப்
படுத்தான்
என்க’
(பழைய
உரை.)
9.
நகர்
-கோயில்;
ஊருமாம்.
சிலம்ப
- எதிரொலி
செய்ய,
பலி
-
ஆட்டுப்பலி.
கடவுளுக்கு
நிவேதனம்
செய்யும்
எல்லாப்
பொருளுமே
பலி
என்று
சொல்லப்பெறும்.
10.
உருவம்-அழகு.
தூஉய்-தூவி,
11.
முருகு
ஆற்றுப்படுத்த-முருகனை
வருவித்த,
ஆற்றுப்படுத்த-வரும்
வழிகாட்டி
அழைத்து
வந்த,
’அவ்
வேலன்
முருகனை
இங்ஙனம்
செய்து
ஆற்றுப்படுத்தான்’
என்க.
ஆற்றுப்படுத்தல்-மனையிற்கொண்டு
புகுதல்
பழைய
உரை.)
உருகெழு-அச்சத்தை
உடைய.
நடுநாள்
-
நள்ளிரவில்.
ஆற்றுப்படுத்தின
நாளின்
இரவில்,
12.
ஆரம்-சந்தனம்.
விடர்-மலைப்
பிளப்பு.
த்தைந்த
-தழைத்த.
13.
சாரல்-மலைச்சாரல்.
பட-மொய்க்க.
14.
களிற்றிரை-களிறாஅகிய
இரையை.
தெரீஇய
- தேர்ந்த;
நாடிய.
பார்வல்-பார்வை,
ஒதுக்கின்-நடத்தலை
யுடைய.
15.
ஒளித்து
இயங்கும்
மரபின்-மறைந்து
இயங்கும்
வழக்கத்தையுடைய;
வய-வலிமை,
16.
நகர்-ஊர்.
அறியாமை-அறியாமல்.
17.
தன்
நசை
உள்ளம்-தன்னை
நச்சு
தலையுடைய
உள்ள
மென்று
உள்ளத்திற்கு
அடை.
அதில்
நம்
நசை
யென்றது
வேட்கையை.
நசை-விருப்பம்.
வாய்ப்ப-நிறை
வேற.
18.
குழைய-தளிர்க்க.
மெய்
மலிந்து-உடல்
பூரித்து.
19.
நக்கனென்-சிரித்தேன்;
வேலனுடைய
பேதைமையை
நினைந்து
சிரித்தாள்.
எய்த்த-இளைப்பதற்குக்
காரணமாகிய,
20.
நோய்-காம
நோய்.
வரவு:எழுவாய்.
21.
ஏதில்வேலன்-அயலானாகிய
பூசாரி,
உலந்தமை
- தப்பியமை;
அறியப்படாமை.
’வரைவிடை
வைத்துப்
பிரிந்த
காலத்துத்
தலைமகள்
ஆற்றாளாகத்
தோழி
தலைமகனை
இயற்
பழிப்பத்
தலைமகள்
இயற்பட
மொழிந்தது’
என்பது
இந்தப்
பாடலின்
துறை.
"திருமணம்
செய்வதைக்
காரணமாக
வைத்து
அதற்குரிய
பொருளை
ஈட்டுவதற்குத்
தலைவன்
பிரிந்த
காலத்தில்,
அவன்
பிரிவைத்
தலைவி
தாங்காமல்
வருந்த,
அது
கண்ட
தோழி
தலைவனுடைய
இயல்பைப்
பழித்துக்
கூற,
அது
கேட்ட
தலைவி
அவன்
இயல்பு
பொருத்தமானதென்று
எடுத்துக்
காட்டியது”
என்பது
இதன்
பொருள்.
’நான்,
வருவானோ
வாரானோ
என்று
அஞ்சியிருக்கும்
போது
வெறியாட்டு
நிகழ்ந்த
அன்றே
வந்து
அன்பு
காட்டின
பெருமை
உடையவன்;
என்
அச்சத்தை
உணர்ந்து
திருமணம்
செய்து
கொள்ள
முந்தியவன்'
என்று
அவன்
மேல்
பழி
சாராவாறு
அவனுடைய
நல்வியல்புகளைத்
தலைவி
எடுத்துரைத்தாள். "வெறியெடுத்துத்
தீராத
வழியில்,
அஃது
யாராலே
வந்ததென்று
அயிராத
படி
வரைய
வந்த
பேருதவியினுரைப்
பொல்லாங்கு
சொல்லக்
கடவையோ?
என
இயற்பட
மொழிந்தது?”
என்பது
பழைய
உரையாசிரியர்
கூறும்
விளக்கம்.
தலைவனுடைய
இயலைத்
தவறாகக்
கூறுதலை
இயற்
பழித்தல்
என்று
கூறுவர்.
அவன்
செயலுக்குச்
சமாதானம்
கூறி
அவன்
நல்லவன்
என்பது
தோன்றக்
கூறுதலை
இய,
பட
மொழிதல்
என்பர்.
இந்தப்
பாடலைப்
பாடிய
புலவர்
வெறி
பாடிய
காம
கண்ணியார்.
அவர்
பெண்
புலவர்
என்று
தோன்றுகிற
இந்தப்
பாட்டில்
வெறியாடும்
களச்
இழைத்து
வேல்
முருகனை
வழிபட்ட
செய்தியை
அழகாகச்
சொன்னமையால் “வெறி
பாடிய”
என்ற
சிறப்பு
அப்புலவர்க்கு
அமைந்தது.
குறிஞ்சி
நில
மக்கள்
பூசாரியாகிய
வேலனையும்
பூசாரிச்சியாகிய
குறமகளையும்
கொண்டு
முருகனை
வழிபடுவது
வழக்கம்.
திருமுருகாற்றுப்படையில்
முருகனை
ஆற்றுப்படுத்தும்
நிகழ்ச்சியைப்
பின்வரும்
அடிகள்
விரி
துரைக்கின்றன.
”மதவலி
நிலைஇய
மாத்தாட்
கொழவிடைக்
குருதியொடு
விரைஇய
தூவெள்
ளரிச்
சில்பலிச்
செய்து
பல்பிரப்
பிரீஇச்
சிறுபசு
மஞ்சளொடு
நறுவிரை
தெளித்துப்
பெருந்தண்
கணவீர
நறுந்தண்
மாலை
துனையற
அறுத்துக்
தூங்க
நாற்றி
நளிமலைச்
சிலம்பின்
நன்னகர்
வாழ்த்தி
நறும்புகை
எடுத்துக்
குறிஞ்சி
பாடி
இமிழிசை
அருவியொடு
இன்னியம்
கறங்க
உருவப்
பல்பூத்
தூஉய்
வெருவரக்
குருதிச்
செந்தினை
பரப்பிக்
குறமகள்
முருகியம்
கிறுத்து
முரணினர்
உட்க
முருகாற்றுப்
படுத்த
உருகெழு
வியனகர்
ஆடுகளம்
சிலம்பப்
பாடிப்
பலவுடன்
கோடுவாய்
வைத்துக்
கொடுமணி
இயக்கி
ஓடாப்
பூட்கைப்
பிணிமுகம்
வாழ்த்தி
வேண்டுநர்
வேண்டியாங்கு
எய்தினர்
வழிபட”
இந்த
அகநானுற்றுப்
பாடலிலும்
திருமுருகாற்றுப்
படைப்
பகுதியிலும்
சொல்லப்
பெறும்
முருக
பூசையில்
பல
செய்திகள்
பொதுவாக
இருத்தலைக்
காணலாம்.
இப்பாட்டில்
அணங்குடை
நெடுவரை,
சாரல்
என்பன
குறிஞ்சித்
திணைக்குரிய
நிலம்.
உருகெழு
நடுநாள்
என்பது
அதற்குரிய
காலம்,
இவை
இரண்டும்
முதற்
பொருள்.
1.
மிக்க
வலிமை
நிலைபெற்ற
பெரிய
காலையுடைய
கொழுத்த
ஆட்டுக்கிடாயின்
இரத்தத்தோடு
கலந்த
தூய
வெள்ளையரிசியைச்
சிறு
பலியாக
இட்டு,
பல
தானியக்
கூடைகளை
வைத்து,
பசிய
சிறிய
மஞ்சள்
நீரோடு
மணமுடைய
பண்டங்களைத்
தெளித்து,
தன்மையையுடைய
அலரியின்
மணமுடைய
மாலையை
அளவு
சரியாக
இருக்கும்
படி,
நறுக்கி,
எங்கும்
தொங்கப்படி
அலங்கரித்து,
மணமுடைய
தூபம்
எடுத்துக்
(குறிஞ்சிப்
பண்ணைப்
பாடி,
ஒலிக்கின்ற
இசையையுடைய
அருவியின்
ஓசையோடு
இனிய
வாத்தியங்கள்
முழங்க,
பல
நிறங்களையுடைய
மலர்களைத்
தூவி,
யாரும்
அஞ்சும்படி
மிகச்
சிவந்த
தினையைப்
பரவ
வைத்து,
குறமகளாகிய
பூசாரிச்சி
முருகனுக்குரிய
துடியையும்
தொண்டகப்
பறையையும்
வாசிக்கச்
செய்து,
தெய்வம்
இல்லை
யென்பவரும்
அஞ்சும்படியாக
முருகனை
வருவித்த
அழகையுடைய
விசாலமான
கோயிலில்,
வெறியாடும்
இடம்
எதிரொலிக்கும்படி
பாடி,
பலவாகிய
கொம்புகளை
ஒருங்கே
ஊதி,
வளைந்த
மணியை
அடித்து,
ஓடாத
வீரத்தையுடைய
முருகனுடைய
வாகனமாகிய
பிணி
முகம்
என்னும்
யானையை
வாழ்த்தி,
வேண்டியவர்கள்
வேண்டியபடி
யெல்லாம்
வந்து
முருகனை
வழிபட.
நெடுவேளாகிய
தெய்வமும்,
நாடன்
ஆகிய
தலைவனும்,
அருவியாகிய
நீர்
நிலையும்,
தினையாகிய
உணவும்,
ஆரமாகிய
மரமும்,
சாரற்
பல்பூ
வாகிய
பூவும்,
களிறு
வயப்புலி
ஆகிய
விலங்குகளும்,
நன்மனை
நெடு
நகராகிய
ஊரும்
வெறியாட்
டெடுத்தலாகிய
தொழிலும்
வந்தன.
இவை
கருப்
பொருள்.
முயங்குதொறும்
என்பதனால்
புணர்ச்சியாகிய
உரிப்
பொருள்
கூறப்பெற்றது.
அகநானூற்றில் 22-ஆம்
பாட்டு
இது.
-------------
|